7 TH STD TAMIL MODEL NOTES OF LESSON MARCH WEEK-4

  7 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :       

மாதம்        

வாரம்     :                                              

வகுப்பு  :  ஏழாம் வகுப்பு          

பாடம்    :           தமிழ்  

பாடத்தலைப்பு     :  பயணம்

1.கற்றல் நோக்கங்கள்   :

இணக்கமான உறவைப் பேணுதல், உணர்வுகளைக் கையாளுதல், தன்னம்பிக்கையுடன் சூழல்களை  கொள்ளுதல் போன்ற வாழ்க்கைத் திறன்களைப் பெறுதல்

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

  • மிதிவண்டி ஓட்டத் தெரியுமா? என்ற வினாவைக் கேட்டு மாணவர்கள் கூறும் விடைகள் மூலம் பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • விரிவானப் பகுதியை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :


6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • தான் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ நினைப்பது மனிதப் பண்பு அன்று. பிறருக்கு உதவி செய்வதும் பிறரது சிறு சிறு ஆசைகள் நிறைவேற்றி அவர்களது மகிழ்ச்சியைக் கண்டு இன்பம் அடைவதும் சிறந்த மனித பண்பாகும். பிறருக்கு உதவி செய்து மகிழ்ந்த ஒருவரின் கதை தான் பயணம்

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. பயணம் கதையை இயற்றியவர் யார்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1. குடிசை வீட்டுச் சிறுவனின் போற்றத்தக்க செயல் யாது?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1. பயணம் கதை உணர்த்தும் நீதியை விளக்குக

9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

ஜென் கதைகளில் பிறவற்றை அறிந்து வந்து வகுப்பறையில் உரையாடுதல்

12.கற்றல் விளைவு:

   Ø இணக்கமான உறவைப் பேணுதல், உணர்வுகளைக் கையாளுதல், தன்னம்பிக்கையுடன் சூழல்களை  கொள்ளுதல் போன்ற வாழ்க்கைத் திறன்களைப் பெறுதல்

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை