10 TH STD TAMIL MODEL NOTES OF LESSON JUNE WEEK-4

              10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 23-06-2025 முதல் 27-06-2025      

மாதம்         ஜூன்

வாரம்     : நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                                 

பாடத்தலைப்பு     :   1. கேட்கிறதா என்குரல்

                                             2. பரிபாடல்

1.கற்றல் நோக்கங்கள்   :

      @ காற்று மாசுபாடு குறித்துக் கலந்துரையாடி விழிப்புணர்வு பெறுதல்.

       Ø  அறிவியல் கருத்துகள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட் டுத்திறனைப் படித்துணர்ந்து எதிர்வினையாற்றல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

கேட்கிறதா என்குரல்


பரிபாடல் 

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

       Ø  உயிரை உள்ளிருத்தும் காற்று, ஓர் உருவம்   கொண்டு  நம்மிடம் பேசினால்…எவ்வாறு இருக்கும் எனக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.

        Ø  மாணவர்கள் அன்றாடம் செய்யும் செயல்களில் பொதிந்துள்ள அறிவியலைப் பற்றித் தெரியுமா? என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம்  செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

      உயிராக நான் ,பலபெயர்களில் நான்,இலக்கியத்தில் நான், நான்கு திசையிலும் நான்,முந்நீர் நாவாய் ஓட்டியாக நான் ,தடன் பதிப்பேன் நான் என்னும் தலைப்புகளில் காற்று மனித வாழ்விற்கு எவ்வளவு நலன்களைச் செய்கிறது என விளக்குதல்

      பரிபாடல் எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகும். பாடப்பகுதியிலுள்ள பாடலைஎழுதியவர் கீரந்தை யார். இந்நூல் “ஓங்கு பரிபாடல்” எனும் புகழுடையது. 

5.ஆசிரியர் செயல்பாடு              :

        Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

       Ø   பரிபாடலின் பொருளை உணர வைத்தல்

       Ø  இலக்கணக்குறிப்பைப் புரிய வைத்தல்

       Ø  கவிதையின் நயங்களை உணர்த்துதல்

       Ø  காற்று பல்வேறு வடிவங்களின் எவ்வாறு மனிதர்களுக்குப் பயன்படுகிறது என்பதை விளக்குதல்

       Ø  காணொளிகள் மூலம் பாடத்தை விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:

கேட்கிறதா என்குரல்

பரிபாடல்



7.மாணவர் செயல்பாடு:

         Ø  சங்க இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்
        Ø  பாரதியார் பற்றிய குறிப்புகளை அறிதல்
       @ காற்று எவ்வெவ்வடிவங்களில் மனிதனுக்குப் பயன்படுகிறது என்பதை அறிதல்
       Ø  காற்று ஆற்றல் வடிவில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிதல்
       @ பருவமழை எவ்வாறு உருவாகிறது என அறிதல்.

8.வலுவூட்டல்:

     Ø  கவிதையை மீண்டும் வாசித்தல்

          Ø  விரைவுத் துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
     Ø பரிபாடல்----நூல்களுள் ஒன்று
     Ø உலக காற்றுநாள் எப்போது கொண்டாடப் படுகிறது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
     Ø  பாடலில் உள்ள மோனை சொற்கள் யாவை?
உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
      @ உலகம் எவ்வாறு உருவானது? 
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

       1006 இயற்கையின் இன்றியமையாத ஆற்றலான காற்றின் தேவையையும் காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வையும் ஊட்டத்தக்கவாறு மொழியைப் பயன்படுத்துதல்.

Ø          @  1019- செய்யுள் கருத்துகயைொடு அறிவியல் பெய்திகளை ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளுதல்.






 

Post a Comment

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை