10.ஆம் வகுப்பு தமிழ்
சிறப்பு திருப்புதல் வினாத்தாள்-1
|
சிறப்பு
திருப்புதல் தேர்வு-1 (2025-2026)
இயல்-1,2,3 10.
ஆம் வகுப்பு
தமிழ் மொத்த மதிப்பெண்கள்:
100 நேரம் : 3.00 மணி+15 நிமிடங்கள் |
|
குறிப்புகள் :
i)
இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. ii) விடைகள்
தெளிவாகவும், குறித்த அளவினதாகவும், சொந்த
நடையிலும் அமைதல் வேண்டும். |
பகுதி-1
(மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
15X1=15
1) எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் அ) எந்+தமிழ்+நா ஆ) எந்த+தமிழ்+நா இ) எம்+தமிழ்+நா ஈ) எந்தம்+தமிழ்+நா
2) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் குறிப்பன அ) இலையும் சருகும் ஆ) தோகையும் சண்டும் இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
3) "பாடுஇமிழ்
பனிக்கடல் பருகி" என்னும் முல்லைப்பாட்டு அடிஉணர்த்தும் அறிவியல் செய்தி
அ)
கடல் நீர் ஆவியாகி மேகமாதல் ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடை தல்
இ) கடல் நீர் ஒலித்தல் ஈ) கடல் நீர்
கொந்தளித்தல்
4) கேட்டவர் மகிழப் பாடிய பாடல்-இத்தொடரில் இடம்பெற்ற தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும்முறையே
அ) பாடிய;கேட்டவர் ஆ) பாடல்;பாடிய இ)
கேட்டவர்;பாடிய பாடல்;கேட்டவர்
5) தென்னன் என்று குறிப்பிடப்பட்ட
மன்னன்
அ) பாண்டியன் ஆ) சேரன் இ) சோழன் ஈ) பல்லவன்
6) ’உனக்குப் பாட்டுகள்
பாடுகிறோம்
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்’- இவ்வடிகளில்
இடம்பெற்றுள்ள நயங்கள்
அ) உருவகம்,எதுகை ஆ) மோனை,எதுகை இ)
முரண்,இயைபு ஈ) உவமை,எதுகை
7) பெரியமீசை சிரித்தார்-வண்ணச்சொல்லுக்கான தொகையின் வகை யாது?
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை
இ)அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
8) "சிலம்பு
அடைந்திருந்த பாக்கம் எய்தி" என்னும் அடியில் பாக்கம் என்பது
அ)
புத்தூர் ஆ) மூதூர் இ) பேரூர் ஈ) சிற்றூர்
9) அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் - பொருளை வேறுபடுத்தக் காரணம்
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
10) காசிக்காண்டம் என்பது
அ)
காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்
இ)
காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்
11) 'விருந்தினரைப் பேணுவதற்குப்
பொருள் தேவைப்பட்டதால்,தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம்
வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு'. இச்செய்தி
உணர்த்தும் விருந்து போற்றிய நிலை
அ)
நிலத்திற்கேற்ற விருந்து ஆ) இன்மையிலும் விருந்து
இ)
அல்லிலும் விருந்து ஈ) உற்றாரின் விருந்து
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமேகலை வடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
12) இப்பாடலில்
தென்னன் என்பது யாரைக் குறித்தது?
அ) சோழன் ஆ) பாண்டியன்
இ) சேரன் ஈ) பல்லவன்
13) மகளே என்னும்
சொல்லின் இலக்கணக்குறிப்பு
அ) உம்மைத்தொகை ஆ) பெயரெச்சத் தொடர் இ) விளித்தொடர் ஈ) எண்ணும்மை
14) நற்கணக்கே
-பிரித்து எழுதுக
அ) நற்+கணக்கே
ஆ) நல்+கணக்கே
இ) நல்க்+கணக்கே ஈ) நல்ல+கணக்கே
15) எதுகை நயத்தைத் தேர்ந்தெடு
அ) தென்னன்-இன்னறு ஆ) தென்னன்- மகளே இ) மன்னும்-சிலம்பே ஈ) முடி-மணி
பகுதி-2 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் குறுகிய விடையளிக்க:(21
கட்டாயவினா)
16) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:
அ) திருமூலர் திருமந்திரத்தை இயற்றினார்.
ஆ) மூசு என்பது பலாப்பிஞ்சைக் குறிக்கும்.
17) பூவின் பல்வேறு நிலைகளைக் கூறுக. 18) வசன கவிதை என்பது யாது?
19) விருந்தினரை
மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
20) இறடிப்
பொம்மல் பெறுகுவிர்'
– இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.
21) பல்லார் எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல்
எழுதுக.
பிரிவு-2
5X2=10
ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:
22) வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும்,பொதுமொழியாகவும் வேறுபடுத்துக.
23) சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:-
தேன்,விளக்கு,மழை,விண்,மணி,விலங்கு, செய்,மேகலை,வான்,பொன்,பூ
24)
முகிழ்த்த-பகுபத உறுப்பிலக்கணம் தருக.
25)
கலைச்சொல் தருக: VOWEL , HOMOGRAPH.
26)
சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:-
நாலெழுத்தில் கண் சிமிட்டும்.
கடையிரண்டில் நீந்திச் செல்லும்.
27)
“எழுது என்றாள் “ என்பது விரைவு காரணமாக “ எழுது எழுது என்றாள் “ என
அடுக்குத் தொடரானது.”சிரித்துப் பேசினார்” என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?
28)
தமிழெண்களை எழுதுக: 23, 87, 91, 40
பகுதி-3
(மதிப்பெண்:18)
பிரிவு-1 2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
29)
புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.
-இது போல் இளம்பயிர்வகை ஐந்தின்
பெயர்களை எழுதுக.
30) உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான்,
இலக்கியத்தில் நான், முந்நீர்நாவாய் ஓட்டியாக
நான்…..முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப்பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன்னைப் பற்றிப்பேசினால்….. உங்களுடைய
கற்பனையில் தலைப்புகளை எழுதுக.
31) பத்தியைப் படித்துப் பதில் தருக:-
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்து சென்றன.புவி
உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்
தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு
இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த
இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய
உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக
இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
1.
பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக. 2. புவி ஏன் வெள்ளத்தில்
மூழ்கியது?
3.
பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
பிரிவு-2
2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க
(34 கட்டாய வினா)
32)
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணமாகப் பாவலரேறு கூறுவன யாவை?
33)
சோலைக்(பூங்கா)காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல்
ஓர் உரையாடல் அமைக்க .
34)
அ) அன்னை மொழியே---எனத்தொடங்கி
---பேரரசே என முடியும் பாடலை எழுதுக.
பிரிவு-3
2X3=6
இரண்டு
வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35)
அலகிட்டு வாய்பாடு எழுதுக:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
36) அறிந்தது,அறியாதது, புரிந்தது,புரியாதது,தெரிந்தது, தெரியாதது, பிறந்தது,
பிறவாதது' இவை அனைத்தையும் யாம் அறிவோம். அதுபற்றி
உமது அறிவுரை எமக்குத்தேவை இல்லை.எல்லாம்எமக்குத் தெரியும். வினை முற்றுகளைத்
தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக
37)
தொகாநிலைத் தொடர் வகைகளைப் பட்டியலிடுக.
பகுதி-4
(மதிப்பெண்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க:
5X5=25
38)
அ) மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையும்,,பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக. (அல்லது)
ஆ) முல்லைப்
பாட்டில் உள்ள கார்காலச்செய்திகளை விவரித்து எழுதுக.
39) அ)
மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்”என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் பங்கேற்று முதல்பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி
மடல் எழுதுக. (அல்லது)
ஆ) உணவு விடுதியொன்றில்
வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து
உரிய சான்றுகளுடன் உணவுப்பாதுகாப்பு ஆணையருக்குக்கடிதம் எழுதுக.
40)
அ) புயல் அறிவிப்பைக் கேட்ட நீங்கள் உங்களையும்
உங்கள் குடும்பத்தாரையும் காற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக
(அல்லது)
ஆ)
மொழி பெயர்க்க:
1.If
you talk to a man in a language he understand,thats goes to his head. If you
talk to him in his own language that goes to his heart – Nelson Mendela
2.
Language is the road map of a culture. It tells you where its people come from
and where they are going – Rita Mae Brown
41)
நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
42)
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

பகுதி-5
(மதிப்பெண்:24)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க: 3X8=24
43) அ)
தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவைகுறித்தும்
தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக.
(அல்லது)
ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள்
செய்த விருந்தோம்பலை அழகுற விவரிக்க.
44)
அ) அன்னமய்யா என்ற பெயர் பொருத்தமுடையது என நிறுவுக.
(அல்லது)
ஆ) புயலிலே
ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச்
சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன ?
45) அ) மனித வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம்;
புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகிற கருப்பொருள்களைத்
திரட்டி, கற்பனை நயம் கூட்டிக் கதையாக்குவது ஒரு கலை. அது
சிறுகதையாக இருக்கலாம். புதினமாக இருக்கலாம். அன்பை எதிர்பார்த்திருப்பவராக,
யாருமற்றவராக.... இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த
நிகழ்வினைக் கதையாக்குக.
(அல்லது)
ஆ) குமரிக் கடல்முனையையும் வேங்கடமலைமுகட்டையும்
எல்லையாகக் கொண்ட தென்னவர்
திருநாட்டிற்குப்
புகழ்தேடித்தந்த பெருமை,தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும்
அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி, சதகம்
சமைத்து, பரணி பாடி,கலம்பகம் கண்டு,
உலாவந்து, அந்தாதி கூறி,கோவை
யாத்து,அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர்
புலவர்கள்.
இக்கருத்தைக் கருவாக் கொண்டு ‘சான்றோர் வளர்த்தமிழ்’ என்னும் தலைப்பில்
கட்டுரை
எழுதுக.