7 TH STD TAMIL SECOND MID TERM MODEL QUESTION PAPER

 

     இரண்டாம் இடைப்பருவத்தேர்வு -மாதிரி வினாத்தாள் (2025-2026)

ஏழாம் வகுப்பு                                       பாடம்- தமிழ்                                     மதிப்பெண்கள்: 50

அ)பலவுள்தெரிக:                                                                                                                 5X1=5

1. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்

அ) வீடு   ஆ) கல்வி   இ) பொருள்   ஈ) அணிக

2. மக்களுக்கு வருமானம் கொடுத்து அவர்களைக் காப்பாற்றியது

அ) பற்றுவரவு  ஆ) சிக்கனம்  இ) கைத்தொழில்  ஈ) கப்பல்

3. காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம்

அ) கல்வி  ஆ) காலம் அறிதல்  இ) வினையறிதல்  ஈ) மடியின்மை

4. வடமொழி என்று அழைக்கப்படும் மொழி

) மலையாளம்  ஆ) கன்னடம்  இ) சமஸ்கிருதம்  ) தெலுங்கு

5. இலக்கிய வகைச் சொற்கள் ----- வகைப்படும்.                 அ) 3    ) 4  ) 5    ஈ) 6

ஆ) பிரித்து எழுதுக                                                                                                             2X1=2

6. உயர்வடைவோம் 7. கேடில்லை 

) சேர்த்து எழுதுக                                                                                                               2X1=2

8. எவன்+ஒருவன்  9. குறை+எனவே                                                                             

) சொற்றொடரில் அமைத்து எழுதுக.                                                                                  3X1=3

9. செல்வம்  10. இளமைப் பருவம்  11. தேர்ந்தெடுத்து

ஈ) நான்கு வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக:                                     4X2=8

12. கல்விச் செல்வத்தின் இயல்புகளாக நாலடியார் கூறும் செய்திகளை எழுதுக

13. இந்திய நாடு எவற்றில் சிறந்து விளங்கியது?

14. மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

15. கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?

16. நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?       17. நாலடியார் – குறிப்பு வரைக

உ) மூன்று வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக:                                     3X2=6

18. இயற்சொல்லின் நான்கு வகைகள் யாவை?

19. குங்குமம், கமலம் என்பன எவ்வகை வடசொற்கள்?

20. திரிச்சொல்லின் வகைகள் குறித்து விளக்குக.                                                                    

21. பண்டிகை, கேணி என்பன எவ்வகைச் சொற்கள்? விளக்குக.

ஊ) இரண்டு வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடை தருக:                                   2X3=6

22. கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக

23. மக்கள் குறையில்லாமல் வாழ, தேயிலைத் தோட்டப் பாட்டு கூறும் வழி யாது?.

24. "கல்விச்செல்வம் அழியாத செல்வம்" எனப்படுவது ஏன்? -சிந்தித்து எழுதுக.

எ. அடிமாறாமல் எழுதுக:                                                                                                      1X4=4

25.  ”வைப்புழி” எனத் தொடங்கும் பாடலை அடி மாறாமல் எழுதுக.                                       

ஏ. விடையளிக்க                                                                                                                 2X2=4

26. ஓர் எழுத்துச் சொற்களால் நிரப்புக    அ. --- புல்லை மேயும். ஆ. ----- சுடும்

27. இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக    அ. ஆறு, ஆ. விளக்கு

. விரிவானவிடையளிக்க:                                                                                                2X5=10

28. . கல்விச் செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக   (அல்லது)

   ஆ. கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர நீங்கள் கூறும் வழிமுறைகள் யாவை?

29.. மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.

(அல்லது)

    ஆ. உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத்தர வேண்டி நூலக ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை