8 TH STD TAMIL QUESTION AND ANSWERS UNIT-4 25-26

 


இயல்-4

8.ஆம் வகுப்பு தமிழ்

வினா விடைகள் (2025-2026)

திருக்கேதாரம் 

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காட்டிலிருந்து வந்த_____ கரும்பைத்தின்றன.

அ) முகில்கள்   ஆ) முழவுகள்  இ) வேழங்கள்   ஈ) வேய்கள்

2. ‘கனகச்சுனை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) கனகச் + சுனை ஆ) கனக + சுனை இ) கனகம் + சுனை  )கனம் + சுனை

3. முழவு + அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) முழவுதிர   ஆ) முழவுதிரை   இ) முழவதிர   ஈ) முழவுஅதிர

குறுவினா

தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?

விடை: புல்லாங்குழல் , முழவு

சிறுவினா

திருக்கேதாரத்தைச் சுந்தரர் எவ்வாறு வருணனைசெய்கிறார்?         

v  பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும்.

v  கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ணநீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளைவாரி இறைக்கும்.

v  நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளைவாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் ஆகும்.

சிந்தனைவினா

விழாக்களின்போது இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் எவ்வாறு தோன்றியிருக்கும் என எழுதுக.

விடை: மக்களை மகிழ்விக்கவும், பக்திப்பரவசம் பெருகவும், களிப்பினால் அனைவரும் கவலையை மறக்கவும், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும், விழாக்களைப்பற்றி அறிவிக்கவும் இசைக்கருவிகளை இசைக்கும் வழக்கம் தோன்றியிருக்கும்.

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள் 

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பழந்தமிழ் இலக்கியங்களைப் பாதுகாத்து வைத்தவை______.

அ) கல்வெட்டுகள்  ஆ) செப்பேடுகள்   இ) பனையோலைகள்   ஈ) மண்பாண்டங்கள்

2. பானை______ ஒரு சிறந்தகலையாகும்.

அ) செய்தல்   ஆ) வனைதல்   இ) முடைதல்   ஈ) சுடுதல்

3. ‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) மட்டு + மல்ல  ஆ) மட்டம் + அல்ல  இ) மட்டு + அல்ல  ஈ) மட்டும் + அல்ல

4. கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) கயிற்றுக்கட்டில்  ஆ) கயிர்க்கட்டில் இ) கயிறுக்கட்டில் ஈ) கயிற்றுகட்டில்

பின்வரும் சொற்களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக.

1. முழுவதும்மழையில் எனது உடல் முழுவதும் நனைந்தது

2. மட்டுமல்லாமல் ஏட்டுக்கல்வி மட்டுமல்லாமல் தொழிற்கல்வியும் கற்க வேண்டும்.

3. அழகுக்காக மனிதர்கள் அழகுக்காக அணிகலன்களை அணிவர்.

4. முன்பெல்லாம்முன்பெல்லாம் கல்வி மகிழ்ச்சியானதாக இருந்தது.

குறுவினா

1. எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள் எனக் கூறுகிறோம்?

விடை: அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில்முறையில் உருவாக்கும் கலையைக் கைவினைக்கலை எனலாம்.

2. மண்பாண்டம் , சுடுமண்சிற்பம் - ஒப்பிடுக.

ü  களிமண்னால் குடம். தோண்டி உழக்கு போன்ற பாத்திரம் போன்று உபயோகப்படும் பொருட்கள் மண்பாண்டம் எனப்படும்.

ü  களிமண்ணால் செய்யப்படும் பொம்மைகள்: வீட்டு அலங்காரப் பொருட்கள் சுடுமண் சிற்பங்கள் எனப்படும்.

ü  இவை இரண்டும் களிமண்ணால் செய்யப்பட்டு, காய்ந்ததும் சூளையில் சுட்டு எடுக்கப்படும்.

3. பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?

விடை: விசிறி, தொப்பி, கிலுகிலுப்பை, ஓலைப்பாய்' போன்றவை. பனையோலையால் உருவாக்கப்படும் பொருள்கள் ஆகும்

சிறுவினா

1. பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக் கூறுக.

v  முதலில் பிரம்பினை நெருப்பில் காட்டிச் சூடுபடுத்த வேண்டும்.

v  சூடான நிலையில் நட்டு வைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையில் செலுத்தி வளைக்கவேண்டும்.

v  வேண்டிய வடிவத்தில் கம்பிபோல வளையும். பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்துவிட்டால் அப்படியே நிலைத்துவிடும்.  இவ்வாறே பிரம்பால் பொருட்களைச் செய்ய இயலும்

2. மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து எழுதுக.

ü  மூங்கிலைக் கொண்டு பலவகையான கைவினைப் பொருள்களைச் செய்யலாம்.

ü  மட்டக்கூடை தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி,தெருக்கூட்டும் துடைப்பம், பூக்கூடை, கட்டில் புல்லாங்குழல்,கூரைத்தட்டி போன்றவை மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் ஆகும்.

ü  பிறந்த குழந்தைக்குத் தொட்டில் முதல், இறந்தவரை சுமந்து செல்லும் பாடை பயன்படுத்தப்படுகிறது.

நெடுவினா

தமிழகக் கைவினைக் கலைகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.

v  அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில் முறையில் உருவாக்கும்.கலையைக் கைவினைக்கலை என்று அழைப்பர்.

v  தமிழகத்தில் பழங்காலந் தொட்டே இக்கலை வளர்ந்திருக்கிறது. கைவினைக்கலைக்கு சான்றாக இருப்பது, மண்பாண்டங்கள் ஆகும்.

v  களிமண்ணால் உருவாக்கப்படும் மண்பாண்டங்கள், சுடுமண் சிற்பங்கள் போன்றவை முதன்முதலில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் ஆகும்.

v  மூங்கிலால் செய்யப்படும் பொருட்கள், கோரைகளால் செய்யப்படும் பொருட்கள், பிரம்பால் செய்யப்படும் பொருட்கள், பனையோலையால் செய்யப்படும் பொருட்கள் இவையனைத்தும் கைவினைப் பொருட்கள் ஆகும்.இதனால் இயற்கைக்கு யாதொரு பாதிப்பும் நிகழாது.

v  மரப்பொம்மைகள்,சந்தனமாலைகள்சங்கு,இதுமட்டுமல்லாது. கிளிஞ்சல்களால் செய்யப்படும் காகிதப்பொம்மைகள், பொருட்கள் அத்தனையும் கைவினைப் பொருட்கள் ஆகும்,

சிந்தனைவினா            

கைவினைக்கலைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எழுதுக       

v  பூமியில் விளையும் இயற்கைப் பொருள்கள் எப்பொழுதும் சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்காதவை.

v  களிமண் இயற்கையாக கிடைக்கும் பொருள் இப்பொருளால் உருவாக்கப்படும் கைவினைப்பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு யாதொரு பாதிப்பும் இல்லை.

v  எளிதில் மட்கக் கூடிய  பொருட்களை, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத கைவினைப் விரும்புவோம்!

தமிழர் இசைக்கருவிகள் 

காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக

முன்னுரை:

    மக்களின் மனதிற்கு எழுச்சியைத் தருபவை இசைக்கருவிகள், கருவிகளில் தோல், நரம்பு, காற்று, கஞ்சக் கருவிகள் என பல வகை உள்ளன. அவற்றுள் காற்றுக் கருவிகள் குறித்துக் காண்போம்.

காற்றுக் கருவிகள்:

    காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை காற்றுக்கருவிகளாகும். குழல், சங்கு, கொம்பு ஆகியவை காற்றுக் கருவிகளாகும்.

சூழல் :

    குழல் என்றால் புல்லாங்குழல் ஆகும். காடுகளில் மூங்கில் மரங்களை வண்டுகள் துளை இட்டதால் காற்று வழியாக இசை பிறந்தன. இதனைக் கேட்டும் பார்த்தும் முன்னோர்கள் புல்லாங்குழலை வடிவமைத்தனர்.

கொம்பு:

   கொம்பு இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர், அதுவே, பின்னாளில் 'கொம்பு' என்னும் இசைக்கருவி தோன்றக் காரணமாயிற்று. பித்தளை மற்றும் வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்பட்டன. வேட்டையாடும்போது வேடர்கள் இதனை ஊதுவார்கள். திருவிழாக் காலங்களில் கொம்பினை ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி ஆகிய கொம்புகள் இக்காலத் திருவிழாக்களில் இசைக்கப்படுகின்றது.

சங்கு:

    சங்கு ஓர் இயற்கைக் கருவி. கடலிலிருந்து எடுக்கப்படும் வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை, "வலம்புரிச் சங்கு என்று கூறுவர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்கள் இதனைப் 'பளரிலம்' என்கிறது. திருவிழாக்களிலும், சடங்குகளிலும் சங்கிளை முழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.

முடிவுரை:

   அழித்து வரும் இவ்வகைக் காற்று இசைக்கருவிகளைக் காப்பாற்ற, நாம் ஒவ்வொருவரும் காற்றுக்கருவிகள் ஏதேனும் ஒன்றினைக்கற்று, அதனைப்பயன்படுத்த வேண்டும்.

 

                                                    எச்சம் 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் _____ எனப்படும்.

அ) முற்று ஆ) எச்சம் இ) முற்றெச்சம் ஈ) வினையெச்சம்

2. கீழ்க்காணும் சொற்களில் பெயரெச்சம் _____.

அ) படித்து ஆ) எழுதி இ) வந்து ஈ) பார்த்த

3. குறிப்பு வினையெச்சம் _____ வெளிப்படை யாகக் காட்டாது.

 அ) காலத்தை ஆ) வினையை இ) பண்பினை ஈ) பெயரை

பொருத்துக.

1.     நடந்து - வினையெச்சம்

2.    பேசிய - பெயரெச்சம்

3.    எடுத்தனன் உண்டான் - முற்றெச்சம்

4.    பெரிய – குறிப்புப் பெயரெச்சம்.

கீழ்க்காணும் சொற்களைப் பெயரெச்சம், வினையெச்சம் என வகைப்படுத்துக.

நல்ல, படுத்து, பாய்ந்து, எறிந்த, கடந்து, வீழ்ந்த , மாட்டிய, பிடித்து, அழைத்த, பார்த்து.

    பெயரெச்சம்: நல்ல, எறிந்த, வீழ்ந்த, மாட்டிய, அழைத்த

    வினையெச்சம்:  படுத்து, பாய்ந்து, கடந்து, , பிடித்து, பார்த்து.

சிறுவினா

1. எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

விடை:   பொருள் முற்றுப் பெறாம ல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்.

2. ‘அழகிய மரம்’ – எச்ச வகையை விளக்குக.

விடை: குறிப்புப் பெயரெச்சம்- செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.

3. முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.

விடை:   சான்று : வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.

    இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது.

      இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

4. வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.

விடை:   செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.   எ-டு  : எழுதி வந்தான்

காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.   எ-டு:      மெல்ல வந்தான்

கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.

1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். _ செய்தித்தொடர்

2. கடமையைச் செய்விழைவுத்தொடர்

3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே! _ உணர்ச்சித்தொடர்

4. நீ எத்தனைபுத்தகங்களைப் படித்திருக்கிறாய்? _ வினாத்தொடர்

தொடர்களை மாற்றுக.

1. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)

விடை : என்னே,காட்டின் அழகு!

2. அந்தோ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.)

விடை : பூனையின் காலில் அடிபட்டுவிட்டது

3. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)

விடை : அதிகாலையில் துயில் எழு

4. முகில்கள் திரண்டால் மழைபெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக.)

விடை : முகில்கள் திரண்டால் மழைபெய்யும்

5. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)

விடை : காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?

சரியான இணைச்சொற்களை இட்டு நிரப்புக.

( மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, வாழ்வுதாழ்வு, ஆடிஅசைந்து )

1. சான்றோர் எனப்படுபவர் கல்விகேள்வி களில் சிறந்தவர் ஆவர்.

2. ஆற்று வெள்ளம் மேடுபள்ளம் பாராமல் ஓடியது.

3. இசைக்கலைஞர்கள் போற்றிப்புகழப்பட வேண்டியவர்கள்.

4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு ஈடுஇணை இல்லை

5. திருவிழாவில் யானை  ஆடிஅசைந்து வந்தது.

கடிதம் எழுதுக.

இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.

அனுப்புநர்

     சே.வெண்மதி,

     /பெ  சேரன்,

     562 திருவள்ளுவர் தெரு,

     வளர்புரம் அஞ்சல்,

     அரக்கோணம் வட்டம்,

     இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

பெறுநர்                   

      உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,

      வட்டாட்சியர் அலுவலகம்,

      அரக்கோணம்,

      இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

ஐயா,

     பொருள்: இருப்பிடச்சான்று வழங்கக் கோருதல் சார்பு.

        வணக்கம் . நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எனது மேற்படிப்புச் சேர்க்கைக்காக இருப்பிடச்சான்று தேவைப்படுகிறது.நான் அவ்விடத்தில் வசிப்பதற்கான சான்றுகளாக குடும்ப அட்டை நகலையும், ஆதார் அட்டை நகலையும் இணைத்துள்ளேன்.எனவே எனக்கான இருப்பிடச்சான்று வழங்க விரைந்து  நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

                                                                                                                                                 இப்படிக்கு,

தங்கள் பணிவுடைய,                                                                                                                                               சே.வெண்மதி.

இடம்: அரக்கோணம்,

நாள்: 12-03-2022.

 

உறைமேல் முகவரி:

      உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள்,

      வட்டாட்சியர் அலுவலகம்,

      அரக்கோணம்,

      இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

திருக்குறள்

 

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அரசரை அவரது _____ காப்பாற்றும்.

அ) செங்கோல்   ஆ) வெண்கொற்றக்குடை   இ) குற்றமற்றஆட்சி  ஈ) படைவலிமை

2. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் _____ தகுதி அறிந்து பேசவேண்டும்.

அ) சொல்லின்  ஆ) அவையின் இ) பொருளின் ஈ) பாடலின்

3. ‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) கண்+ ஓடாது  ஆ) கண்+ ணோடாது  இ) க + ஓடாது  ஈ) கண்ணோ+ ஆடாது

4. ‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) கச+ டற   ஆ) கசட + அற  இ) கசடு + உற   ஈ) கசடு + அற

5. என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.

அ) என்றாய்ந்து ஆ) என்றுஆய்ந்து இ) என்றய்ந்து ஈ) என்ஆய்ந்து

குறுவினா

1. நன்மையைத்தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?

விடை:  இச்செயலைஇந்தவகையால் இவர் செய்துமுடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்கவேண்டும்.

2. சிறந்தஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?

விடை : எதையும் நன்கு ஆராய்ந்து ஒருபக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.

3. அரசன் தண்டிக்கும் முறையாது?

விடை : ஒருவர் செய்தகுற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும்.

4. சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?

விடை : கேட்பவரைத்தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.

5. சொற்பொருள் பின்வொரு நிலை அணியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக

அணி இலக்கணம்:

 ஒரு செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளை தந்தால் அது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்

சான்று:

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து

விளக்கம்:

சொல் எனும் ஒரே சொல் ஒரே பொருளில் மீண்டும் மீண்டும் வந்துள்ளதால் இக்குறளில் உள்ளது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.

பின்வரும் நிகழ்வுக்குப் பொருத்தமான திருக்குறளைத்தேர்ந்தெடுக்க.

விடை:

     இதனை  இதனால்  இவன்முடிக்கும்  என்றுஆய்ந்து

     அதனை  அவன்கண்  விடல்.

 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை