9.ஆம் வகுப்பு
– தமிழ் அலகுத்தேர்வு இயல்-3
பலவுள் தெரிக. 9×1=9
1.
பெயரடை இடம்பெறாத தொடரைக் கண்டறிக
அ) நல்ல நண்பன் ஆ) இனிய வணக்கம் இ) எந்த ஓளியம்? ஈ) கொடிய
விலங்கு
2.
முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான
ஏறுதழுவுதல்
ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
தொன்மையான,
இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின்
ஏறுதழுவுதல்
ஈ)
தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
3.
பைங்கூழ் வளர்ந்தது. ஆகுபெயரின் வகையைக் கண்டறிக
அ) காலவாகுபெயர் ஆ) காரியவாகுபெயர் இ) கருவியாகுபெயர் ஈ) கருத்தாவாகுபெயர்
4.
தோரண வீதியும், தோமறு கோட்டியும் -
சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
அ) ஏவல் வினைமுற்று ஆ) வினைத்தொகை இ) எண்ணும்மை ஈ) பண்புத்தொகை
5.
பொருந்தாத தொடரைக் கண்டறிக.
அ) பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாளும் ஒருவர்.
ஆ) சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று ஆண்டாள்
அழைக்கப்படுகிறார்.
இ) திருவெம்பாவையை இயற்றியவர் ஆண்டாள்.
ஈ) நம்மாழ்வாரின் மகளாவார் ஆண்டாள்.
பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
ஒளிறுவாள்
மறவரும் தேரும் மாவும்
களிறும்
சூழ்தரக் கண்முரசு இயம்பி
பசியும்
பிணியும் பகையும் நீங்கி
வசியும்
வளனும் சுரக்க! என வாழ்த்தி;
அணிவிழா
அறைந்தனன் அகநகர் மருங்கென்.
6. இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ) நீதி நூல் திரட்டு ஆ) புறநானூறு இ) முக்கூடற்பள்ளு ஈ)
மணிமேகலை
7. மறவரும்,தேவரும் - இச்சொல்லிற்கான இலக்கண குறிப்பு
அ) உம்மைத்தொகை ஆ) எண்ணும்மை
இ) ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் ஈ) அன் முடித்தொகை
8. பாடலில் இடம்பெற்ற மோனைச் சொற்களைத் தேர்ந்தெடு
அ) ஒளிருவாள்- களிரும் ஆ) தேரும் – மாவும் இ) வசியும் – வளனும் ஈ)
பகையும் - நீங்கி
9. இப்பாடலின் ஆசிரியர்
அ) இளங்கோவடிகள் ஆ) கம்பர் இ) சீத்தலைச்சாத்தனார் ஈ) திருத்தக்க தேவர்
குறுவினா 7×2=14
10. நீங்கள் வாழும் பகுதியில் எறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
11. பழமணல்
மாற்றுமின்; புதுமணல் பரப்புமின் – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
12. நிலம் போல யாரிடம்
பொறுமைகாக்கவேண்டும்?
13. காலவாகுபெயர் - குறிப்பு தருக.
14. பகுபத
உறுப்பிலக்கணம் தருக: அறைந்தனன்
15.
மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து
எழுதுக அ. மேடும் பள்ளமும் ஆ.நகமும்
சதையும்
16.
கலைச்சொல் தருக: அ.
Archaeology ஆ. Excavation
சிறுவினா (வினா எண்:
20 கட்டாய வினா) 3×3=9
17. ஏறுதழுவுதல்,
திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
18. திருப்பாவை
குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக.
19. உவமை அணியைச் சான்றுடன் விளக்குக
20. ”மிகுதியான்” எனத்தொடங்கும் குறளையும், ”தரும்”என முடியும் குறளையும் அடிமாறாமல்
எழுதுக.
விரிவான விடையளி 2×5=10
20.
பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப்
பாதுகாக்க நாம்
செய்யவேண்டிய செயல்களைத்தொகுத்து எழுதுக
21.
அ. பொன்மொழிகளை மொழி பெயர்க்க
1. A nation's culture resides in the hearts and in the soul
of its people Mahatma Gandhi
2. The art of people is a true mirror to their minds
Jawaharlal Nehru
3. The biggest problem is the lack of love and charity
Mother Teresa
4. You have to dream before your dreams can come true A.P.J.
Abdul Kalam
5. Winners don't do different things; they do things
differently Shiv Khera (அல்லது)
ஆ. பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சிகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக
23. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
நெடுவினா 1×8=8
24. அ. ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று
போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க.
(அல்லது)
ஆ. ’தாய்மைக்கு
வறட்சி இல்லை’ என்னும் சிறுகதையில்வரும் ஏழைத்தாயின் பாத்திரப்படைப்பை விளக்குக
வினாத்தாளைப் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி