10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 23-06-2025 முதல் 27-06-2025
மாதம் : ஜூன்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. கேட்கிறதா என்குரல்
2. பரிபாடல்
1.கற்றல் நோக்கங்கள் :
@ காற்று மாசுபாடு குறித்துக் கலந்துரையாடி விழிப்புணர்வு பெறுதல்.
Ø அறிவியல் கருத்துகள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட் டுத்திறனைப் படித்துணர்ந்து எதிர்வினையாற்றல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø உயிரை உள்ளிருத்தும் காற்று, ஓர் உருவம் கொண்டு நம்மிடம் பேசினால்…எவ்வாறு இருக்கும் எனக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்.
Ø மாணவர்கள் அன்றாடம் செய்யும் செயல்களில் பொதிந்துள்ள அறிவியலைப் பற்றித் தெரியுமா? என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
@ உயிராக நான் ,பலபெயர்களில் நான்,இலக்கியத்தில் நான், நான்கு திசையிலும் நான்,முந்நீர் நாவாய் ஓட்டியாக நான் ,தடன் பதிப்பேன் நான் என்னும் தலைப்புகளில் காற்று மனித வாழ்விற்கு எவ்வளவு நலன்களைச் செய்கிறது என விளக்குதல்
@ பரிபாடல் எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகும். பாடப்பகுதியிலுள்ள பாடலைஎழுதியவர் கீரந்தை யார். இந்நூல் “ஓங்கு பரிபாடல்” எனும் புகழுடையது.
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø பரிபாடலின் பொருளை உணர வைத்தல்
Ø இலக்கணக்குறிப்பைப் புரிய வைத்தல்
Ø கவிதையின் நயங்களை உணர்த்துதல்
Ø காற்று பல்வேறு வடிவங்களின் எவ்வாறு மனிதர்களுக்குப் பயன்படுகிறது என்பதை விளக்குதல்
Ø காணொளிகள் மூலம் பாடத்தை விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
Ø கவிதையை மீண்டும் வாசித்தல்
Ø விரைவுத் துலங்கல் குறியீடு மூலம் கற்றலுக்கு வலுவூட்டல்
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 1006 - இயற்கையின் இன்றியமையாத ஆற்றலான காற்றின் தேவையையும் காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வையும் ஊட்டத்தக்கவாறு மொழியைப் பயன்படுத்துதல்.
Ø @ 1019- செய்யுள் கருத்துகயைொடு அறிவியல் பெய்திகளை ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளுதல்.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி