9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 09-06-2025 முதல் 13-06-2025
மாதம் : ஜூன்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. தமிழோவியம் 2. ஆறாம் திணை
1.கற்றல் நோக்கங்கள் :
@ வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்துப் பொருளுணர்தல்
Ø புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை அனுபவங்களை அறிந்துகொள்ளுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு பதிவிறக்கம் செய்யலாம்)
ஆறாம் திணை
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø தூது விடுதல் என்றால் என்ன? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
Ø தமிழ் சங்ககாலம் தொட்டு சங்கப்பாடல்கள்,சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள்,அகம் ,புறம் ,நவீன இலக்கியங்கள் எனப்பல்வேறு இலக்கிய வடிவங்களுடன் சீரும் சிறப்புமாக வளர்ந்து வருகிறது.அதை மேலும் வளர்ப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
Ø புலம்பெயர் மக்கள் மொழி தெரியாத நாட்டில் தனது உறவுகளைப் பிரிந்து தனது நாட்டையும், உறவுகளையும் காண ஏங்குகின்றனர்.
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø புலம்பெயர் தமிழரின் வாழ்க்கை நிலைகளைச் சான்றுகளுடன் விளக்குதல்.
Ø தமிழின் பல்வேறு இலக்கிய வடிவங்களைப்பற்றி மாணவர்களுக்கு விளக்குதல்
Ø பாடலின் பொருளினை விளக்குதல்
Ø இலக்கணக்குறிப்பை விளக்குதல்
Ø பகுபத உறுப்பிலக்கணத்தை மாணவர்க்குப் புரிய வைத்தல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 9002- வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்து மையப்பொருள் உணர்ந்து சுவைத்தல் மற்றும் அவை போன்ற கவிதை வடிவங்களை எழுதுதல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி