10.ஆம்
வகுப்பு – தமிழ்
பா நயம் பாராட்டல் வினா விடைகள்
1.
காலக்கணிதம் கவிதையில்
பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக
கவிஞன் யானோர்
காலக் கணிகும்.
கருப்படு பொருளை
உருப்பட வைப்பேன்!
நானோர் புகழுடைத்
தெய்வம்
பொன்னிலும்
விலைமிகு பொருளென் செல்வம்!
இவைசரி யென்றால்
இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின்
எதிர்ப்பதென் வேவை!
ஆக்கல் அளித்தல்
அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே
அறிந்தவை;
அறிக!
- கண்ணதாசன்
திரண்ட கருத்து:
கவிஞன் நானே
காலத்தைக் கணிப்பவன். உள்ளத்தில் உதிக்கும் பொருளை வார்த்தை வடிவம் கொடுத்து ஒரு
உருவமாய் அவற்றை நான் படைப்பதால் இப்பூமியில் நானும் புகழ்பெற்ற தெய்வம்.
பொன்னைவிட விலை உயர்ந்த செல்வம் என்னுடைய கருத்துகள்.சரியானவற்றை எடுத்துச் சொல்வதும், தவறானவற்றை
எதிர்ப்பதும் என் பணி. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று பணிகளும் நானும் கடவுளும் அறிந்தவை.
மோனை நயம்:
செய்யுளில் அடியிலோ சீரிலோ
முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.
ü கவிஞன்- கருப்படு
ü இவை சரி - இவை தவறாயின்
எதுகை நயம்:
செய்யுளில் இரண்டாம்
எழுத்து ஒன்றி வருவதுஎதுகையாகும்.
·
கருப்படு
- பொருளை - உருப்பட
முரண் நயம்:
பாட்டுக்கு முரண்
செய்யுளில் அடியிலோ சீரிலோ எதிரெதிர் பொருள் தரும் வகையில் தொடுக்கப் படுவது முரண்
ஆகும். ஆக்கல் ×
அழித்தல்
என்று முரண்பட்ட சொற்கள் அமைத்து தொடுத்திருப்பதால் முரண் நயமும் உள்ளது.
இயைபு நயம்:
அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ
இயைந்து வரத் தொடுப்பது இயைபு ஆகும்.
·
புகழுடைத்
தெய்வம் ...பொருளென் செல்வம்
அணி நயம்:
கண்ணதாசன்
இப்பாடலில், கடவுளுக்கு இணையாக யானோர் காலக்கணிதம் என உருவகப்படுத்தி உள்ளதால்
இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.
·
நானோர்
புகழுடையத் தெய்வம்
சந்த நயம்:
சந்தம் தமிழுக்குச்
சொந்தம் என்பதற்கு ஏற்ப,
இப்பாடலில் 'எண்சீர் கழிநெடிலடி' ஆசிரிய விருத்தம் இடம் பெற்றுள்ளது. அகவலோசையுடன் இனிய சந்த நயமும்
பெற்றுள்ளது.
2. தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே
தென்னாடு விளங்குறத் திகழுந்தென் மொழியே
ஊனினும் ஒளிர்வுறும் ஒண்டமிழ் மொழியே
மாந்தருக் கிருகணா வயங்குநன் மொழியே
வானினும் ஓங்கிய வண்டமிழ் மொழியே
தானனி சிறப்புறுந் தனித்தமிழ் மொழியே
தழைத்தினி தோங்குவாய் தண்டமிழ் மொழியே
திரண்ட கருத்து:
தேனை விட இனிய செந்தமிழ் மொழியே! தென்னாடு பெருமைக் கொள்ளும் தென்மொழியே! உடம்பில் ஒளிவிட்டு விளங்கும் உயர்ந்த மொழியே! உணர்வுக்கு உணர்வாக விளங்கும் மொழியே! வானை விட புகழைக் கொண்ட மொழியே! மாந்தர்களுக்கு இரு கண்களாக விளங்கும் நன்மொழியே! தானாகவே சிறப்புற்று விளங்கும் தனித்தமிழ் மொழியே! தழைத்து இனிது உயர்வாய் எம்மொழியே.
மையக் கருத்து:
தமிழ்மொழியின் சிறப்புகளை கூறி, மொழி தழைத்து வளரும் தன்மையினைக் கூறுகிறார்.
மோனை :
சீர் தோறும் அடி தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை.
தேனினும் – தென்னாடு
ஊனினும் – உணர்வினும்
எதுகை :
சீர் தோறும் அடி தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
இயைபு :
அடிதோறும் சீரோ,எழுத்தோ,ஓசையோ ஒன்றி வருவது இயைபு.
மொழியே – மொழியே
சந்த நயம் :
எண் சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
அணி:
மொழியின் சிறப்பாக உயர்வாக கூறியுள்ளமையால் உயர்வு நவிற்சி அணி பயின்று
வந்துள்ளது.
3. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும்
விழி வண்ணமே வந்து
விடித்தும் விடியாத காலைப்
பொழுதாக
வினைந்த
கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில்
தலைசீவி
துந்த
இனந் தென்றலே - வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர்
கண்டு
பொலிந்த
தமிழ் மன்றமே
-கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும்
பாராட்டி உரைசெய்க
திரண்ட
கருத்து
:
பாதி மலர்ந்த மலரைப்போலவும், பாதி விடிந்த காலைப் பொழுதைப்போலவும் உள்ள காற்றே,
நீ இளந்தென்றலாக வரும் போது நதிகளை வருடியும், செடி கொடிகளை
வருடியும் வருகிறாய். உன்னைப் போலவே தமிழும் அனைவராலும் விரும்பத்தக்கதாய்
இருக்கிறது. பொதிகை மலையில் தோன்றி, மதுரையிலே சங்கத்தில் வளர்ந்த
அழகிய தமிழை ஒத்த காற்றே என்கிறார் கவியரசர்.
மோனை
நயம்:
மலர்ந்தும் - மலராத; வளரும் - வண்ணமே
போன்ற சொற்களில் முதலெழுத்து
ஒன்றி வந்து மோனை நயத்துடன் இப்பாடல் சிறக்கின்றது.
எதுகை
நயம்:
நதியில் - பொதிகை; விடிந்தும் - விடியாத
போன்ற சொற்களில் இரண்டாம்
எழுத்து ஒன்றி வந்து எதுகை நயம் எழிலுடன் இடம்பெற்றுள்ளதை அறியமுடிகிறது.
முரண்
நயம்:
மலர்ந்தும் × மலராத; விடிந்தும்
× விடியாத
போன்ற சொற்கள் எதிர்சொற்களாக
அமைந்து முரண்நயத்தை வெளிப்படுத்துகின்றன.
இயைபு
நயம்:
வண்ணமே - அன்னமே - மன்றமே
என இப்பாடலின் இறுதியெழுத்துகள் ஒன்றாய் அமைந்து இயைபு நயத்துடன் காணப்படுகின்றது.
அணி
நயம்:
'மலர்ந்தும் மலராத பாதிமலர்
போல' என்னும் அடிகள் இப்பாடலில் உவமையணி இடம்பெற்றுள்ளதை
உணர்த்துகின்றது.
4. “ கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்
போது அரிசிவரும் – குத்தி
உலையிலிட
ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்
இலையிலிட
வெள்ளி எழும் “
காளமேகப் புலவர்
திரண்ட
கருத்து:
நாகப்பட்டிணத்தில்
காத்தான் சத்திரத்தில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுவதால் இருட்டு வரை அரிசி இருக்க்கும். அரிசி குத்தி உலையிடுவதும்,அன்னமிடுவதும் தொடர்ந்து கொண்டிருப்பது ஊராரின் பசியை அடக்கும்.அன்னம் இலையிலிட வெள்ளி முளைக்கும்.
பொருள்
நயம்:
அத்தமிக்கும்
போது அரிசிவரும் – குத்தி
உலையிலிட
ஊரடங்கும்
இலையிலிட
வெள்ளி எழும். ஆகியன ஆழமான பொருள் உடையன.
சந்த நயம் :
பாடுவதற்கேற்ற
சந்த நயம் பயின்று வந்துள்ளது.
மோனை
நயம் :
முதலெழுத்து
ஒன்றி வரத் தொடுப்பது மோனை.
கத்துக்கடல் - காத்தான்
அத்தமிக்கும் - அரிசி
எதுகை
நயம் :
இரண்டாம் எழுத்து ஒன்றி
வரத் தொடுப்பது.
கத்துகடல் - சத்திரத்தில்
உலையிலிட - இலையிலிட
முரண்
நயம் :
முரண்பட்ட
சொற்களால் அமைவது முரண் நயம்.
அத்தமிக்கும் × வெள்ளி எழும்.
இயைபு
நயம் :
பாடலில்
கடைசி எழுத்தோ,சீரோ,அசையோ,ஓசையோ இயைந்து வருவது.
அரிசி
வரும் – வெள்ளி எழும்.
அணி
நயம்:
சொற்கள்
பிரிவுபடாமல் நின்று இரு பொருளை தருவதால் இதில் செம்மொழிச் சிலேடை அணி பயின்று
வந்துள்ளது.
5. கோடையிலே இளைப்பாற்றிக்
கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே
தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே
ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர்
இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே
வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில்
விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே
எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற
அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
-
வள்ளலார்.
திரண்ட
கருத்து :
கோடை
வெப்பத்தில் துன்பப்படுகிறவர்களுக்கு இளைப்பாற ஏற்ற குளிர்ந்த மரம் போன்றவனாகவும்,அம்மரம் தரும் நிழல் தருபவனாகவும், அந்நிழலிடத்தில் மரத்தில் பழுத்த பழமாகவும், அதனை ஒட்டி அமைந்த் நீரோடையில் ஓடும் இன்சுவை நீராகவும், அந்த ஓடையில் மலர்ந்த நறுமணமிக்க மலராகவும், மென்மையாக வீசுகின்ற பூங்காற்றாகவும், அந்த காற்றினால் சுகத்தை தருபவனாகவும், சுகத்தில் உண்டான இன்ப பயனாகவும், சிறு வயதில் என்னை மணந்த மணவாளனாகவும் இருக்கும் அம்பலத்தில்
ஆடும் அரசே என் பாமாலையை ஏற்றுக் கொள்க.
மையக்
கருத்து:
வள்ளலார்
அனைத்துப் பொருட்களிலும் இறைவனைக் காணுகிறார். அதனை பாமலையாக சூட்டுகிறார்.
மோனை :
சீர்தோறும்
அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.
கோடையிலே - குளிர்தருவே
ஓடையிலே - உகந்ததண்ணீர்
மேடையிலே - மென்காற்றில்
ஆடையிலே - ஆடுகின்ற
எதுகை :
சீர்
தோறும் அடி தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி
வருவது எதுகை.
கோடையிலே - ஓடையிலே
மேடையிலே - ஆடையிலே
இயைபு :
அடிதோறும் இறுதியில்
உள்ள எழுத்தோ,அசையோ,சீரோ ஒன்றி வருவது இயைபு.
கனியே – தண்ணீரே
மலரே - காற்றே
பயனே - அருளே
அணி நயம் :
இப்பாடல்
இறைவன மரமாகவும்,
நிழலாகவும், கனியாகவும், மலராகவும், தென்றலாகவும் பாடியிருப்பதால் உருவக அணி வந்துள்ளது.
சந்த நயம் :
அடிதோறும் எட்டு சீர்களைப்
பெற்றுள்ளதால் எண் சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி