முதல் திருப்புதல் தேர்வு-2025
கிருஷ்ணகிரி & நாமக்கல் மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
|
1. |
அ.
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
|
1 |
|
2. |
இ. உவமைத்தொகை |
1 |
|
3. |
ஆ, எழுவாய்த்தொடர் |
1 |
|
4. |
ஆ. வங்காள,
ஆங்கில |
1 |
|
5. |
இ. காசி
நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்
|
1 |
|
6. |
ஈ. இளவேனில் |
1 |
|
7. |
அ. திருப்பதியும்,
திருத்தணியும் |
1 |
|
8. |
ஈ. சிலப்பதிகாரம் |
1 |
|
9. |
இ. தும்பை |
1 |
|
10. |
அ. ஒரு சிறு
இசை |
1 |
|
11. |
இ. மூங்கில்
- கழை |
1 |
|
12. |
அ. கம்பராமாயணம் |
1 |
|
13. |
இ. கம்பர் |
1 |
|
14. |
ஆ. தோழமை ,
ஏழமை |
1 |
|
15. |
ஈ. பண்புத்தொகை |
1 |
பகுதி-2 பிரிவு-1
4X2=8
|
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
|
16 |
ü கிழக்கிலிருந்து வீசும்
காற்று –
கொண்டல் ü மேற்கிலிருந்து வீசும்
காற்று
– கோடை ü வடக்கிலிருந்து வீசும்
காற்று
– வாடை ü தெற்கிலிருந்து வீசும்
காற்று
- தென்றல் |
2 |
|
17 |
அ. தமிழ்ச்செம்மொழி
மாநாடு எங்கு, எப்போது நடைபெற்றது? ஆ. அதிவீரராம
பாண்டியன் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? |
2 |
|
18 |
முயற்சி , முயற்சி
இன்மை |
2 |
|
19 |
அடுத்தவர் மீதான
அக்கறை |
2 |
|
20 |
நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும் நூல்களையே வாங்குபவர்
ம.பொ.சி. |
2 |
|
21 |
அருமை உடைத்தென்
றசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். |
2 |
பிரிவு-2
5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
22 |
அ. கான்
அடை – காட்டைச் சேர் கான்
நடை – காட்டுக்கு நடத்தல் கால்நடை
– காலால் நடத்தல் ஆ. வரும் + தாமரை – வரும் தாமரை மலர் வருந்தா + மரை – துன்புறாத மான் வருந்து
+ ஆ + மரை – துன்புறும் பசுவும் மானும் |
2 |
|
23 |
அ,. மூன்று
+ தமிழ் - ௩ ஆ.
ஐந்து + திணை - ரு |
2 |
|
24 |
தணிந்தது
- தணி + த்(ந்) + த் + அ+து தணி
- பகுதி, த் - சந்தி த்(ந்)
-ந் ஆனது விகாரம் த்
- இறந்தகால இடைநிலை அ
- சாரியை, து
–படர்க்கை வினைமுற்று விகுதி |
2 |
|
25 |
அ. பண்பாடு ஆ. ஒப்பெழுத்து |
2 |
|
26 |
அ. தங்கக்கட்டி
ஆ. மீண்டும்(அ)திரும்பவும் இ. விடை ஈ. சமமாக |
2 |
|
27 |
ü தண்ணீர் குடி – தண்ணீரைக்குடி -இரண்டாம் வேற்றுமைத்தொகை ü தயிர்க்குடம் – தயிரை உடைய குடம் - இரண்டாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
2 |
|
28 |
அ. செயற்கையை
விட இயற்கை சிறந்தது ஆ. விதியால் வீதிக்கு வந்தான் |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
அ) நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ) கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ) பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ) வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ) பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. |
3 |
|
30 |
அ. தனித்து உண்ணாமை ஆ. அமிழ்தமே கிடைத்தாலும் தாமே
உண்ணாது பிறருக்கு கொடுப்பவர் இ. தமிழரின் விருந்தோம்பல் |
3 |
|
31 |
·
சங்க இலக்கியங்கள் காட்டும்
அறங்கள் மனித வாழ்வுக்குத் தேவையான நலன்களை உருவாக்குகின்றன. ·
இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில் நன்மை கிட்டும்
என எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும் என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன. ·
நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன.இக்கருத்து
இன்றைக்கும் பொருந்தக்கூடியது. ·
மேற்கூறிய காரணங்களால் சங்க
இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே. |
3 |
பிரிவு-2
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
|
32 |
ü குலேச
பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார்
இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன்
கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். தன்
தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான் |
3 |
|
|
33 |
ü உயிர்பிழைக்கும் வழி
அறியேன் ü உறுப்புகள் அறிவிற்குப்
பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன். ü உணவினத் தேடும் வழி
அறியேன் ü காட்டில் செல்லும்
வழி அறியேன் என்று கூறுகிறார். |
3 |
|
|
34 |
|
3 |
|
பிரிவு-3
2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
|
35 |
1.
பாடிக்
காட்டினார்
- வினையெச்சத்தொடர் 2.
கேட்டுப்
பாடினர்
- வினையெச்சத்தொடர் 3.
கேட்ட
பாடலில்
- பெயரெச்சத்தொடர் 4.
சிறுவினாக்களைக்
கேட்டார் -
வேற்றுமைத்தொடர் 5.
எழுதுபவருக்குப்
பரிசு
- வேற்றுமைத்தொடர் |
3 |
||||||||||||||||||||||||
|
36 |
ü
இக்குறளில் வஞ்சப் புகழ்ச்சி அணி பயின்று வந்துள்ளது. வஞ்சப் புகழ்ச்சி அணி: ஒரு செய்யுளில்
ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக
வருவது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும். அணிப்பொருத்தம் தேவர்கள்
தாம் விரும்பும் மேலான செயல்களைச் செய்தல் போல, கயவர்களும்
தாம் விரும்பும் கீழ்மையான செயல்களையே செய்வர். இக்குறளில்
தேவருக்கு நிகராகக் கயவரைப் புகழ்ந்து கூறி, பின் பழித்துக்
கூறுவதால் இது வஞ்சப்புகழ்ச்சி அணியாகும். |
3 |
||||||||||||||||||||||||
|
37 |
|
3 |
||||||||||||||||||||||||
பகுதி-4
5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||||||||||
|
38
அ |
ü விருந்தினராக ஒருவர்
வந்தால்,
அவரை
வியந்து உரைத்தல் ü நல்ல சொற்களை
இனிமையாகப் பேசுதல் ü முகமலர்ச்சியுடன்
அவரை நோக்குதல் ü 'வீட்டிற்குள்
வருக'
என்று
வரவேற்றல் ü அவர் எதிரில்
நிற்றல் ü அவர்முன் மனம்
மகிழும்படி பேசுதல் ü அவர் அருகிலேயே
அமர்ந்துகொள்ளுதல் ü அவர்
விடைபெற்றுச் செல்லும்போது வாயில்வரை பின்தொடர்ந்து செல்லல் ü அவரிடம்
புகழ்ச்சியாக முகமன் கூறி வழியனுப்புதல் (அல்லது) ஆ)
|
5 |
||||||||||||||||||
|
39 அ. |
உறவினருக்குக் கடிதம் 7,
திருத்தணி, 14-05-2024 அன்புள்ள அத்தைக்கு, நலம். நலமறிய ஆவல். எனது பள்ளியில் பள்ளித்திடலில் கிடைத்த
பணப்பையை உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தேன். அதற்காக எனது
தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் இறைவழிபாட்டுக் கூட்டத்தில்
என்னைப்பாராட்டி, பரிசு வழங்கினர். எனது
பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அந்த மகிழ்ச்சியைத் தங்களுடனும் பகிர விரும்புகிறேன். அதனாலேயே இக்கடிதத்தை எழுதினேன். நன்றி! இப்படிக்கு தங்கள்
அன்புள்ள
அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், திருத்தணி . பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்ப்பொழில் நாளிதழ், திருவள்ளூர்-1 ஐயா, பொருள்: கட்டுரையை
வெளியிட வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள்
நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த
கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இணைப்பு:
இப்படிக்கு, 1. கட்டுரை
தங்கள் உண்மையுள்ள, இடம் : திருத்தணி அ அ அ அ அ. நாள் : 04-03-2024 உறை
மேல் முகவரி:
|
5 |
||||||||||||||||||
|
40 |
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||||||||||
|
41 |
சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
||||||||||||||||||
|
42 |
அ) பொருந்திய விடையைப் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண்
வழங்குக ஆ) சங்க
கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான்
செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின்
பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை
சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே
தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது. |
5 |
||||||||||||||||||
பகுதி-5
3X8=24
|
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
|
43 |
அ. தமிழர்களின்
விருந்தோம்பல் முன்னுரை: விருந்தோம்பலை இல்லற வாழ்வின் முக்கிய அங்கமாகவே கொண்டு வாழ்ந்தனர்
சங்ககாலத் தமிழர்கள்.முன்பின் அறியாத முதியவர்களே விருந்தினர் என்று
தொல்காப்பியர் கூறியதை தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தனர். சங்க கால
தமிழர்களின் விரும்பபோல் பண்பிற்குச் சில சான்றுகளை இங்கே காண்போம். தனித்து உண்ணாமை: தனித்து
உண்ணாமை என்பது தமிழன் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை. அமிழ்தமே கிடைத்தாலும்
பிறருக்குக் கொடுக்கும் நல்லோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது என்று தமிழர்கள்
எண்ணினர். விருந்தோம்பலுக்கு நேரம்,காலம் இல்லை: விருந்தோம்பல் என்பது தமிழரின் சிறந்த பண்புகள் ஒன்றாகக்
கருதப்படுகிறது.நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும்
நல்லியல்பு தமிழருக்கு உண்டு. இதனை, ”அல்லில்
ஆயினும் விருந்து வரில் உவக்கும்” என்று நற்றிணை குறிப்பிடுகிறது. வறுமையிலும் விருந்தோம்பல்: ü தமிழர் வறுமையிலும்
ஏதேனும் ஒரு வழியில் விருந்தளித்தனர். ü விதை நெல்லைக் குற்றியெடுத்து
விருந்தளித்தனர். ü வாளைப் பணையம் வைத்து
விருந்தளித்தனர். ü கருங்கோட்டுச் சீறியாழைப்
பணையம் வைத்து விருந்தளித்தனர். நிலத்திற்கேற்ற
விருந்து: நெய்தல்
நிலத்தவர் பாணர்களை வரவேற்று குடல் மீன் கறியும் உணவு கொடுத்தனர் என்கிறது
சிறுபாணாற்றுப்படை. விருந்தை
எதிர்கொள்ளும் தன்மை: வீட்டில் பலரும் நுழையும்
அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர் உணவு உண்ண வேண்டியவர்கள்
யாரேனும் உள்ளீர்களா என்று கேட்கும் வழக்கம் இருந்ததை, “பலர் புகுவாயில் அடைப்பக் கடவுநர் உளீரோ?” என்ற
குறுந்தொகைப் பாடல் புலப்படுத்துகிறது. முடிவுரை: பண்டைத் தமிழர்
இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு செடித்திருந்தது காலம்
தோறும் தமிழர்கள் அடையாளமாக விளங்கும் உயர் பண்பான விருந்தோம்பலை போற்றி
பெருமிதம் கொள்வோம். ஆ) முன்னுரை: கலைஞர் பகுத்தறிவுக் கொள்கை பரப்பும்
சிந்தனையாளர். பேச்சாளர், எழுத்தாளர்
எனப் பன்முக ஆற்றல் கொண்டவர். “முத்தமிழ் அறிஞர்” “சமூகநீதி காவலர்” என்றெல்லாம் மக்களால்
போற்றப்பட்டவர் கலைஞர் கருணாநிதி ஆவார். இவருடைய பன்முத்திறமைகளைப் பற்றி இக்கட்டுரையில்
காண்போம். போராட்டக்
கலைஞர் தன் பதினான்காம் வயதில்,
பள்ளி முடிந்த மாலைவேளைகளில் தாம் எழுதிய, “வாருங்கள்
எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்!” என்று தொடங்கும் பாடலை முழங்கியபடி இந்தித்
திணிப்பை எதிர்த்துப் போரட்ட மாணவர்களைத் திரட்டித் திருவாரூர் வீதிகளில்
ஊர்வலகம் சென்றார். அந்தப் போராட்டப் பணிபே அவருக்குள் இருந்த கலைத்தன்மையை
வளர்த்தது. பேச்சுக்
கலைஞர்: v மேடைப்பேச்சினில்
பெருவிருப்பம் கொண்ட கலைஞர்,
“நட்பு”
என்னும் தலைப்பில் ஆற்றிய சொற்பொழிவு பலராலும் பாராட்டப்பட்டது. v பள்ளிப்
பருவத்திலேயே மாணவர்களுக்கு பேச்சு மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்க “சிறுவர்
சீர்த்திருத்தச் சங்கம்” மற்றும் “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்” ஆகிய அமைப்புகளைத்
தொடங்கினார். நாடகக்
கலைஞர்: v தமக்கே உரிய தனிநடையால்
தமிழரை மேடை நாடகங்களின் பக்கம் சந்திதார். அவர் எழுதிய முதல் நாடகமான பழநியப்பன்
மற்றும் அதனைத் தொடர்ந்து சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ உட்பட
பல நாடகங்களை எழுதினார். திரைக்
கலைஞர் v கலைஞரின் திறமையை
நன்குணர்ந்த இயக்குனர் ஏ எஸ் ஏ சாமி மக்கள் திலகம் எம்ஜிஆர் முதன்முதலாக நடித்த ”ராஜகுமாரி” படத்திற்கான
முழு வசனத்தையும் கலைஞரை எழுதச் செய்தார் v சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி
படத்திற்கும் திரும்பிப்பார், மனோகரா, ராஜா ராணி
முதலிய படத்திற்கும் கலைஞர் கதை வசனம் எழுதினார் இயற்றமிழ்க்
கலைஞர் தமிழ் மீது திராத பற்றுகொண்ட
கலைஞர் நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி,
அணில் குஞ்சு உள்ளிட்ட பல சிறுகதைகளை எழுதினார். ரோமாபுரிப்
பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச்
சிங்கம், ஒரே ரத்தம் உள்ளிட்ட புதினங்களையும் கலைஞர்
எழுதியுள்ளார். முடிவுரை உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு”
என்று வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். தமிழின் பெருமைகளையும்
சிறப்புகளையும் மீட்டெடுக்க எண்ணியவர் கலைஞர், அதற்கான
பணிகளைத் தம் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, தமிழர்
நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானவர். |
8 |
|
44 அ |
முன்னுரை:
வரலாறு என்பது பல நிகழ்வுகளைக் கொண்டதாக உள்ளது. அதில் எண்ணற்ற
ஆளுமைகளைக் காணமுடிகிறது. உலகில் பிறந்தவர் பலர் வாழ்வதோடு சரி. சிலர்தான்
வரலாறு ஆகிறார்கள்.கல்வி என்றால் என்னவென்றே தெரியாத ஓர் இருண்ட சமூகத்தில்
ஒற்றைச் சுடராகத் தோன்றி,எண்ணற்ற
சுடர்களை ஏற்றியவர் தான் மேரி. அவரைப் பற்றி இங்கு காண்போம். மேரியின் குடும்பச்சூழல்: மேரியின் குடும்பத்தினருக்கு பகல் முழுவதும்
பருத்திக் காட்டில் வேலைகள். ஒரு நாள் ஒரே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கி
விடக்கூடாது என்று நினைக்கும் குடும்பம் அது. பருத்திக் காட்டில் இருந்து பகலில்
அம்மா பாட்சி மட்டும் உணவு சமைப்பதற்காக வீட்டுக்குத் திரும்புவாள்..உணவு தயாரானதும்
குழந்தைகளை உணவு உண்ணக் கூப்பிடுவாள். மேரிக்கு நடந்த துன்பம்: மேரி ஒருநாள் தன் அம்மாவுடன், கூறு மாளிகைக்குச்
செல்கிறாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளின் அழைப்பையேற்று அவர்களோடு
விளையாடுகிறாள். அங்கே, ஒரு புத்தகம் அவளது கண்ணில்
படுகிறது. அந்தப் புத்தகத்தின் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்தப்
புத்தகத்தை கையில் எடுத்து அதைப்
புரட்டத்தொடங்குகிறாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமிகள்,” நீ
அதைத் தொடக்கூடாது, உன்னால் படிக்க முடியாது” என்று மேரியின் உள்ளம் வருந்தும் வகையில் பேசினர்.
அந்த நிகழ்வு மேரியின் மனதில் மிக ஆழமாகப்
பதிந்துவிடுகிறது. தூண்டுகோல்- மிஸ்வில்சன் : ஒரு நாள் மிஸ் வில்சன் என்பவர் மேரி படிப்பதற்குத் தான் உதவி செய்வதாக
கூறினார். மேரி செய்வதறியாது திகைத்து நின்றாள்.
பிறகு பருத்தி எடுக்கும் வேலையைத் தொடர்ந்தாள். வேலையை விரைவாக முடிக்குமாறு
அனைவரையும் அவசரபடுத்தினாள்.தான் ஒரு புதிய பெண்ணாக ஆகிவிட்டதாக உணர்ந்தாள்.
குடும்பத்திலிருந்து முதல் பெண் படிக்கப் போகிறாள். புதிய நம்பிக்கை பிறந்தது. சிறப்பாகக் கல்விகற்ற மேரி: மேரி நாள்தோறும் தன்
இலட்சியத்தைச் சுமந்து பள்ளிள்ச் சென்றாள். நாள்தோறும் புதிய புதிய செய்திகளைக்
கற்றாள். பள்ளிக்கூடத்தில் சில வருடங்கள் ஓடி மறைந்தன. அந்த வருடத்தின்
கடைசியில் மேரிக்குப் பட்டமளிப்பு நடந்தது மிஸ் வில்சன் மேரிக்கு உயர்கல்வி
படிக்க உதவினார். முடிவுரை: மனதில் ஆர்வமும், விடாமுயற்சியும் இருந்தால்,
எதையும் சாதிக்கலாம் என்பதற்கு மேரியின் கதை ஒரு சிறந்த
சான்றாகும்.உலகில் சிலர் வரலாறாகவே இருக்கிறார்கள். இவர்கள்
பாதையே இல்லாத இடத்தில் தங்கள் காலடிகளால் ஒற்றையடிப்பாதை இட்டு அதையே பெரும் சாலையாக உருவாக்குகிறார்கள். அவ்விதமாக மேரி வந்து
ஓராயிரம் சுடரை ஏற்றி விட்டாள். ஆ) முன்னுரை: விடுதலைக்காகவும், சமுதாயக் கொள்கைக்காகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் போராடி வெற்றி பெற்ற தியாகிகள் பலர்.
அவர்களுள் சில பெண்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.பல பெண்கள் நாட்டிற்கு அருந்தொண்டாற்றி
பெருமை தந்துள்ளனர்.சில பெண்கள் முயற்சி ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு
சமுதாயத்தில் பல சாதனைகளைப் சிலரைப் பற்றி இங்கு காண்போம். புரிந்துள்ளனர்.
அவர்களில் ஒரு சிலரைப்பற்றி இங்கு காண்போம் எம்.எஸ்.சுப்புலட்சுமி: இசைச் சூழலில் வளர்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைமேதை ஆனார். 17 வயதில் கச்சேரியில் பாடி பலரின் பாராட்டைப் பெற்றார். மீரா என்ற
திரைப்படத்தில் நடித்ததால் இந்தியா முழுவதும் இவருக்குப் பாராட்டு கிடைத்தது.1954 இல் இவருக்கு "தாமரையணி” விருதும்,1974 இல் மகசேசே விருதும், இந்திய மாமணி விருதும்
கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம்,மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் பாடியுள்ளார். பாலசரசுவதி: இவர் பரதநாட்டியத்தில் சிறப்பு பெற்றவர். இவர் 15 வயதில் சென்னையில் உள்ள "சங்கீத சமாஜன்" என்னும் அரங்கத்தில்
தனது நடன நிகழ்ச்சியை நடத்தினார்.கல்கத்தாவிலும், காசியிலும்
நடந்த அனைத்திந்திய இசை மாநாட்டிலும், சென்னையில்
நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கண்காட்சியிலும் நம் நாட்டுப் பண்ணாகிய "ஜன
கன மன" பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார். இராஜம்
கிருஷ்ணன்: சிக்கல்களைப் பற்றி கதைகளாகவும், புத்தகங்களாகவும்
எழுதக் கூடிய ஆற்றல் பெற்றவர் இவர். இவர் "பாஞ்சாலி சபதம் பாடிய
பாரதி" என்னும் வரலாற்றுப் புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டார். தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கையை "கரிப்பு
மணிகள்" எனும் புதினமாக வடிவமைத்தார். படுகர் இன மக்களின் வாழ்வியலை
"குறிஞ்சித்தேன்” என்னும் புதினமாகவும், கடலோர மீனவர்களின் சிக்கல்களை "அலைவாய்க் கரையான்" என்னும்
புதினமாகவும், வேளாண் தொழிலாளர்களின் உழைப்புச்
சுரண்டலை "சேற்றில் மனிதர்கள்","வேருக்கு
நீர்"எனும் புதினங்களாகவும் எழுதியுள்ளார். கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்: காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், சட்ட
மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம்
ஆகியவற்றில் பங்கு பெற்றவர். "உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" என்ற
அமைப்பின் மூலம், வேளாண்மை இல்லாத காலத்திலும்
உழவருக்கு வேறு பணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்தார். மதுரை
சின்னப்பிள்ளை: இவர் மகளிரின் வாழ்வு மேம்பாட்டுக்காகப் பாடுபட்டார். எல்லா பெண்களும்
இணைந்து வேலை செய்து கூலியை எல்லோருக்கும் சரிசமமாகப் பங்கிட்டவர். வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப வேலை கொடுத்து,அவர்களின் குடும்பங்களுக்கு உதவியாக இருந்தார். நம் நாட்டு நடுவண்
அரசின் "பெண் ஆற்றல்" விருதையும்,தமிழக அரசின்
"அவ்வை”விருதையும், தூர்தர்ஷனின்
பொதிகை விருதையும் பெற்றவர். முடிவுரை: பெண்கள் நாட்டின் கண்கள்" எனும் சான்றோரின் வாக்கு முற்றிலும்
உண்மையானதே. ஒரு நாட்டில் உள்ள பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் அந்த நாடு
அனைத்து நிலைகளிலும் மாபெரும் உயர்வை அடையும். ”இந்திய
சமுதாயத்தில் பல பெண்கள் தங்களது முயற்சியையும் திறமையையும் கொண்டு
சாதித்துள்ளனர்” என்பதற்கு இவர்களே சான்றுகளாகத்
திகழ்கின்றனர். |
8 |
|
45 |
அ) தலைப்பு : சாலை
பாதுகாப்பு முன்னுரை: சாலை விபத்துக்கள் நமது
சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும்
ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும்,
தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை
நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள்
நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம்
ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சாலை
பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு: சாலையில் விபத்துகள்
நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர்
பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு
வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள்
மூலமாகவும், ஓட்டுனர் பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள்
பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர்
பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சாலை
விதிகள்: சாலையில் பயணம் செய்வோர்
அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நடைமேடையைப்
பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க
நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட
இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான
இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற
வேண்டும். ஊர்தி
ஓட்டுநருக்கான நெறிகள்: v சிவப்பு வண்ண
விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற
கட்டளையையும்,
பச்சை
வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச்
சரியாகப் பின்பற்ற வேண்டும். v போக்குவரத்துக்
காவல் துறையினரின் கட்டளையை மீறி நான் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம்
இருக்கக்கூடாது. v சாலையில் அந்தந்த
வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.
நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி
செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது. v வாகனஓட்டிகள்
உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது கண்டிப்பாக வாகனம்
ஓட்டக்கூடாது.மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும்.பள்ளிகள், மருத்துவமனை, முதியோர்
இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக்
கூடாது. முடிவுரை: "சாலைவிதிகளை
மதிப்போம் விலைமதிப்பில்லாத
உயிர்களைக் காப்போம்" என்பதை அனைவரும்
மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை
உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம். (அல்லது)
ஆ) முன்னுரை: ”கலைத்திருவிழா என் மனதைக் கவர்ந்திழுத்தது” குடும்பத்தினருடன் வெளியில்
செல்வது யாருக்குத் தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும்
மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது
குடும்பத்தினருடன் எங்கள் ஊரான திருத்தணியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச்
சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத்
தந்திருக்கிறேன். அறிவிப்பு: மகிழுந்தை வெளியில்
நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு,
உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த நாட்டுப்புறக் கலைகள் எங்கெங்கே நிகழ்த்தப் படுகின்றன?
அந்தந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கிமூலம்
தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன. அமைப்பு: ”அனைத்து கலைகளும் சங்கமித்தது என் மனமும் அங்கேயே
நிலையாய் நின்றது” கலையரங்க நுழைவாயிலில் நிகழ்ந்து
கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும்
உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் அரங்குகளின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக
வரையப்பட்டிருந்தது. எங்கள் ஊரான திருத்தணியின் எழில்மிகு தோற்றமும் அங்கே காட்சிப்படுத்தப்
பட்டிருந்தது. மேலும் அரங்குகளின் அமைப்பு கூட்ட நெரிசலை
சமாளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. சிறு
அங்காடிகள்: கலைத்திருவிழா நிகழிடத்தில்
விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும்
பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகளும் அமைக்கப்பட்டிருந்தது எங்களை
மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும்
விதமாக இருந்தது. நிகழ்த்தப்பட்ட
கலைகள்: ”மனதைக் கவரும் மயிலாட்டம் நம்மையும் ஆடத்தூண்டும்
கரகாட்டம் ” எங்கள் ஊரில் நடைபெற்ற கலைத்திருவிழாவில்
பெரும்பாலும் எல்லா நிகழ்கலைகளும் நிகழ்த்தப்பெற்றன. அங்கே
மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம்,
கும்மியாட்டம்,தெருக்கூத்து உள்ளிட்ட பலவகை
ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு
அது புதுவித அனுபவமாக இருந்தது. பேச்சரங்கம்: கலையரங்கத்தில், முத்தமிழும் ஒன்று கூடியதுபோல் இருந்தது கலைத்திருவிழாவில் பேச்சரங்கம்
ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய
புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். கலைத்திருவிழாவிற்கு
வந்த மக்களில் பலர் மெய்மறந்து பேச்சாளர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு நின்றனர்.
நானும் என் குடும்பத்தினரும் கூட பேச்சரங்கத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்டு
விட்டு வந்தோம். முடிவுரை: ”ஆவலுடன் அங்கு சென்றோம் அங்கிருந்து வர மனமில்லாமல் வந்தோம்” இறுதியாக எனக்குத்
தேவையான சில பொருட்களை அங்கிருந்த அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால்,
வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து,
மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில்
மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது. |
8 |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி