10.ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு வினாத்தாள் இயல்-3

 

10.ஆம் வகுப்புதமிழ்  அலகுத்தேர்வு  இயல்-3

பலவுள் தெரிக.                                                                                                                  10×1=10

1. பின்வருவனவற்றுள் முறையான தொடர் எது?

அ) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு.

ஆ) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு.

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு.        

2. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது     அ) சுட்டி  ஆ) கிண்கிணி இ) குழை   ஈ) சூழி

3. காசிக்காண்டம் என்பது

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்  ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்  ஈ) கரசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

4. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை-

அ) நிலத்திற்கேற்ற விருந்து  ஆ) இன்மையிலும் விருந்து

இ) அல்லிலும் விருந்து  ஈ) உற்றாரின் விருந்து.

5. நன்மொழி என்பது

அ) பண்புத்தொகை  ஆ) உவமைத்தொகை  இ) அன்மொழித்தொகை  (ஈ) உம்மைத்தொகை

6. ”அல்லிலாயினும் விருந்து வரின் உவக்கும்” எனக்கூறும் நூல்

அ) நற்றிணை  ஆ) குறுந்தொகை  இ) பரிபாடல்  ஈ) அகநானூறு

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க.

      செம்பொனடிச்சிறு கிங்கிணியோடு சிலம்பு கலந்தாடத்

          திருவரை யரைஞாணரைமணி யொடுமொளி திகழரைவடமாடப்

      பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

          பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாட

7. பாடல் இடம் பெற்ற நூல் 

அ) புறநானூறு ஆ) பரிபாடல் இ) முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் ஈ) பதிற்றுப்பத்து

8. பாடலை இயற்றியவர்

அ) கீரந்தையார்  ஆ) குமரகுருபரர்  இ) அதிவீரராம பாண்டியர்  ஈ) பெருங்கெளசிகனார்

9. பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை நயத்தைத் தேர்க.

அ) பட்ட- நுதல்  ஆ) செம்பொன் -  திருவறை  இ) செம்பொன் – பைம்பொன்  ஈ) நுதல் - பட்ட 

10. பைம்பொன் – என்பதன் இலக்கணக்குறிப்பு

அ) பண்புத்தொகை  ஆ) உவமைத்தொகை  இ) அன்மொழித்தொகை  (ஈ) உம்மைத்தொகை

குறுவினா                                                                                                                         7×2=14

11. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

12. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?

13. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள். விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். - அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.

14. தண்ணீர் குடி, தயிர்க்குடம் - தொகைநிலைத் தொடர்களின் வகையைக் கண்டறிந்து விரித்து எழுதுக.

15. பழமொழியை நிறைவு செய்க: அ. உப்பில்லாப்-- ஆ. ஒரு பானை-- இ) உப்பிட்டவரை—ஈ) விருந்தும்-

16. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக   அ. சிலைசீலை  ஆ. தொடு – தோடு

17. கலைச்சொல் தருக:   அ) Hospitality  ஆ) Wealth இ) Baby shower  ஈ) House warming

சிறுவினா                                                                                                                    3×3=9

18. 'இன்மையிலும் விருந்தோம்பல்' குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.

19, வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய

நயத்தை விளக்குக.                                                                

20. வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

      கோலொடு நின்றான் இரவு     - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

21. ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக

விரிவான விடையளி                                                                                                   2×5=10

22. மொழி பெயர்க்க:                                                 

            Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.

23. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக.

24. காட்சியைக்கண்டு கவினுற எழுதுக.

நெடுவினா                                                                                                               1×7=7

25.அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்வபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.  (அல்லது)

ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

பதிவிறக்க

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை