காலாண்டுப்பொதுத்
தேர்வு-2025 சென்னை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வி.எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
இ. எம்+தமிழ்+நா |
1 |
2. |
ஈ. சருகும்,
சண்டும் |
1 |
3. |
ஆ. இருபெயரொட்டுப் பண்புத்தொகை |
1 |
4. |
அ. சங்ககாலத்தில்
மொழிபெயர்ப்பு இருந்தது |
1 |
5. |
ஆ. எழுவாய்த்தொடர் |
1 |
6. |
அ. இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது |
1 |
7. |
இ. காட்சி,
காணுதல் |
1 |
8. |
இ. திணை வழுவமைதி |
1 |
9. |
அ. கட்டு |
1 |
10. |
ஈ. செய்தி 1.3 ஆகியன சரி |
1 |
11. |
அ. எழுது எழுது என்றான் |
1 |
12. |
ஈ. திருவிளையாடற்புராணம் |
1 |
13. |
ஆ. பரஞ்சோதி முனிவர் |
1 |
14. |
இ. ஓங்கு தண்
- நீங்குவம் |
1 |
15. |
ஆ. குளிர்ந்த
வயல் |
1 |
பகுதி-2 பிரிவு-1 4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
16 |
ü கிழக்கிலிருந்து வீசும்
காற்று –
கொண்டல் ü மேற்கிலிருந்து வீசும்
காற்று
– கோடை ü வடக்கிலிருந்து வீசும்
காற்று
– வாடை ü தெற்கிலிருந்து வீசும்
காற்று
- தென்றல் |
2 |
17 |
உரிய விடை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
2 |
18 |
ü முதுகினால் சூரியனை
மறைக்கும்போது மேகங்கள் துணிச்சலானவை. ü தாகம் தீர்க்கும்போது
மேகங்கள் கருணை மிக்கவை |
2 |
19 |
நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்ட வேண்டும் |
2 |
20 |
வாருங்கள், நலமா?,
நீர் அருந்துங்கள் |
2 |
21 |
பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத
கண்.
|
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
22 |
அமர்+த்(ந்)+த்+ஆன் அமர்-பகுதி,
த்-சந்தி, ந்-விகாரம்,
த்-இறந்தகால இடைநிலை , ஆன் - ஆண்பால் விகுதி |
2 |
23 |
அ. ஒரு மொழி ஆ. பல்துறை ஊடகம் |
2 |
24 |
அ. மூன்று நாளுக்கு ஆ. உள்ளளவும் நினை |
2 |
25 |
ü பல கை என்று வந்தபோது
கையைக் குறித்தது. ü பலகை என்று வந்தபோது
மரப்பலகையைக் குறித்தது. ü தனித்தும், தொடர்ந்தும் வெவ்வேறு
பொருளைக் குறித்ததால் பொதுமொழி ஆனது |
2 |
26 |
ü தண்ணீர் குடி – தண்ணீரைக்குடி -இரண்டாம் வேற்றுமைத்தொகை ü தயிர்க்குடம் – தயிரை உடைய குடம் - இரண்டாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை |
2 |
27 |
சொன்ன அம்மா , பார்த்த துளிர் |
2 |
28 |
எதிர்காலம், உறுதித் தன்மையின்
காரணமாக நிகழ்காலமானது காலவழுவமைதி. |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
அ) நல்ல
முறையில் குப்பை மேலாண்மை மேற்கொள்ளல் , பொதுபோக்குவரத்து பயன்பாடு ஆ) உயிர்வளியின்
தேவைக்காக இ) மின்னாற்றலால்
இயங்கும் சாதன்ங்களைப் பயன்படுத்துதல் |
3 |
30 |
ü தொலைக்காட்சி
வானொலி திரைப்படம் இதழ்கள் போன்ற ஊடகங்களின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு
பெரிதும் உதவுகிறது. ü வணிக விளம்பரங்களை
பல்வேறு மொழி பேசும் மக்களிடையே கொண்டு செல்ல மொழிபெயர்ப்பு உதவுகிறது. ü புதுவகையான சிந்தனைகள்
மொழிக் கூறுகள் உருவாக மொழிபெயர்ப்பு உதவி செய்கிறது. |
3 |
31 |
அ)
நாற்று- நெல் நாற்று நட்டேன். ஆ)
கன்று- வாழைக்கன்று வளர்த்தேன் இ)
பிள்ளை- தென்னம்பிள்ளை அசைந்தது ஈ)
வடலி-பனைவடலியைப் பார்த்தேன். உ)
பைங்கூழ்-பைங்கூழ் அழகானது. |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||
32 |
ü
பழமையான
நறுங்கனி ü
பாண்டியன்
மகள் ü
சிறந்த
நூல்களை உடைய மொழி ü
பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழி ஆகியனவற்றை தமிழன்னையை
வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுகிறார் |
3 |
|
33 |
·
ஒழுக்கம்
எல்லார்க்கும் சிறப்பைத் தருவதால் அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலானதாகப் பேணிக் காக்க
வேண்டும். ·
ஒழுக்கமாக
வாழும் எல்லாரும் மேன்மை அடைவர். ஒழுக்கம் தவறுபவர் அடையக்கூடாத பழிகளை அடைவர். ·
உலகத்தோடு
ஒத்து வாழக் கல்லாதார்,
பல
நூல்களைக் கற்றாராயினும் அறிவு இல்லாதவரே (எனக் கருதப்படுவார்). |
3 |
|
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
1. குட்டி-
மரபு
வழுவமைதி 2. இலட்சுமி கூப்பிடுகிறாள்-திணை வழுவமைதி 3. இதோ சென்றுவிட்டேன் – கால வழுவமைதி 4. அவனை – பால் வழுவமைதி |
3 |
||||||||||||||||||||||||
36 |
ü
இக்குறளில் உவமை அணி பயின்று வந்துள்ளது உவமை அணி: ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமையணியாகும்.
இதில் உவமை, உவமேயம், உவம
உருபு ஆகியன இடம்பெறும். உவம உருபு வெளிப்படையாக வரும். அணிப்பொருத்தம்: v உவமை – வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்பவன். v உவமேயம் – செங்கோல் தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன் v உவம உருபு
– போலும்
இவ்வாறு உவமை, உவமேயம், உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வந்தமையால் உவமையணி ஆயிற்று. |
3 |
||||||||||||||||||||||||
37 |
|
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
|||||||
38
அ |
ü காலில் அணிந்த கிண்கிணிகளோடு
சிலம்புகள் ஆடட்டும். ü அரைஞாண் மணியோடு அரைவடங்கள்
ஆடட்டும். ü தொந்தியுடன் சிறுவயிறும்
ஆடட்டும். ü நெற்றிச்சுட்டி,குண்டலங்கள் ஆக்யவையும்
ஆடட்டும். ü முருகப்பெருமானே செங்கீரை
ஆடுக (அல்லது) ஆ) திரண்ட
கருத்து: கவிஞன் நானே காலத்தைக் கணிப்பவன். உள்ளத்தில்
உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்து ஒரு உருவமாய் அவற்றை நான் படைப்பதால்
இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம். பொன்னைவிட விலை உயர்ந்த செல்வம்
என்னுடைய கருத்துகள்.சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை
எதிர்ப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை. மோனை
நயம்: செய்யுளில்
அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும். ü கவிஞன்- கருப்படு ü இவை சரி - இவை தவறாயின் எதுகை
நயம்: செய்யுளில் முதல் எழுத்து அளவொத்திருக்க
இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதுஎதுகையாகும். ·
கருப்படு
- பொருளை - உருப்பட முரண்
நயம்: பாட்டுக்கு முரண் செய்யுளில் அடியிலோ சீரிலோ
எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப் படுவது முரண் ஆகும். ஆக்கல் × அழித்தல் என்று முரண்பட்ட
சொற்கள் அமைத்து தொடுத்திருப்பதால் முரண் நயமும் உள்ளது. இயைபு
நயம்: அடிதோறும்
இறுதி எழுத்தோ,
சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபு ஆகும். ·
புகழுடைத்
தெய்வம் ...பொருளென் செல்வம் அணி
நயம்: கண்ணதாசன் இப்பாடலில், கடவுளுக்கு
இணையாக யானோர் காலக்கணிதம் என உருவகப்படுத்தி உள்ளதால் இப்பாடலில் உருவக அணி
பயின்று வந்துள்ளது. ·
நானோர்
புகழுடையத் தெய்வம் சந்த
நயம்: சந்தம் தமிழுக்குச் சொந்தம் என்பதற்கு ஏற்ப, இப்பாடலில்
'எண்சீர் கழிநெடிலடி' ஆசிரிய
விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும் பெற்றுள்ளது. |
5 |
|||||
39 ஆ. |
அ) அனுப்புநர், பெறுநர், ஐயா,
பொருள், கடிதச்செய்தி, இப்படிக்கு, இடம், நாள், உறைமேல் முகவரி என்ற அமைப்பில்
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக (மாதிரிக் கடிதம்) முறையீட்டுக்கடிதம் அனுப்புநர் அ.எழில்வேந்தன், 12,கம்பர் தெரு, அரக்கோணம். பெறுநர் உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர் அலுவலகம், அரக்கோணம். ஐயா, பொருள்:தரமற்ற உணவு வழங்கிய உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல்
சார்பாக.
வணக்கம். நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி
சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு
வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும்
இருந்தது.அதற்கான சான்றுகளை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன்.உணவகத்தின் மீது தக்க
நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள்
உண்மையுள்ள அ.எழில்வேந்தன். இடம்:அரக்கோணம், நாள்: 08-09-2025. உறைமேல்
முகவரி: உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர் அலுவலகம், அரக்கோணம். |
5 |
|||||
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
|||||
41 |
தரப்பட்ட சரியான விவரங்களோடு நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
|||||
42 |
அ)
இதில் நீங்கள் செல்லும் வழி யாது?
உங்கள் நண்பருக்குக் காட்டும் வழி யாது?
ஆ) பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு
பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த
காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம்
வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர,
பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின்.
காலை சில்லென உணர்வும்,
மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா
வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) முன்னுரை : ஒவ்வொரு மொழிச் சமூகத்திலும்
ஒரு துறையில் இல்லாத செழுமையை ஈடுசெய்ய வேறு துறைகளில் உச்சங்கள் இருக்கும்.கொடுக்கல்
வாங்கலாக அறிவனைத்தும் உணர்வனைத்தும் அனைத்து மொழிகளிலும் பரப்ப வேண்டும் அல்லவா? மொழிபெயர்ப்பும்
தொடக்கமும்: 'ஒரு மொழியில்
உணர்த்தப்பட்டுள்ளதை வேறொரு மொழியில் வெளியிடுவதே மொழிபெயர்ப்பு' என்கிறார் மணவை முஸ்தபா. 'மொழிபெயர்த்தல்' என்ற தொடரை மரபியலில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். மொழிபெயர்ப்பு
இலக்கியங்கள்: என்று சின்னமனூர்ச்
செப்பேடு கூறுவதன் மூலம் சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதை
அறியலாம். வடமொழியில் வந்த இராமாயண, மகாபாரத தொன்மை
செய்திகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. பெருங்கதை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலியன வடமொழி கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே. மொழிபெயர்ப்பின்
அவசியமும் பயனும்: மொழிபெயர்ப்பு எல்லா
காலகட்டங்களிலும் தேவையான ஒன்று. மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகள்
உருவாகி இருக்க முடியாது. ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு மூலம் சேக்ஸ்பியர்
அறிமுகமானார். கம்பனும் ரவீந்திரநாத் தாகூர் கூட மொழிபெயர்ப்பின் மூலமே
சிறப்புப்பெற்றவர்கள். இன்றைக்கு பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு
அவசியமாகின்றது. எட்டுதிக்கும்
செல்வீர்: எட்டுத்திக்கும் கொட்டிக்கிடக்கும் கலைச்செல்வங்களை, மொழிபெயர்ப்பு நிறுவங்களை அமைத்தும் மொழிபெயர்ப்புக்கு உதவும்
சொற்களஞ்சியங்களை உருவாக்கியும் பட்டறைகளை நடத்தியும் மொழிக்கு வளம்சேர்ப்பது
நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மொழிபெயர்ப்புக்
கல்வி: மொழிபெயர்ப்பைக் கல்வியாக
ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் எளிதில் பெற்று, மனிதவளத்தை
நாமே முழுமையாகப் பயன்படுத்தி, வேலைவாய்ப்புத் தளத்தை
உருவாக்கி ஒருலகர் எனுந்தன்மை பெறலாம். முடிவுரை
: 'உலக நாகரிக வளர்ச்சிக்கும்
மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் 'எனும்
மு.கு ஜகந்நாதராஜா கருத்தினை நினைவில் நிறுத்தி செயல்படுவோம். ஆ) நாட்டுவளமும் சொல்வளமும் முன்னுரை: 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்கிறார் மகாகவி
பாரதியார். காலவெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ், என்ன
வளம் இல்லை என்று எண்ணி வியக்கத்தக்கவாறு பல்வேறு சிறப்பியல்புகளைக் கொண்டு
இலங்குகிறது நம் செந்தமிழ் மொழி. அனைத்து வளமும் உண்டென்று. விடை பகர்கிறது,
தமிழ்ச்சொல்வளம். தேவநேயப்பாவாணர்: தமிழ் மொழியின் பழமையும்
செம்மையையும் ஆய்ந்த அறிஞர்களுள் மொழிஞாயிறு குறிப்பிடத் தக்கவராவார். தமிழ்ச்
சொல்வளம் பற்றிய அவரது கருத்துகளும் விளக்கங்களும் தமிழ் மொழி மீதான பெருமிதத்தை
மிகுதிப்படுத்துகின்றன. ஒரு நாட்டின் வளமும், அங்கு வழங்கும் சொற்களின் வளமும் தொடர்புடையன என்கிறார் மொழி ஞாயிறு
தேவநேய பாவாணர். நாட்டு வளம் சொல்வளத்தை உருவாக்குகிறது. சொல்வளம் நாட்டு வளத்தைப் பெருக்குகிறது. சொல்வளத்திற்கான
சில சான்றுகள்: ü ஆங்கிலத்தில்
இலையைக் குறிக்க “LEAF” என்ற ஒரே
வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழிலோ
இலையின் வன்மை, மென்மையைக் கருத்தில்
கொண்டு தாள், ஓலை தோகை ,இலை என பலவகைப்
பெயர்களாக அழைக்கப்படுகின்றன. ü விளை பொருட்களின்
மிகுதியாலும் சொல்வளம் பெருகுகிறது என்கிறார் மொழிஞாயிறு. ü பயிர்களின்
அடிப்பகுதி, கிளைப் பகுதி, காய், கனி, தோல், மணி, இளம் பயிர்
முதலானவற்றை குறிப்பதற்கு எண்ணற்ற தமிழ் சொற்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ü செந்நெல், வெண்ணெல், கார்நெல், சம்பா, மட்டை என
எண்ணற்ற நெல் வகைகளும் அவற்றின் உள் வகைகளும் தமிழ்நாட்டில் விளைகின்றன. இவை நாட்டின்
வேறு எந்த பகுதியிலும் விளையாதது குறிப்பிடத்தக்கது. ü தமிழ்நாட்டைத்
தவிர வேறு எங்கும் விளையாத சிறுதானியங்கள் தமிழ்நாட்டின் சொல் வளம் பெருகி
இருப்பதற்கு மிகச் சிறந்த சான்றுகள் ஆகும் முடிவுரை: சொல்வளம் நிறைந்த மொழியானது
அது பயன்படுத்தப்படும் நாட்டின் பலத்தையும் நாகரீகத்தையும் உணர்த்துவதுடன்
பொருளை கூர்ந்து நோக்கி நுண் பாகுபாடு செய்யும் மக்களின் மதிநுட்பத்தையும்
உணர்த்துகிறது எனவே நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை இதன் வழி
அறியலாம் (அல்லது) ஆ. வரவேற்பு: விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு.அந்த
விருந்தோம்பலில் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எங்கள்
இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக வருக என மகிழ்ச்சியாக வரவேற்றோம். அவர்கள்
அமர்வதற்கு இருக்கையைச் சுத்தப்படுத்திக் கொடுத்தோம். வந்தவர்களுக்கு
முதலில் குடிக்க நீர் தந்தோம். கலந்துரையாடல்: நாங்கள் அனைவரும் காலை உணவு உண்டபின், வரவேற்பரையில்
அமர்ந்து ஒவ்வொரு உறவுகளைப் பற்றியும் நலம் விசாரித்தோம். நலம் விசாரித்ததிலிருந்து
எங்களுக்கும் எங்கள் உறவினருக்கும் இடையே உள்ள ஆழமான அன்பு, பாசம் தெரியவந்தது. பிற்பகல் ஆனதும் மதிய உணவு தயாரானது. விருந்து
உபசரிப்பு : தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த
இடமுண்டு என்பார்கள். அதுபோல் வந்தவர்களுக்குச் சுவையான உணவு வகைகளை வாழை
இலையில் பரிமாறினோம். அவர்கள் உண்ணும்வரை அருகில் இருந்து அவர்களுக்குத்
தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து வழங்கிக் கவனித்தோம். நகர்வலம்: விருந்தினருக்கு சிறப்பான மதிய உணவு அளித்த
பிறகு அவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை வேளையில் எங்கள் ஊரைச் சுற்றி காண்பித்தோம் எங்கள் ஊரின்
சிறப்புகள் அருமை பெருமைகளை அவருக்கு மணமகள் வகையில் எடுத்துக் கூறினோம் இரவு
விருந்து : நகர்வலம் முடிந்து, இரவு
விருந்துக்குத் தேவையானவற்றைச் செய்தோம். இரவில், இரவு
நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்தாகப் படைத்தோம். அவர்களும் விருப்பத்துடன்
கேட்டு சுவைத்துச் சாப்பிட்டனர். பிரியா
விடை : இரவு விருந்து முடிந்ததும் அவர்கள் தங்கள்
ஊருக்குச் செல்வதாகக் கூறினர். எங்களுக்குப் பிரிய மனமில்லாமல் அவர்களுடன்
பேருந்து நிறுத்தம்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தோம். |
8 |
44 |
பிரும்மம் முன்னுரை: இயற்கையோடு இணைந்து வாழ்வதும் இயற்கையைப்
பயனுள்ளதாக மாற்றுவதும் அழகியல் ஆகும். குடும்ப உறுப்பினர்கள் இணைந்து நட்டு
வைத்த மரமொன்று அவர்களின் வாழ்வியலில் எப்படி பின்னிப் பிணைந்துவிட்டது என்பதைப்
பிரபஞ்சனின் 'பிரும்மம்' என்ற சிறுகதை அழகாகக்
காட்சிப்படுத்துகிறது. புதிதாகக்
கட்டிய வீடு: இச்சிறுகதையில் வரும் குடும்பத்தினர் புதிதாக
வீடு ஒன்றைக் கட்டினர். அந்த வீட்டிற்கு முன்னால் வெறுமனே கிடந்த சிறிய இடத்தைப்
பயனுள்ள வகையில் பயன்படுத்த குடும்பஉறுப்பினர்கள் அனைவரும் முடிவு செய்தனர்.
அதற்காக ஒவ்வொருவரும்,
என்ன செய்யலாம்? என்று தங்களது எண்ணங்களைத் தெரிவித்தனர். குடும்ப
உறுப்பினர்களின் விருப்பம்: v குடும்பத்தின் பெரியவரான
பாட்டி பசுவின் மீது தீராத அன்பு கொண்டவர் . பசுவினால் குடும்பத்திற்கு ஏற்படும்
நன்மைகளைக் கூறி அவ்விடத்தில் பசு வாங்கி வளர்க்கலாம் என்றார். v குடும்பத்தின்
அம்மா பாட்டியின் கருத்தை ஏற்க மறுத்து, ”வெண்டை, கத்தரி, தக்காளி
போன்றவற்றை வளர்த்தால் கறிக்கு உதவும்” என்று கூறி தனது விருப்பத்தைத்
தெரிவித்தார். v அக்குடும்பத்தில்
இருந்த தங்கை சௌந்தரா பூக்களிடம் விருப்பம் கொண்டவளாக இருந்தாள். பல்வேறு வகையான
பூக்களை வளர்க்கலாம் என்றாள். அழகை ரசிக்கத் தெரிய வேண்டும் என்றாள். இது
சௌந்தராவிடம் இருந்த இயற்கையை ரசிக்கும் பண்பை உணர்த்துகிறது. அப்பாவின்
முடிவு: அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க, குடும்பத்தின்
தலைவரான அப்பா ,காலியாக்க் கிடக்கும் அந்த இடத்தில்
முருங்கையை நட்டு வளர்க்கலாம் என்று
சொன்னார். ஏனெனில் முருங்கை வீட்டுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மேலும்
மிகுந்த மருத்துவ குணங்களை உடையது. என்று கூறி, இரண்டு
நாட்கள் கழித்து தனது நண்பர் வீட்டிலிருந்து முருங்கைக் கிளை ஒன்றைக் கொண்டு
வந்து அவர் நட்டார். முருங்கை
வீட்டின் அங்கமானது: v நாளுக்கு நாள் முருங்கையின்
வளர்ச்சியை கண்டு மிகவும் ரசித்தன குடும்பத்தினர் அது படிப்படியாக கிளை, இலை, காய்
போன்றவற்றைத் தந்த போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். v முருங்கைக்
காய்க்கும் கீரைக்கும் ஆசைப்பட்டு அண்டை வீட்டு உறவுகள் அடிக்கடி இவர்களது வீட்டிற்கு
வர தொடங்கினர். மேலும் காக்கை
குருவிகளுக்கு இந்த முருங்கை மரம் இல்லமாயிற்று. முருங்கை அவர்களின்
வீட்டின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. மீண்டெழுந்த
முருங்கை: ஒரு நாள் காற்று பலமாக வீசியதால் முருங்கை
அடியோடு விழுந்தது. இதனால் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தை அடைந்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு விழுந்து கிடந்த மரக்கிளையில் இருந்து முருங்கை
துளிர்விடத் தொடங்கியது. அது குடும்பத்தினருக்கு பெரு மகிழ்ச்சி அளித்தது. முடிவுரை: முருங்கை என்பது வெறும் மரமாக குடும்பத்தார்
இல்லை உணர்வில் கலந்த உயிராகவே அமைகிறது பல உயிர்கள் வாழும் வீடாகவும்
திகழ்ந்தது பிரம்மம் பெற உயிர்களை தன் உயிர் போல் நேசிக்கும் பண்பினை
விவரிக்கிறது என்றால் அது மிகையல்ல. (அல்லது) ஆ) புயலிலே ஒரு தோணி முன்னுரை: ”தரைமேல்
பிறக்க வைத்தான் - எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்” பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்காசிய நாடுகளில் பல்வேறு
நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறினர் அவ்வாறு குடியேறிய இனங்களில் தமிழினமும்
ஒன்று.நூலாசிரியர் அவ்வாறு புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒருவர். அவர்
இந்தோனேசியாவில் இருந்தபோது இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்தது ஆசிரியரின் நேரடி
அனுபவங்களோடு கற்பனையும் கலந்த கதைதான் புயலிலே ஒரு தோணி. அதைப்பற்றி இங்கு
காண்போம் விடாது பெய்த மழை: கடுமையான வெயில் மறைந்து,இமை
நேரத்தில் புழுக்கம் ஏற்பட்டது. மேகக் கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது
மீண்டும் மீண்டும் மழை பெய்தது.கப்பலைச் செலுத்தும் மாலுமிகள் பாய் மரத்திலுள்ள
கயிறுகளை இறுக்கி கட்டினர். அனைவரும் செய்வதறியாது திகைத்து
நின்றனர். தள்ளாடிய கப்பல் (தொங்கான்): மழை பெய்வது அதிகரித்தது. காற்றும், மழையும் ஒன்று
கலந்தது.பலகை அடைப்புக்குள் இருந்து கப்பித்தான் “ஓடி வாருங்கள்,
இங்கே ஓடி வாருங்கள்! லெக்காஸ், லெக்காஸ்”
என்று கத்துகிறான். பாண்டியன் எழுந்தான்.இடுக்குகளில்
முடங்கிக்கிடந்த உருவங்கள் தலைதூக்கின.கப்பல் தள்ளாடியது.மலைத்தொடர் போன்ற
அலைகள் தாக்கின.. பயணிகளின் தவிப்பு: பாண்டியன் கடலை பார்த்து மலைத்து நின்றான். கடல் கூத்து நீண்ட
நேரம் தொடர்ந்தது.கப்பல்
தன்வசம் இன்றி, தடுமாறிச் சென்றது.புயல் மயக்கத்திலிருந்து
யாரும் இன்னும் முழுமையாக தெளிவு பெறவில்லை. கப்பித்தான் மேல்தட்டு வந்து
வானையும் கடலையும் ஒரு முறை சுற்றிப்பார்த்தார். பாண்டியன் நிலவரத்தை கேட்டான்.
அதற்கு கப்பித்தான் இரண்டு நாட்களில் கரையை பார்க்கலாம் இனி பயமில்லை என்றார். கரையைக் காணுதல்: ஐந்தாம் நாள் மாலையில் வானோடு வானாய், கடலோடு
கடலாக மரப்பச்சை தெரிவது போல் இருந்தது. சுமார் அரை
மணி நேரத்துக்குப் பின் மீன்பிடிப் படகின் அருகில் விளக்குகள் தென்பட்டன.அடுத்த
நாள் கப்பல் பினாங்கு துறைமுகத்தை அடைந்தது. தொலைதூர கப்பல்கள் கரை முழுவதும் நின்றிருந்தன. முடிவுரை: “இயற்கையைப்
போன்று யாராலும் கொடுக்க முடியாது இயற்கை கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது”
”தமிரோ?”
என்று ஜப்பானிய அதிகாரி கேட்டார்.” யா மஸ்தா”
இன்று தமிழர்கள் தெரிவித்தனர். பயணிகளை சில வினாடிகள் நோட்டமிட்ட
அதிகாரி சீட்டுகளில் முத்திரை வைத்து திருப்பிக் கொடுத்தார். புயலிலே ஒரு தோணி கதையில்
இடம்பெற்றுள்ள வர்ணனைகளும் ,அடுக்குத்
தொடர்களும், ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில் தோணி
படும்பாட்டை தெளிவுற விளக்கின. |
8 |
45 |
அ) நூல் தலைப்பு: கனவெல்லாம் கலாம் அன்று இந்தியாவை
அறியாதவர்கள் கூட காந்தியடிகளை அறிந்திருந்தார்கள், காந்திதேசத்திலிருந்து
வருகிறீர்களா? என்பார்கள். இன்று இந்தியாவை அறியாதவர்களும்
மாமனிதர் அப்துல்கலாம் அவர்களை அறிந்திருக்கிறார்கள்.இந்தியாவின் அடையாளமாக
தமிழர்கள் பெருமையாக அறியப்பட்ட அப்துல் கலாம் அவர்களின் தகவல் களஞ்சியம் தான்
இந்த" கனவெல்லாம் கலாம்” என்ற நூலாகும். இதுவே
இந்நூலின் தலைப்புமாகும். நூலின்
மையப் பொருள்: இந்நூலாசிரியர் மிகவும்
உன்னிப்பாக உற்றுநோக்கி மாமனிதர் அப்துல் கலாம் அவர்களைப் பற்றி வந்த தகவல்கள்,
கட்டுரைகள், கவிதைகள் அனைத்தையும்
தொகுத்துள்ளார்.அப்துல் கலாம் பற்றி அறிய வேண்டிய அனைவரும் படிக்க வேண்டிய
நூல்" கனவெல்லாம் கலாம்” வெளிப்படும்
கருத்து: மாமனிதர் அப்துல்கலாம்
அவர்களின் வெற்றிக்குக் காரணங்கள் எளிமை, இனிமை, நேர்மை ஆகியவையாகும். அவர் உலகப் பொதுமறையை ஆழ்ந்து படித்ததோடு
நின்றுவிடாமல் அதன்படி வாழ்ந்ததால் உலகப்புகழ் பெற்றார் என்பதே உண்மை. நூல்
கட்டமைப்பு: நூலாசிரியர் இந்நூலில்,1.
காணிக்கை கட்டுரைகள்,2. இரங்கல் செய்திகள்,
3.கவிதை மாலை,4. கலாம் அலைவரிசை,5. கலாம் கருவூலம் ஆகிய ஐந்து தலைப்புகளில் நூலை வடிவமைத்துள்ளார். முன்னணி
நாளிதழ்கள், வார இதழ்கள், மாத
இதழ்கள் மட்டுமின்றி சிற்றிதழ்கள் வரை களம் பற்றிய தகவல்களை தேடித் தேடித்
தொகுத்துள்ளார். முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளது உண்மையே. சிறப்புக்
கூறு: பொதுவாக தொகுப்பு நூலை உருவாக்க, தகவல்களைத்
தேடித் தேடி தொகுப்பது எளிதான செயலன்று. ஆனால் அவற்றையெல்லாம் வகுத்து
முறைப்படுத்துவது அதைவிட அரிய செயலாகும். தகவல் தொகுப்பு இந்நூலின் சிறப்புக்
கூறாகக் கருதப்படுகிறது. நூலாசிரியர்: தமிழ்த்தேனீ முனைவர். இரா. மோகன் (அல்லது) ஆ) தலைப்பு: இயற்கையைப்
போற்று (சுற்றுச்சூழல் பாதுகாப்பு) முன்னுரை: நமது சுற்றுச்சூழல் உயிருள்ள காரணிகளையும் உயிரற்ற காரணிகளையும்
உள்ளடக்கியது. மழையும் காற்றும் மரமும் வளமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை
அல்லவா? அத்தகைய வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன்
அவசியத்தையும்,வளங்களின் தற்போதைய நிலையையும் பற்றி
இக்கட்டுரையில் காண்போம். விசும்பின் துளியும்
பசும்புல் தலையும்: ”விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண் பரிது" என்கிறார் வள்ளுவர் .மாதம் மும்மாரி பொழிந்தது இந்நாடு.வளம்மிக்க
இந்நாட்டில் தற்போது நீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.. வெப்பமயமாதலும்
நெகிழிப் பயன்பாடும் தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதில் பெருந்தடையாக
உள்ளன.அதோடன்றி, மரங்கள்
அதிக அளவில் வெட்டப் படுவதும் மழைப்பொழிவு குறைவதற்குப் பெருங்காரணியாக
அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காற்று மாசு: ”உங்கள்
சுவாசத்தை நிறுத்தும் முன் காற்று மாசுபாட்டை நிறுத்துங்கள்” மக்கள் தொகைப் பெருக்கம், மக்கள் நெருக்கம், தொழிற்சாலைக் கழிவு, வாகனப்புகை போன்றவற்றால்
நிலம், நீர்,காற்று அனைத்தும்
மாசடைகிறது. இதனால் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவை சமநிலை பாதிப்புக்கு உள்ளாகி, மனித இனம் பல நோய்களுக்கு ஆட்பட்டு, அழியும்
நிலைக்குத் தள்ளப்படுகிறது. இயன்றவரை மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி, காற்றுமாசுபாட்டைக் குறைக்கலாம். பசுமையைக் காப்போம்: ”மரம்
தான் மரம் தான் எல்லாம் மரம்தான் மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்” சூரிய ஒளி, மழை, தாவரம், காற்று இந்நான்கும் பசுமையை நிலைநாட்டுவன. உலக வெப்பமயமாதல்,
| குளிர்சாதனப்பெட்டி பயன்பாடு போன்றவற்றால்
பாதிப்புக்குள்ளாகும் பசுமையை மீட்டுக் கொணர்வது நமது ஒவ்வொருவரின் கடமையாகும்
வீட்டிற்கு ஒரு தோட்டம், பொதுவிடங்களில் மரக்கன்று
நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல்
போன்ற செயல்களை மேற்கொண்டு நாம் பசுமையை காக்க வேண்டும். மரமும் மழையும்
வரமும் உயிரும்: 'விண்ணின்று
பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி' ஒவ்வொரு மரமும் பல்லாயிரம் உயிர்களுக்குப் புகலிடம் ஆகும். மரமும்
காற்றும் மழைக்கு ஆதாரம் 'ஆகையால், பசி யின்றி வாழவும், தானம் தவம் இரண்டும்
தொடர்ந்து நிலைபெறவும் மழைநீர் அவசியமாகிறது.காடுகள் அழிக்கப்படுவதைத்
தடுப்பதும்,நீர் நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதும்
நீர்வளம் பெருக நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளாகும். முடிவுரை: இயற்கைவளங்கள் தொடர்ந்து மாசுபடுத்தப் படுவது எதிர்காலத்தில்
விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என அறிவியல் அறிஞ்சர்கள்
எச்சரிக்கின்றனர்.மாசில்லா உலகம்; நோயில்லா
பெருவாழ்வு. விண்ணின் மழைத்துளி; மண்ணின்
உயிர்த்துளி. மனதில் நிறுத்துவோம் மானுடம் திருத்துவோம். |
8 |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி