10 TH STD TAMIL SLOW LEARNERS STUDY MATERIAL UNIT-4 2025-2026

 இயல்-4

10.ஆம் வகுப்பு தமிழ்


மெல்லக் கற்போர் வினா விடைகள் (2025-2026) 

திறன் அறிவோம்

பலவுள் தெரிக.

1. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?

அ) திருக்குறன் ஆ) கம்பராமாயணம்  இ) கலித்தொகை  ) சிலப்பதிகாரம்

2. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் இடைக்காடனாரிடம் அன்பு வைந்தவர்

அ) அமைச்சர்.மன்னன் ஆ) அமைச்சர், இறைவன் இ) இறைவன், மன்னன்  ) மன்னன், இறைவன்

3. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது

அ) இட வழுவமைதி  ஆ) பால் வழுவமைதி  இ) திணை வழுவமைதி  ) கால வழுவமைதி

4. இரவிந்திரநாத தாகூர் ------ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை --==----மொழியில், மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.

அ) ஆங்கில வங்காளம் ) வங்காள, ஆங்கில  இ) வங்காள, தெலுங்கு  ) தெலுங்கு, ஆங்கில

5. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?

அ) யாம் ஆ) நீவிர்  ) அவர்  ) நாம்

குறுவினா

1. கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்"

-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?

விடை: குலேசபாண்டியன், இடைக்காடனார்

2. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

விடை:

v  மொழிவளம் பெருகும்.

v  பிறரது பண்பாடு, நாகரிகத்தை அறியலாம்.

3. அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக

விடை: அமர்+த்(ந்)+த்+ஆன்

      அமர்-பகுதி, த்-சந்தி,  ந்-விகாரம், த்-இறந்தகால இடைநிலை , ஆன் - ஆண்பால் விகுதி

4. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை தேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செய்கிறேன் இந்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

விடை:  உறுதித் தன்மை - காலவழுவமைதி.

5. சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் -இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருந்தி எழுதுக.

விடை: "சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிர கடிக்காது " என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.

சிறுவினா

1. மன்னன் இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்தது என்? விளக்கம் தருக.

விடை:

ü  பாடலை மதிக்கவில்லை

ü  புலவர் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் தென்கரையில் தங்கினார்.

ü  மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

2. பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?

விடை:

ü  ஊடகங்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

ü  வணிக விளம்பரங்களுக்கு உதவுகிறது.

ü  புதுவகையான சிந்தனைகளுக்கு உதவுகிறது.

3. ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு.

ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரித்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (cranslati) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது: ஆனாய் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிகேட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர்கள் தம்முன் உள்ள காதணிகேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வர். இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

விடை:

1)    மொழிபெயர்ப்பு என்பது யாது?

2)   I n t e r p r e t i n g என்பதன் தமிழாக்கம் என்ன?

3)   மொழிபெயர்ப்பாளர்கள் எங்கு அமர்ந்திருப்பார்கள்?

4)   ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது----என்று சொல்லப்படுகிறது.

5)   அவைப்பேச்சாளர்கள் உரையைப் பார்வையாளர்கள் எப்படிப்புரிந்து கொள்வர்?

4. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், 'இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்" என்றார். 'இதோ சென்றுவிட்டேன்' என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, 'என்னடா விளையாடவேண்டுமா?" என்று கேட்டேன். என் தங்கையும் அங்கே வந்தாள். அவனிடம், "நீயும் இவனும் விளையாடுங்கள்' என்று கூறிவேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தான். இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக. ஏதேனும் இரண்டு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

விடை:

1.    குட்டி- மரபு வழுவமைதி

2.   இலட்சுமி கூப்பிடுகிறாள்-திணை வழுவமைதி

3.   இதோ சென்றுவிட்டேன்கால வழுவமைதி

4.   அவனைபால் வழுவமைதி                           

நெடுவினா

1. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்ந்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

விடை:

ü  பாடலை மதிக்கவில்லை

ü  புலவர் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் தென்கரையில் தங்கினார்.

ü  மன்னன் இறைவனைக் காணச்சென்றார்

ü  இறைவன் தவறைச் சுட்டிக்காட்டினார்.

ü  மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

2. கற்கை நன்றே கற்கை நன்றே

   பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

குறிப்புச்சட்டகம்

·        முன்னுரை

·        கல்வியில் வென்ற மேரி

·        முடிவுரை

முன்னுரை:

                                                          

மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இங்கு காண்போம்.

கல்வியில் வென்ற மேரி:

·        மேரியின் குடும்பம் வறுமையான குடும்பம்.

·        பருத்தி எடுக்கும் வேலை செய்தனர்.

·        மேரிக்கு படிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது.

·        மேரி ஒரு இடத்தில் அவமதிக்கப்பட்டாள்

·        மிஸ் வில்சன் என்பவர் மேரிக்கு உதவி செய்தார்

·        மேரி கல்வியால் முன்னேறினாள்

முடிவுரை:

           மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இங்கு கண்டோம்.

3. தமிழின் இலக்கிய வளம்- கல்வி மொழி - பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்- அறிவியல் கருத்துகள்- பிற துறைக் கருத்துகள் - தமிழுக்குச் செழுமை.    மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

குறிப்புச்சட்டகம்

·        முன்னுரை

·        மொழிபெயர்ப்புக் கலை

·        முடிவுரை

 

முன்னுரை :

தமிழின் இலக்கிய வளம்,  கல்வி மொழி, பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள், அறிவியல் கருத்துகள், பிற துறைக் கருத்துகள்,  தமிழுக்குச் செழுமை மொழிபெயர்ப்பும் தொடக்கமும் பற்றி இங்கு காண்போம்.

மொழிபெயர்ப்புக்கலை:

·        சங்க காலத்திலேயே மொழிபெயர்ப்பு இருந்தது

·        வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப் பட்டன

·        கம்பர் மொழிபெயர்ப்பு மூலம் சிறப்பு பெற்றார்

·        பல்துறை வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு அவசியம்

·        அனைத்துலக அறிவைப் பெற முடியும்

முடிவுரை :

தமிழின் இலக்கிய வளம்,  கல்வி மொழி, பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள், அறிவியல் கருத்துகள், பிற துறைக் கருத்துகள்,  தமிழுக்குச் செழுமை மொழிபெயர்ப்பும் தொடக்கமும் பற்றி இங்கு கண்டோம்.

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

விடை: அழகிய  கடம்பவனத்தை விட்டு இறைவன்           நீங்கினான்

2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

விடை: நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

3. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

விடை: நல்ல வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

4. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

விடை: சிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

5. குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.

விடை: சுட்டிக் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்

மொழியோடு விளையாடு:

புதிர்ப்பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க.

தார்போன்ற நிறமுண்டு கரியுமில்லை

பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமுமில்லை

சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியுமில்லை

சோர்ந்து போகாமல் வீடமைப்பேன் பொறியாளருமில்லை

வீட்டுக்கு வருமுன்னே, வருவதைக் கூறுவேன்.    நான் யார்?

விடை : காகம்

தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.

1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் ----- யாவும், அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் ---- நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும். (புதையல், புதைத்தல்)

விடை : புதையல், புதைத்தல்

2. காட்டு விலங்குகளைச்----தடை செய்யப்பட்டுள்ளது உதவுகிறது. செய்த தவறுகளைச்----            திருந்த உதவுகிறது.  (சுட்டல், சுடுதல்).

விடை : சுடுதல், கட்டல்

3. காற்றின் மெல்லிய ----- பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான ----பூக்களை மாலையாக்குகிறது. (தொடுத்தல், தொடுதல்)

விடை : தொடுதல், தொடுத்தல்

4.  பசுமையான----- ஐக் ------ கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)

விடை:  காட்சி, காணுதல்

5. பொதுவாழ்வில்-----கூடாது. ----- இல் அவரை மிஞ்ச, ஆள் கிடையாது. (நடித்தல், நடிப்பு)

விடை : நடித்தல், நடிப்பு

நிற்க அதற்குத்தக:

பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

படிப்போம் பயன்படுத்துவோம் (கலைச்சொற்கள்)

1.     Translation - மொழி பெயர்ப்பு

2.    Culture பண்பாடு

3.    Human Resourceமனிதவளம்

4.    Transferமாறுதல்

5.    Multi mediaபல்துறை ஊடகம்

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை