7 TH STD TAMIL MODEL NOTES OF LESSON OCTOBER WEEK-2

  7 . ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        :  

மாதம்          அக்டோபர்  

வாரம்     :                                      

வகுப்பு  :      ஏழாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்

பாடத்தலைப்பு     :   அழியாச் செல்வம்

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø கல்வியே அனைத்திற்கும் அடிப்படை என்பதை உணர்தல்

       @ எளிய பாடல்களைச் சீர்பிரித்துப் படித்துப் பொருள்புரிந்து கொள்ளுதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்


அழியாச்செல்வம்👇

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø  கல்வி வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் ? என்ற வினாவைக் கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.படித்தல்  :             

  • செய்யுட்பகுதிகளை ஆசிரியர்,சொற்களின் பொருள் விளங்குமாறும், நயம்படவும்  உரிய ஏற்ற இறக்கத்துடன் படித்துக் காட்டுதல்

  • ஆசிரியரைப் பின்பற்றி மாணவர்களும்,அவ்வாறே உரைநடைப் பகுதியைப்  படித்தல்.

  • எழுத்துக்களையே சரிவர இனங்கண்டு படிக்க இயலாத மாணவர்களுக்கு,உயிர் எழுத்து மெய் எழுத்துகளை சொல்லிக் கொடுத்து,வீட்டில் பயிற்சி செய்துவரச் சொல்லுதல்.

  • தமிழ் சரளமாக வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கு, இரண்டெழுத்துச் சொற்கள், மூன்றெழுத்துச் சொற்கள் என எளிமையான சொற்களை எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக் கொடுத்தல்.

5.மனவரைபடம்  :

அழியாச்செல்வம்

6.தொகுத்தலும்,வழங்குதலும்:
  • சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் எனும் நூலிலிருந்து பாடல் தரப்பட்டுள்ளது.

  • உண்மையான செல்வம் எது? என இப்பாடலில் விளக்கப்பட்டுள்ளது.

7.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

8.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
1. நாலடியாரை இயற்றியவர்..................
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
2. உண்மையான செல்வம் எது?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
1. உண்மையான செல்வம் என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?
9.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

10.எழுதுதல்:

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

11.தொடர்பணி:

கல்வி பற்றிய முழக்கத்தொடர்களை எழுதிவரச் செய்தல்

12.கற்றல் விளைவு:

@ 702- ஒன்றைப் படிக்கும் போது அந்தப் படைப்பாளி வேறு சூழல்களில் வெளியிட்ட சிந்தனைகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தலும்அக்கருத்துகளைத் தமது சொந்தக் கருத்துகளுடன் அனுபவங்களுடனும் ஒப்பிட்டுதமது குறிப்பிட்ட கருத்துடன் படைப்பாளி ஒன்றுபடுதலையும் மாறுபடுதலையும் அறிதல்


Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை