முதல் தொகுத்தறி மதிப்பீடு -மாதிரி வினாத்தாள், 2025
ஏழாம் வகுப்பு பாடம்- தமிழ்
மதிப்பெண்கள்: 60
அ) பலவுள்தெரிக:
5X1=5
1) 'நெறி'
என்னும்
சொல்லின் பொருள்
அ) வழி ஆ) குறிக்கோள் இ) கொள்கை ஈ) அறம்
2) வானில் கூட்டம் திரண்டால் மழை பொழியும்
அ) அகில் ஆ) முகில் இ) துகில் ஈ) துயில்
3) தமிழின் கிளைமொழிகளில் ஒன்று
அ) உருது ஆ) இந்தி இ) தெலுங்கு ஈ) ஆங்கிலம்
4) நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது
அ) பச்சை இலை ஆ) கோலிக்குண்டு இ) பச்சைக்காய் ஈ) செங்காய்
5) வாழை
, கன்றை ________.
அ) ஈன்றது ஆ) வழங்கியது இ) கொடுத்தது ஈ) தந்தது
ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக
4X1=4
6) கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் ---- என
அழைக்கப்படும்.
7) கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது -------
8) உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினைக் கொண்ட அமைப்பு -------
9) கப்பல் கட்டும் கலைஞர்கள் ------என அழைக்கப்படுவர்
10) பெயர்ப்பகுபதம்------வகைப்படும்.
11) பேச்சுமொழியை------ வழக்கு என்றும்
கூறுவர்
இ) பொருத்துக
4X1=4
12) பெயர்ப் பகுபதம் – பெரியார்
13) வினைப் பகுபதம் - வாழ்ந்தான்
14) இடைப் பகாப்பதம் - மன்
15) உரிப் பகாப்பதம் - நனி
ஈ) ஐந்து
வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக: 5X2=10
16) தமிழ்
மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
17) தமிழ்நாட்டின்
இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
18) பேச்சுமொழி
என்றால் என்ன?
19) காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை ?
20) சிறுவர்களுக்கு
நாவல் பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
21) கப்பலின்உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.
22) உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார்?
உ) மூன்று
வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடை தருக:
3X4=12
23) இந்தியத்தாய் எவ்வாறு
காட்சியளிக்கிறாள்?
24) நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் கொண்ட தொடர்புப் பற்றி எழுதுக.
25) பண்டைத்
தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றிக் கூறுக.
26) ‘காடு’ பாட லில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை
எழுதுக.
27) 'குற்றியலுகரம்' என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம்
தருக.
எ) அடிமாறாமல்எழுதுக:
4+2=6
28)”வானம் ஊன்றிய”
எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
29) “ வாய்மை“
எனத்தொடங்கும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக
ஏ)விடையளி
1X6=6
30) அ பாடப்பகுதிப்
பொம்மலாட்டக் காட்சிகளைச் சிறுகதையாக எழுதுக.
(அல்லது)
ஆ. எவையேனும்
மூன்று வனவிலங்குகள் பற்றி செய்திகளைத் தொகுத்து எழுதுக
ஐ. அனைத்து வினாக்களுக்கும் விடையளி 4X2=8
31) பிரித்து எழுதுக: அ. பொருட்செல்வம் ஆ. விலங்கொடித்து
32) சேர்த்து எழுதுக : அ.
இதம் + தரும் ஆ. வான் + ஒலி
33) கலைச்சொல் எழுதுக. 1.
MEDIA 2. STORM
34) அகம் என முடியும் 4 சொற்களை
எழுதுக
எ) கட்டுரை எழுதுக
1X5=5
33) அ. நான் விரும்பும் தலைவர் என்ற தலைப்பில் கட்டுரை வரைக
(அல்லது)
ஆ.
கொடுக்கப்பட்டுள்ள
குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
(முன்னுரை – மொழி பற்றிய விளக்கம் – தாய்மொழி – தாய்மொழிப் பற்று - தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர் –நமது கடமை – முடிவுரை)
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி