10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JUNE WEEK-1

             10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 02-06-2025 முதல் 06-06-2025        

மாதம்         ஜூன்

வாரம்     :  முதல் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.அன்னை மொழியே                                

1.கற்றல் நோக்கங்கள்   :

     தமிழ்மொழியின் செழுமை குறித்து ஆற்றலுடன் உரையாற்றுதல். 

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்



அன்னை மொழியே - மனப்பாடப் பாடல்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

        Ø  தமிழின் சிறப்பை உணர்த்தும் இனியப் பாடல் பாடி அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

   Ø  பெருமைகள் மிகுந்த தமிழை தலை தாழ்த்தி வணங்குகிறோம்.

    Ø  செழுமை மிக்க தமிழே ! எமக்குயிரே ! சொல்லுதற்கரிய நின் பெருமைதனை என்னுடைய தமிழ் நாக்கு எவ்வாறுதான் விரித்துரைக்கும் ? பழம்பெருமையும் தனக்கெனத் தனிச்சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட தமிழே !   

  Ø  பாடலில் உள்ள நயங்கள் அறிதல் ( எதுகை, மோனை,இயைபு, பொருள் )

5.ஆசிரியர் செயல்பாடு              :

     Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

    Ø  தமிழின் பெருமையை விளக்குதல்

   Ø  கவிதையின் நயங்களை உணர்த்துதல்

6.கருத்துரு வரைபடம்:

அன்னை மொழியே

7.மாணவர் செயல்பாடு:

    Ø  அன்னை மொழியே – மனப்பாடப் பாடலை பிழையின்றி வாசித்தல்
   Ø  பாவலரேறின்  சிறப்புகளை அறிதல்
   Ø அன்னை மொழியே- கவிதையில் உள்ள நயங்களை அறிதல்

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9. மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
    Ø  அன்னை மொழியே பாடலின் ஆசிரியர் யார்?
    Ø  பாப்பத்தே என்பதன் பொருள் யாது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
  Ø  கவிதையில் உள்ள மோனை சொற்கள் யாவை?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
  @ தமிழ் ஏன் அன்னை மொழியாகக் கருதப்படுகிறது?
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

       1001- தமிழ்மொழியின் செழுமை குறித்து தனித்தமிழில் ஆற்றலுடன் உரையாற்றுதல்,கவிதையைப் படித்துச் சுவைத்தல்,பொருளுணர்தல்

Ø   




Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை