9 TH STD ANNUAL EXAM TAMIL ANSWER KEY RANIPET DIST

 


(இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,வேலூர்,நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் என்பதால் இதே விடைக்குறிப்பைப் பயன்படுத்தலாம்)

இராணிப்பேட்டை - முழு ஆண்டுத்தேர்வு விடைக்குறிப்புகள்  2025-2026

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம்தமிழ்     

விடைக்குறிப்புகள்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                             மதிப்பெண் : 100

பகுதி – 1 / மதிப்பெண்கள் - 15

வி.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

. மலையாளம்

1

 

2.

. ஓடி வா, ஓடி வா

1

 

3.

. பக்கம்

1

 

4.

. வளர்க

1

 

5.

. எந்த ஓவியம்?

1

 

6.

. தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

1

 

7.

4) ஆ மட்டும் சரி

1

 

8.

. கடல் நீர் 

1

 

9.

. ஏமாங்கத நாடு  

1

 

10.

. பிறப்பு

1

 

11.

. , , இ அனைத்தும்

1

 

12.

. குடும்ப விளக்கு

1

 

13.

. பண்படாத நிலம்

1

 

14.

. பாரதிதாசன்

1

 

15.

. கல்வி - நல்லறிவு

1

 

பகுதி – 2 / பிரிவு - 1

16.

, ஆ ஆகிய வினாக்களுக்குப் பொருந்திய வினாத்தொடர் அமைத்திருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

 

17.

தமிழ், கன்னடம், மலையாளம், துளுவம்

1

 

18.

·        மாடு பிடித்தல்

·        மாடு அணைதல்

·        மாடு விடுதல்

·        மஞ்சுவிரட்டு 

·        எருது கட்டி

·        சல்லிக்கட்டு

2

 

19

·        கல்வியறிவு பெற்ற பெண்கள் நன்செய் நிலத்தினைப் போன்றவர்கள்.

·        அவர்கள் மூலம் சிறந்த அறிவுடைய மக்கள் உருவாகின்றனர்.

·        எனவே பெண்களுக்குக் கல்வி அவசியம்

2

 

20.

    எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி, அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவு ஆகும்

2

 

21

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனின்

உழந்தும் உழவே தலை

2

 

பகுதி – 2 / பிரிவு - 2

22

. அகவும் மயிலும், அலறும் ஆந்தையும், கூவும் சேவலும், போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்.

. கோழிக்குஞ்சுகளைப் பிடிக்க பூனைக்குட்டிகள் ஓடின.

2

 

23

. எழுத்துரு   . இந்திய தேசிய இராணுவம்

2

 

24

. வளர்தமிழ், விரிவானம் ஆ. குளிர் காற்று, வளர்தமிழ்

2

 

25.

. துன்பம்   . கொடுத்தல்

2

 

26.

. பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்

. துன்பத்தைப் பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான்

2

 

27.

பூக்கும் = பூ+க்+க்+உம்

பூபகுதி , க்சந்தி , க்எதிர்கால இடைநிலை, உம்பெயரெச்ச விகுதி

2

 

28.

. இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்

. நேற்று தென்றல் காற்று வீசியது.

2

 

பகுதி – 3                                            பிரிவு - 1

29

·        # மக்கள் வாழ்வு அகம்,புறம் எனப் பிரிக்கப்பட்டது

·        இலக்கிய விதிகளைப் பற்றி இலக்கண நூல்கள் கூறின.

3

 

30

. கல்வி, வேலைவாய்ப்பு ஆ. பெண்கள்  . கைம்பெண்கள்

3

 

31.

·        பயன்தரத்தக்க நற்செயலைச் செய்ய வேண்டும்.

·        முதலில் சினத்தை நீக்க வேண்டும்.

·        மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்.

·        நன்னெறியைப் போற்றிக் காக்க வேண்டும்.

3

 

பகுதி – 3                       பிரிவு - 2

32

·        தீயில் இட்ட சந்தன மரக்குச்சிகள்

·        அகில் கட்டை எரிவதால் எழும் மணம்

·        உலையிலிட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணம்

·        காந்தள் மலரின் மணம் ஆகியவற்றால் குறிஞ்சி நிலம் மணக்கிறது.

3

 

33.

·        ஔவையார்

·        வெண்ணிக் குயத்தியார்

·        வெள்ளி வீதியார்

·        ஒக்கூர் மாசாத்தியார்

·        அள்ளூர் நன்முல்லையார்

·        காவற்பெண்டு

3

 

34.

.

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள்

உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் 

)

ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக

போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக

நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக

காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே.

3

 

பகுதி – 3         பிரிவு - 3

35

·        'கார் அறுத்தான்'

·        கார் என்னும் காலத்தின் பெயர் அக்காலத்தில் விளைந்த பயிருக்கு ஆகி வருவதால் இது காலவாகு பெயர் ஆகும்.

3

 

36.

உவமை, உவனேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது உவமை அணி

3

 

37

சீர்

அசை

வாய்பாடு

மிகுதியான்

நிரை+நிரை

கருவிளம்

மிக்கவை

              நேர்+நேர்             

தேமா

செய்தாரைத்

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

தாம்தம்

              நேர்+நேர்             

தேமா

தகுதியான்

நிரை+நிரை

கருவிளம்

வென்று

              நேர்+நேர்             

தேமா

விடல்

நிரை

மலர்

3

 

பகுதி – 4

38

·        தன்னைத் தோண்டுபவரை தாங்கும் நிலம்போல தன்னை இகழ்பவரைப் பொறுப்பது தலைசிறந்தது

·        பிறர் தனக்கு தரக்கூடாத துன்பங்களை தந்தாலும் மனம் நொந்து அறம் அல்லாத செயல்களை செய்யாமல் இருப்பதே நன்றாகும்.

·        செருக்கினால் துன்பம் தந்த வரை நம்முடைய பொறுமையால் வெல்ல வேண்டும்.

5

 

ü  ஊர்களில் ஆயிரம் வகை உணவுகள் கிடைக்கின்றன.

ü  உணவளிக்கும் அறச்சாலைகள் ஆயிரம் உள்ளன.

ü  மகளிர் ஒப்பனை செய்யும் மணிமாடங்கள் ஆயிரம் உள்ளன.

ü  அங்கு நிகழும் திருமணங்கள் ஆயிரமாக உள்ளன.

ü  தொழில் செய்யும் கம்மியர்கள் ஆயிரம் பேர் உள்ளனர்.

5

 

39

. உரிய விடை எழுதியிருப்பொன் மதிப்பெண் வழங்குக

5

 

39

அ, .    அனுப்புநர்-1/2 மதிப்பெண் , பெறுநர்-1/2 மதிப்பெண் , ஐயா,பொருள்-1 மதிப்பெண் , இடம்,நாள்-1/2 மதிப்பெண் , உறைமேல் முகவரி-1/2 மதிப்பெண் ,கடிதத்தின் உடல்-2 மதிப்பெண்.

5

 

40

      ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

      என்னை எழுது என்று

      சொன்னது இந்த காட்சி

      இது அர்த்தமுள்ள காட்சி

      விழிப்புணர்வுக்கான காட்சி    ( மாதிரி)

5

 

41

1 .Every tower is a sout blossoming in nature-Gerant De Nerval

  ஒவ்வொரு மாரும் இயற்கையாக மலரும்போது சிறப்பினைப் பெறுகிறது.

2. Sunset is still my favourite colour, and rainbow is second- Mattle Stepanek

சூரியன் மறைவு நிறம் எனக்கு மிகவும்பிடித்த நிறமாகும்.வானவில்லின் அழகு இரண்டாவதாகப் பிடிக்கும்.

3 A nation's culture resides in the hearts and in the soul of its people Mahatma Gandhi

    நம் நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும்.

4. The biggest problem is the lack of love and charity Mother Teresa

   அன்பு செலுத்துதல், தர்மம் செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய பிரச்சனையாய் உள்ளது.

5

 

42

உரிய படிவத்தைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

5

 

 

பகுதி – 5

 

 

43 .

·        திருநாட்டில் காவிரி வளத்தைத் தருவதற்காக கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது.

·         வயல்களில் களை எடுக்கும் உடைத்தியரின் கால்கள் சங்குகளால் இடருகின்றன.

·         குளங்களே கடல் போன்று காட்சியளிக்கின்றன

·        நீர்நிலைகளில் எருமைகள் விழுந்ததால் அச்சத்தில் வாளை மீன்கள் துள்ளி எழுந்து பாய்ந்தன

·        திருநாட்டில் நெற்கட்டுகளும் மீன்களும் முத்துக்களும் மலைபோல் குவிந்துள்ளன

·         பலவகை மரங்கள் திருநாடெங்கும் செழித்து வளர்ந்துள்ளன

8

 

முன்னுரை:
     நிலைத்த புகழுடைய கல்வியாலும் சாதனைகளாலும், பல தடைகளைத் தாண்டிப் பலபெண்மணிகள் சாதனை புரிந்த சிலரைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பண்டித ரமாபாய்:

·        இவர் சமூகத் தன்னார்வலர்.

·        பல தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர்.

·        பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர்,

ஐடாஸ் சோபியா:

·        தடைகளைத் தாண்டி மருத்துவம் கற்றார்,

·        தமிழகத்தில் வேலூர் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையை நிறுவியவர்.

மூவலூர் இராமாமிர்தம் :

·        தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி

·        தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற துணைநின்றவர்.

·        தமிழக அரசு மகளிர் திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கி வருகிறது.

சாவித்திரிபாய் பூலே :

இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர் ஆவார்.

மலாலா :
      பாகிஸ்தானில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, பெண் கல்வி வேண்டுமெனப் பன்னிரண்டு வயதிலே போராட்டக்களத்தில் இறங்கிய வீரமங்கை ஆவார்.

முடிவுரை :

இன்று பல்துறைகளிலும் சிறப்புற்று விளங்க, முன்பே வழிகாட்டிய இவர்கள் அனைவருமே சாதனைப் பெண்மணிகளே.

8

 

44.

.

முன்னுரை :
            “நாகலிங்கம்என்னும் இயற்பெயரைக் கொண்ட கந்தர்வன் அவர்கள் சமூக அவலங்கள், மானுட பிரச்சனைகளை மையமாகக் கொண்டு கதை புனைவதில் வல்லவர். “சாசனம்”, “ஒவ்வொருகல்லாய்”, “கொம்பன்முதலிய வரிசையில்தண்ணீர்சிறுகதையும் சமூக நிலையை எடுத்துக் காட்டும் கதையாக உள்ளது.

குடிநீரற்ற ஊரின் நிலை :
           பெண்கள் தலையிலும், இடுப்பிலுமாகக் குடங்களைக் கொண்டு பிலாப்பட்டி வரை சென்று ஊற, ஊற நீர் எடுத்து வரும் அவலநிலைதான் இருந்தது.

           பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன.

           எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு, கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக் கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவேதண்ணீர்கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை.

இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் :
         இப்படிப்பட்ட வறண்ட ஊருக்கு வரப்பிரசாதமாய், தினமும் வரும் பாசஞ்சர் இரயில் அமைந்தது. இரயில் 3 கி.மீட்டருக்கு முன்பே அருவமாய் எழுப்பும் ஊதல் ஒலி கேட்டு, மக்கள் ஓட்டமும் நடையுமாய் இரயில் நிலையம் செல்வர்.

         அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர் இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க ஓடுவார்கள்.

இந்திராவின் கனவு :
     அந்த ஊரில் இருந்த இளம்பெண் இந்திராவும், இக்கூட்டத்தில் ஒருத்தியாக நின்று, தன்னை வேறு ஓர் ஊரில் உள்ளவருக்குத்தான் திருமணம் பேசப் போவது போலவும், இந்த தண்ணியில்லா ஊரில் உள்ள எவனுக்கும் தலை நீட்டக் கூடாது என்றும் கனவு கண்டு கொண்டே இரயில் பெட்டிக்குள் நுழைந்தாள்.

இந்திரா தண்ணீர் பிடித்தல் :
            பயணிகள் இறங்குவதற்கு முன்பாகவே இந்திரா பெட்டிக்குள் பாய்ந்து, முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி வேக, வேகமாக அரைச் செம்பும், கால்செம்புமாக பிடித்துக் குடத்தில் ஊற்றினாள்,தொடர்ந்து  பிடித்துக் கொண்டே இருந்தாள் இரயில் நகர்ந்தது.

இந்திரா எங்கே :
        எல்லாம் பதற்றத்துடன் அண்ணான் வீடு, தம்பி வீடு, இராமநாதபுரம் பஸ்ஸில் ஏறி இரயில் நிலையம் சென்றபோது இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் ஈ, எறும்பு கூட இல்லை . குடத்துடன் ஒரு பெண் வந்தாளா என்று அறிந்த, தெரிந்த இடம் பூராவும் தேடியும் இந்திரா எங்கும் கிடைக்கவில்லை.

தாயின் துயரம் :
        “எம் புள்ள தண்ணி புடிக்கப் போயி எந்த ஊரு தண்டவாளத்துல விழுந்து கிடக்கோஎன அடக்க முடியாமல் ஓடினாள் இந்திராவின் தாய். ஊர் ஜனமும் பின்னால் ஓடியது. தாய் தண்டவாளத்திலே ஓட ஆரம்பித்தாள். தூரத்தில் புள்ளியாய் ஓர் உருவம் அதோ இந்திரா! ”பயபுள்ள, இத்தன மைலு இந்த தண்ணியையுமா சொமந்துகிட்டு வந்தஎன்று தந்தை கேட்டார்.”பின்ன! நாளைக்கு வரைக்கும் குடிக்க என்ன செய்ய?” என்று இந்திரா சொன்னாள்.

முடிவுரை :
       “உயிர் நீர்எனப்படும் தண்ணீர் தேவையை, அது இல்லா ஊரின் அவலத்தை இச்சிறுகதை மூலம் உணர்ந்த நாம்,  “நீர் மேலாண்மையை கட்டமைப்போம்  மழைநீர் சேகரிப்போம்.”

8

 

முன்னுரை:
       எது வறண்டு போனாலும் உலகில் தாய்மை வறண்டு போவது இல்லை. தாய்மை வழியே மனிதம் காக்கப்படுவதை சு. சமுத்திரம் அவர்கள் இக்கதையில் படைத்திருக்கும் ஏழைத் தாயின் வழி புலப்படுத்துகிறார்.

அன்பும் கண்டிப்பும் உடைய மனைவி:
     தூங்கிக் கொண்டிருக்கும் போது பேரிரைச்சலுடன் வந்த ஜீப் தன் மீதும் தன் கணவன் மீதும் மோதாமல் இருக்க தன் கணவனை உருட்டி விட்டு தானும் அங்கப்பிரதட்சணம் செய்வது போல் உருண்டு காப்பாற்றிய போது ஏழைத்தாய் அன்புடைய மனைவியாகிறாள்.
செல்வந்தன் தன் கைக்குக் கிடைத்த உணவு வகையறாக்களை அள்ளிப்போட்டு அவள் கணவனைத் தன் குடும்பத்தை நோக்கி நடக்கும்படி முதுகைத் தள்ளுகிறான். கையில் உணவுடன் வந்த கணவனைத் தன் கண்களால் இப்படி ஒரு பிழைப்பா என்று தன் தலையில் கைகளால் அடித்தபடியே அவனைத் தண்டிக்கிறார். இவ்வாறு கண்டிப்பும் அன்பும் கலந்து அந்த ஏழைத்தாய் வறுமையிலும் தன்மானம் உள்ளவளாகக் காணப்படுகிறாள்.

குழந்தைகளுக்குப் பரிமாறுதல்:
    குழந்தைகள் அம்மா வாதாடுவதைக் கோபமாய்ப் பார்த்தன. அதனைக் கண்ட தாய் அவர்கள் பசியில் இருப்பதைப் புரிந்துகொள்கிறாள். பசிமுள் அவள் வயிற்றைக் குத்தியது. சப்பாத்தியையும் வெஜிடபிள் பிரியாணியையும் கண்ட குழந்தைகள் காணாததைக் கண்டது போல் சுவைத்தார்கள் அவள் அனுதாபத்துடன் குழந்தைகளைப் பார்த்து, இப்போ இப்படிச் சாப்டுகிறீர்கள் ராத்திரி என்ன செய்வீர்கள்? என்று உள்ளத்துள் வருந்துவதால் அன்புத்தாய் ஆகிறாள்.

மனிதநேயம் புரிந்தாள்:
        அவள் சாப்பிட ஆரம்பித்தபோது உலர்ந்த தொண்டைக்குள் உணவு இறங்க மறுக்கிறது. உணவைக் கொடுத்தவர் தண்ணீரையும் கொடுத்து “உன்னைப் போல கஷ்டப்பட்ட ஒரு தாய்க்குத் தான் மகனாய் பிறந்தேன் உன்னை என் தாயாய் எண்ணி கொடுக்கிறேன்” என்ற போது அவர் உள்ளத்தில் உள்ள மனிதநேயத்தைப் புரிந்து கொள்கிறாள்.

நாய்க்குட்டிகளை விரட்டுதல்:
     சாப்பிடும் நேரத்தில் தொந்தரவு செய்த நாய்க்குட்டிகளைக் குரலிட்டபடியே கையைத் தூக்கி துரத்தினாள். ஒரு காலைத் தூக்கியபடியே ஓடின. நாய்க்குட்டி ஒலி எழுப்பியது.

சுவைத்து உண்டாள்:
     தட்டை குழந்தையைப் போல மடியில் வைத்துக்கொண்டு உணவை வாய்க்குள் போட்டாள். இவ்வளவு ருசியாய் அவள் சாப்பிட்டதாய் நினைவில்லை. உண்டு உண்டு அந்த சுவையில் சொக்கி லயித்துக்கொண்டிருந்தாள். நாயின் ஒலி அவளைச் சுண்டி இழுத்தது. பாசத்தில் பரிதவித்து ஓடுகிறாள்.

நாய் குட்டிகளுக்கும் தாயாகிறாள்:
          எச்சில் கையைத் தரையில் ஊன்றி எழுந்தாள். நாய்க்குட்டியை வாரி எடுத்தாள். அதன் முதுகைத் தடவினாள். மடியிலிட்டு தாலாட்டினாள். தட்டை தன் பக்கமாய் இழுத்தாள். உணவு சிறுசிறு கவளமாக உருட்டி நாய்க்குட்டிக்கு ஊட்டினாள். தட்டில் இருந்த உணவு குறையக்குறைய அவளது தாய்மை கூடிக்கொண்டே இருந்தது

முடிவுரை :   வறுமையிலும் அன்பு குறையாத மனிதநேயம் மாண்பு குறையாத மறையாத ஏழைத்தாயின் கதாபாத்திரத்தை நம் கண்முன் படைத்துக்காட்டி தாய்மைக்கு என்றும் வறட்சியில்லை என்பதைச் சு.சமுத்திரம் விளக்கி உணர்த்தியுள்ளார்.

8

 

45 .

                                                                                                                                           இயற்கையின் தாய்மடிஉதகை

         கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் உதகைக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன்.அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

      அரக்கோணம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து நீலகிரி விரைவு வண்டியில் முன்பதிவு செய்து,உதகமண்டலத்தின் அடிவாரமான மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தோம். பயணத்தின் தொடக்க அனுபவமே இனிய அனுபவமாக அமைந்தது.மறுநாள் விடியற்காலை 5.00 மணிக்கு தொடர்வண்டி மேட்டுப்பாளையத்தைச் சென்றடைந்தது.

      மேட்டுப்பாளையத்திலிருந்து,தமிழகத்தின் பெருமையான நீலகிரி மலை இரயில் மூலம் பயணிக்கத் தொடங்கினோம்.மலைகள்,கடுகள்,ஆறுகளைக் கடந்து, புகையைக் கக்கிக்கொண்டே அந்த தொடர்வண்டி சென்றது மெய்ம்மறக்கும் அனுபவமாக அமைந்தது.

     3 மணி நேரம் பயணத்திற்குப் பிறகு உதகமண்டலத்தை அடைந்தோம்.அங்கே நாங்கள் பார்த்த அரசு தாவரவியல் பூங்கா,மலர் கண்காட்சி,தொட்டபெட்டா சிகரம்,பைக்காரா நீர்வீழ்ச்சி,பைக்காரா படகு சவாரி,குன்னூர் உள்ளிட்ட இடங்கள் யாவுமே இன்று நினைத்தாலும் மெய்சிலிர்க்கக் கூடிய இடங்களாக அமைந்துள்ளன.

8

 

45. .

உரிய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

8

 

 

 பதிவிறக்கம் செய்ய

 

 

 

 


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை