|
மாதிரி பொதுத்தேர்வு-3
(2025-2026) 10.
ஆம் வகுப்பு
தமிழ் மொத்த மதிப்பெண்கள்:
100 நேரம் : 3.00 மணி+15 நிமிடங்கள் |
|
குறிப்புகள் :
i)
இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. ii) விடைகள்
தெளிவாகவும், குறித்த அளவினதாகவும், சொந்த
நடையிலும் அமைதல் வேண்டும். |
பகுதி
– I (மதிப்பெண்கள்:15)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்கவும். 15×1=15
1. காசிக்காண்டம்
என்பது
அ)
காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் ஆ) காசி நகரத்தைக் குறிக்கும்
மறுபெயர்
இ)
காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் ஈ) காசி நகரத்திற்கு
வழிப்படுத்தும் நூல்
2 . காலக்கணிதம்
கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
அ) இகழ்ந்தால்
என்மனம் இறந்து விடாது ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து
விடாது
இ) இகழ்ந்தால்
இறந்து விடாது என்மனம் ஈ) என்மனம் இறந்து விடாது
இகழ்ந்தால்
3. தார் வேம்பன்
என்பது யாரைக்குறித்தது?
அ) குசேல பாண்டியன்
ஆ) குலேச பாண்டியன் இ) இறைவன் ஈ) இடைக்காடனார்
4. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித்
தமிழில் படைக்கப்பட்டது?
அ)
திருக்குறன் ஆ) கம்பராமாயணம் இ) கலித்தொகை ஈ) சிலப்பதிகாரம்
5. தூக்குமேடை
என்னும் நாடகத்தின் பாராட்டுவிழாவில்தான், கலைஞர் என்ற
சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது - இத்தொடருக்கான வினா எது?
அ) தூக்குமேடை
நாடகத்தில் நடித்தவர் யார்?
ஆ) கலைஞர் என்ற
சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?
இ) தூக்குமேடை
என்பது திரைப்படமா?
நாடகமா?
ஈ) யாருக்குப்
பாராட்டுவிழா நடத்தப்பட்டது?
6. மகிழுந்து
வருமா?' என்பது -------
அ) விளித்தொடர் ஆ) எழுவாய்த்தொடர் இ) வினையெச்சத்தொடர் ஈ) பெயரெச்சத்தொடர்
7. சிலப்பதிகாரத்திலும்
மணிமேகலையிலும் அமைந்த பாவினம்-
அ) அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
8. தமிழினத்தை
ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
அ) திருக்குறள் ஆ) புறநானூறு இ) கம்பராமாயணம் ஈ) சிலப்பதிகாரம்
9. மனக்கோட்டை
கட்டினான் – என்ற மரபுத்தொடர் உணர்த்தும் பொருள்
அ) புகழ்பெற்று
விளங்குதல் ஆ) அழகாக இருத்தல் இ) கற்பனை செய்தல் ஈ) வீண் செலவு
10. குயில்களின்
கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம் – தொடருக்குப் பொருந்திய தலைப்பு
அ) வனத்தின் நடனம் ஆ) காற்றின் பாடல் இ) மிதக்கும் வாசம் ஈ) மொட்டின் வருகை
11. குளிர்காலத்தைப்
பொழுதாகக் கொண்ட நிலங்கள்
அ) முல்லை, குறிஞ்சி,
மருத நிலங்கள் ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
இ) குறிஞ்சி, மருதம்,
நெய்தல் நிலங்கள் ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்
பாடலைப் படித்து
பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15)
விடை தருக.
"உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்
செந்தா மரைத்தேனைக் குடித்துச்
சிறகார்ந்த
அந்தும்பி
பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம்
யாண்டும் முழங்கத் தனித்தமிழே!"
12. பாடலின் ஆசிரியர்-
அ) பாரதியார் ஆ) பாவலரேறு பெருஞ்சித்திரனார் இ)
பாரதிதாசன் ஈ) தமிழழகனார்
13. பண்புத்தொகையைத் தேர்ந்தெடுக்க.
அ) செந்தாமரை ஆ) வீசுதென்றல் இ) உணர்வெழுப்ப ஈ) சிறகார்ந்த
14. தும்பி என்னும் சொல்லுக்கான பொருளைத் தேர்க.
அ) கனல் ஆ) உந்தி இ) யாண்டும் ஈ) வண்டு
15. பாடல் இடம்பெற்றுள்ள நூல் -
அ) உலகியல் நூறு ஆ) பாவியக் கொத்து இ) கனிச்சாறு ஈ) எண்சுவை
பகுதி – II (மதிப்பெண்கள்:15)
பிரிவு -1
4×2-8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்கவும். வினா எண் 21-க்கு
கட்டாயமாக விடையளிக்கவும்.
16. விடைகளுக்கேற்ற வினாக்கள் எழுதுக.
அ. இலக்கண முறையின்றிப்
பேசுவதும், எழுதுவதும் வழு எனப்படும்.
ஆ. ஐம்பெருங்காப்பியங்களுள்
ஒன்று சிலப்பதிகாரம்.
17. தற்காலத்தில் உயிர்வளியை விற்கும் நிலையங்கள் அதிகம் தொடங்கப்படுவதேன்?விளக்குக.
18. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக
19. கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால்
பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்" -இவ்வடிகளில் கழிந்த பெரும்
கேள்வியினான்யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?
20. வறுமையிலும்
படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.
21. 'வினை' என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2-10
22. கலைச்சொல் தருக. அ) Playwright ஆ) Conversation
23. பழமொழியை நிறைவு செய்க.
அ) விருந்தும்------- ஆ) ஒரு
பானை-----
24. புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
25. கட்டுரை படித்த -இச்சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபைப் பயன்படுத்தித்
தொடரை விரித்து எழுதுக
26. இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க அ. கொடு – கோடு ஆ. விடு
- வீடு
27. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருப்பொருளைத்
திருத்தி எழுதுக.
உழவர்கள்
மலையில் உழுதனர்.
முல்லைப்
பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
28. ஒலித்து - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
பகுதி – III (மதிப்பெண்கள்:18)
பிரிவு -1
எவையேலும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
29. தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை
எழுதுக.
30.
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையதென்பது அதன் விளைபொருள் வகைகளை
நோக்கினாலே விளங்கும். பிற நாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும், சில்வகைப்பட்டவனவாகவும் இருக்க, தமிழ்நாட்டிலுள்ளவையோ
பலவாகவும் கழிபல வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கோதுமையை
எடுத்துக் கொள்ளின் அதில் சம்பாக் கோதுமை, குண்டுக் கோதுமை.
வாற்கோதுமை முதலிய சில வகைகளேயுண்டு. ஆனால், தமிழ்நாட்டு
நெல்லிலோ, செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும், பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள்
சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா,
குண்டுச் சம்பா, குதிரைவாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா முதலிய அறுபது
உள்வகைகள் உள்ளன.
(அ) தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பது எதனால் விளங்கும் ?
(ஆ) கோதுமையின் வகைகளைக் குறிப்பிடுக.
(இ) தமிழ்நாட்டு நெல்லின் வகைகளை எழுதுக.
31. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும்
தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
பிரிவு -2
எவையேலும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
32. மன்னன்
இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம்
தருக
33. ஆள்வினை உடைமை
அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக
34. அடிபிறழாமல் எழுதுக.
அ. “அன்னை மொழியே' எனத் தொடங்கும் பாடல்
(அல்லது)
ஆ. 'தூசும்' எனத் தொடங்கும் பாடல்'
பிரிவு -2
எவையேலும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
35.
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர் - குறட்பாவினை அலகிட்டு
வாய்ப்பாடு எழுதுக.
36. வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் பற்றிய பாடலைப் பாடிக்
காட்டினார். இதை மாணவர்கள் கவனமாகக் கேட்டுப் பாடினர்.
மாணவர்கள் கேட்ட பாடலில் இருந்து ஆசிரியர் சிறுவினாக்களைக் கேட்டார்.
இப்பாடல் குறித்த உங்கள் கருத்துகளை எழுதி வாருங்கள். நன்றாக எழுதுபவருக்குப்
பரிசு உள்ளது என்றும் ஆசிரியர் கூறினார்.-அடிக்கோடிட்ட சொற்களுக்கான
தொகாநிலைத் தொடர்களைக் கண்டறிக
37. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்
– இக்குறளில் பயின்று வந்த அணியை விளக்குக
பகுதி - IV (மதிப்பெண்கள்:25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி.
5×5=25
38.அ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும்
பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து
அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு
வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும்
கவி... தண்டலை மயில்கள் ஆட இவ்வுரையைத் தொடர்க!
(அல்லது)
ஆ) கருணையனின் தாய்
மறைவுக்கு, வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய
கவிதாஞ்சலியை விவரிக்க..
39.
உணவு
விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து
உரிய சான்றுகளுடன் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்று எழுதுக. (அல்லது)
ஆ)
அண்மையில் ஏற்பட்ட புயலில் சேதமடைந்த சாலையைச் சீரமைத்துத் தரக்கோரி நகராட்சித் தலைவருக்கு
விண்ணப்பக் கடிதம் எழுதுக.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
41.
பத்தாம் வகுப்பு பயிலும் கார்மேகன், அரக்கோணம்
பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் தனது தந்தை கரிகாற்சோழனுடன் இராணிப்பேட்டை
மாவட்டம்,அரக்கோணத்தில் உள்ள கிளை நூலகத்தில் உறுப்பினராகச் சேர்வதற்குச்
செல்ல உள்ளார். அவருக்கு நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்பி உதவுக
42. அ) பள்ளியிலும்,
வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.
(அல்லது)
ஆ)
தமிழில் மொழிபெயர்க்க.
Kalaignar
Karunanidhi is known for his contributions to Tamil literature. His
contributions cover a wide range: poems, letters, screenplays, novels,
biographies, historical novels, stage-plays, dialogues and movie songs. He has
written Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as
many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also
contributed to the Tamil language through art and architecture. Like the
Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the
construction of Valluvar Kottam he gave an architectural presence to
Thiruvalluvar, in Chennai. At Kanyakumari, Karunanidhi constructed a
133-foot-high statue of Thiruvalluvar in
honour of the scholar.
பகுதி - V (மதிப்பெண்கள்: 24)
அனைத்து
வினாக்களுக்கும் விரிவான
விடையளிக்கவும். 3×8=24
43. அ) நாட்டுவளமும்
சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.
(அல்லது)
ஆ) வீட்டில் திண்ணை அமைத்த காரணம், விருந்தினரைப் பேணுதல், தமிழர் பண்பாட்டில் ஈகை,
பசித்தவருக்கு உணவிடல் – இத்தலைப்புகளை விளக்கி
கட்டுரையாக எழுதுக.
44.அ) பிரும்மம்
கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க
(அல்லது)
ஆ) கற்கை
நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை,
மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின்
வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
45.
அ) கல்விக்கண் திறந்தவர்களுக்கு இடையில் கைவிடப்பட்ட பெண்களுக்காக
உழைத்த முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி பற்றி கட்டுரை வரைக.
(அல்லது)
ஆ) உங்கள் ஊரில் கடின உழைப்பாளர்- சிறப்பு மிக்கவர் -
போற்றத்தக்கவர் என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளை
தொகுத்து எழுதுக.
குறிப்பு : பூவிற்பவர் , சாலையோர உணவகம் நடத்துபவர்