10 TH STD TAMIL HALF YEARLY EXAM MODEL QUESTION PAPER

 

மாதிரி பொதுத்தேர்வு-1 (2025-2026)

10. ஆம் வகுப்பு             தமிழ்             மொத்த மதிப்பெண்கள்: 100         நேரம் : 3.00 மணி+15 நிமிடங்கள்

குறிப்புகள் : i) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

               ii) விடைகள் தெளிவாகவும், குறித்த அளவினதாகவும், சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

                                                    பகுதி – I (மதிப்பெண்கள்:15)                     

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.                                                               15×1=15

1. கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.

   கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.

அ) கூற்று 1 சரி 2 தவறு ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு 

இ) கூற்று 1 தவறு 2 சரி  ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி

2 . பரிபாடல் அடியில் விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

அ) வானத்தையும் பாட்டையும் ஆ) வான்வெளியில், பேரொலியில்

இ) வானத்தில், பூமியையும்   ஈ) வானத்தையும் பேரொலியையும்

3. வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?

அ) ஒரு சிறு இசை  ஆ) முன்பின்  இ) அந்நியமற்ற நதி   ஈ) உயரப் பறக்கல்

4. பின்வருவனவற்றுள் முறையான தொடர்

) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

ஆ) தமிழர் வாழை இலைக்கு பண்பாட்டில் தனித்த இடமுண்டு

இ) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

ஈ) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

5. போரில் வெற்றி பெற்ற மன்னன் சூடி மகிழும் பூவைத் தேர்க.

அ) தும்பைப் பூ   ஆ) கரந்தைப்பூ  இ காஞ்சிப்பூ   ஈ) வாகைப்பூ

6. குழந்தையின் செங்கீரைப்பருவத்துக்குரிய மாதங்கள்

அ) 7-8   ஆ) 5-6   இ) 7-9  ) 11-12

7. நாள்தோறும் நாடி முறைசெய்யா மன்னவன்

    நாள்தோறும் நாடு கெடும்.        குறளில் உள்ள சீர் மோனைச் சொற்களைத் தேர்க.

அ) நாடி முறைசெய்யா   ஆ) நாள்தொறும் – மன்னவன்   

இ) நாள்தொறும் கெடும்    ஈ) நாள்தொறும் நாடி

8. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

) உழவு, மண், ஏர், மாடு  ஆ) மண், மாடு, ஏர், உழவு  

இ) உழவு, ஏர், மண், மாடு   ஈ) ஏர், உழவு, மாடு, மண்

9. சித்திரை, வைகாசி மாதங்களை-------- காலம் என்பர்.

அ) முதுவேனில் ஆ) பின்பனி  இ) முன்பனி  ஈ) இளவேனில்

10. மேன்மை தரும் அறம் என்பது-

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது   ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது.

11. "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

     மாணவனுக்கு வகுப்பது பரணி" - எண்ணுப் பெயரின் தமிழ் எண்ணைத்  தேர்க

) ரு00    ) 00    ) 00   ) 000

பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12,13,14,15) விடை தருக.

          "வண்ணமும் கண்ணமும் தண்நறுஞ் சாந்தமும்

பூவும் புகையும் மேவிய விரையும்

பகர்வனர் திரிதரு நகர வீதியும்:

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு துண்வினைக் காருகர் இருக்கையும்;

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்"

12. பாடலடிகள் இடம்பெற்ற நூல் எது?

) நற்றிணை    ஆ) சிலப்பதிகாரம்   ) கம்பராமாயணம்  ஈ) குறுந்தொகை

13. இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள்

) துகிர், தூசு  ) ஆரம், பட்டு  ) சுண்ணம் , அகில்   ) பட்டு ,பருத்தி

14.வண்ணமும் கண்ணமும் இலக்கணக் குறிப்பு தருக.

அ) பண்புத்தொகை    ஆ) வினைத்தொகை   ) அடுக்குத்தொடர்   ) எண்ணும்மை

15. பாடலில் இடம்பெற்றுள்ள சிர்எதுகை, அடிஎதுகைச் சொற்கள்

) வண்ணமும் -கண்ணமும், பட்டினும் - கட்டு   ஆ) வண்ணமும் சாந்தமும், பகர்வனர் - பட்டினும்

) தூசும்- துகிரும் , ஆரமும்-அகிலும்      ) வண்ணமும்- அகிலும் , கட்டு- காருகர்

பகுதி – II  (மதிப்பெண்கள்:15)  

                                                     பிரிவு -1                                                            4×2-8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண் 21-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.

16. விடைகளுக்கேற்ற வினாக்கள் எழுதுக.

அ) கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் கலைத்திறனோடு தருபவை நிகழ்த்துக் கலைகள்,

ஆ) தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து இரண்டும் கதையைத் தழுவி ஆடும் ஆட்டங்கள்.

17. உறங்குகின்ற கும்பகள்ள 'எழுந்திராய் எழுந்திராய்' காலதூதர் கையிலே உறங்குவாய் உறங்குவாய்' - குப்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

18. 'நச்சப்படாதவன்' செல்வம் - இத்தொடரில் நச்சப்படாதவன் என்னும் சொல்லுக்குப் பொருள் தருக.

19. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?

20. நெய்தல் நிலத்தவர் பாணர்களுக்கு எவ்வெவற்றை உணவாக அளித்தனர்?

21. 'எப்பொருள்' எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

பிரிவு - 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                        5×2-10

22. கலைச்சொல் தருக.  ) Hospitality  ) Screenplay

குறிப்பு: செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

கீழ்க்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களை எழுதுக.    ஆடு, கல், புல் பழம்

23. உவமைகளைப் பயன்படுத்தி சொற்றொடர்கள் உருவாக்குக.

) கண்ணினைக் காக்கும் இமை போல      ஆ) சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

24. சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்" என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் -இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருந்தி எழுதுக

25. 'அறிந்தது, அறியாதது, புரிந்தது, புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது' இவை அனைத்தையும் யாம் அறியோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை, எல்லாம் எமக்குத் தெரியும்.    இக்கூற்றில் அடிக்கோடிட்டுள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக

26. பத்தியிலுள்ள பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி எழுதுக.

      உங்களிடம் செவன் கோல்டு பிஸ்கட் உள்ளது. தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டை வைத்தால் தராக ஈக்வலாக இருக்கும். பேலன்ஸாக ஒரு கோல்ட் பிஸ்கட் உங்கள் கையில் இருக்கும்.

27. பொதுவியல் திணை பற்றிக் குறிப்பெழுதுக.

28. அறியேன் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

பகுதி – III  (மதிப்பெண்கள்:18)

பிரிவு -1

எவையேலும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                  2×3=6

29. பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?

30. உரைப்பத்தியைப் படித்து விளாக்களுக்கு விடை தருக.

     தமிழர், போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர். போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர் சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர்   மூலாங்கிழார் குறிப்பிட்டிருக்கிறார்.

1. அவூர் மூலாங்கிழாரின் போர் அறம் யாது        

2. போர் அறம் என்பது எதனைக் குறிக்கிறது?

3. பாருக்கெல்லாம் திங்கு வராத வண்ணம் போர் புரிய வேண்டும்?

31.  புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.

      இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க

பிரிவு -2

எவையேலும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                  2×3=6

32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு கட்டுவன யாவை?

33. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணித்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நலத்தை விளக்குக.

34. அடிபிறழாமல் எழுதுக.

. “அள்ளல்' எனத் தொடங்கும் முத்தொள்ளாயிரம் பாடல்          (அல்லது)

ஆ) 'வெய்யோளொளி' எனத் தொடங்கும் 'கம்பராமாயணப் பாடல்'

பிரிவு -2

எவையேலும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                  2×3=6

35. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

      இன்மையே இன்னா தது.            - குறட்பாவினை அலகிட்டு வாய்ப்பாடு எழுதுக.

36. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

37. வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

      கோலொடு நின்றான் இரவு - குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.

பகுதி - IV (மதிப்பெண்கள்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளி.                                                                        5×5=25

38.அ)சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.                                                                                              (அல்லது)                    

ஆ) ஆள்வினை உடைமை வாழ்விற்கு மிக அவசியம் என்பதை வள்ளுவர்வழி நின்று விளக்குக.

39. மாநில அளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்' எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி படல் எழுதுக.                 (அல்லது)

ஆ) ங்கள் ஊர் நெடுஞ்சாலையிலிருந்து தொலையில் இருப்பதால் நெடுஞ்சாலைப் பகுதிக்குச் செல்வதற்குச் சிற்றுந்து வசதி செய்து தருமாறு போக்குவரத்து ஆணையருக்கு விண்ணப்பக் கடிதம் எழுதுக.

40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

41. திருவண்ணாமலை மாவட்டம், அண்ணா நகர், கம்பர் தெரு, 28 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் குமரனின் மகள் கயல்விழி கணினிப் பயிற்றுநர் பணி வேண்டித் தன்விவரப் பட்டியலை நிரப்புகிறார், தேர்வர், தன்னைக் கயல்விழியாகக் கருதிப் பணி வாய்ப்பு வேண்டித் தன் விவரப் படிவத்தை நிரப்புக

42. அ) கல்வெட்டுகளைப்  பராமரிக்கவும்,பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்களைப் பட்டியலிடுக.

(அல்லது)

ஆ) தமிழில் மொழிபெயர்க்க.

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்றுவினா.

    முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் எனப் பெயர். விருந்தே புதுமை என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். தனித்து உண்ணாமை என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை, அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர்; அத்தகையோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது. விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வீட்டிற்கு வந்தவருக்கு, வறிய நிலையிலும் எவ்வழியிலேயேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர், நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல்மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை, விதைத்து விட்டு வந்த நெல்லை அறிந்து வந்து, பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது.

வினாக்கள்:

1. விருந்து குறித்து தொல்காப்பியம் குறிப்பிடுவது யாது?

2. விருந்தோம்பல் குறித்து சிறுபாணாற்றுப்படை கூறுவது யாது?

3. நம்முன்னோர்களின் மகிழ்ச்சி எதில் இருக்கிறது?

4. பெரிய புராணத்தில் குறிப்பிடப்படும் விருந்தோம்பல் குறித்த செய்தியை எழுதுக.

5. பெண்களின் சிறந்த பண்புகளின் ஒன்று எது?

பகுதி - V (மதிப்பெண்கள்: 24)

அனைத்து வினாக்களுக்கும் விரிவான  விடையளிக்கவும்.                                              3×8=24

43. அ) சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக. (அல்லது)                    

ஆ) நாட்டு விழாக்கள் விடுதலைப் போராட்ட வரலாறு நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு-குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் 'மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்' என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

44.அ) அன்னம்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.                                                (அல்லது)

ஆ) பாய்ச்சல் கதையின் மையக்கருத்தைக் குறிப்பிட்டுக் கதையைச் சுருக்கி எழுதுக.

45. அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்கு நீங்கள் சென்று வந்த நிகழ்வு குறித்துக் குறிப்புகளைப் பயன்படுத்தி கட்டுரை எழுதுக.

குறிப்புகள்: முன்னுரை – கலைத்திருவிழா- அரங்கு அமைப்பு - பல்வகை அங்காடிகள்உணவுக்கூடங்கள் நிகழ்கலைகள் - விளையாட்டு அமைவிடங்கள் - முடிவுரை.      (அல்லது)

ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதித் தலைப்பிடுக.

குறிப்புகள் : முன்னுரை - தமிழரின் உணவுமுறைகள் - தோய்தடுக்கும் தமிழர் உணவுகள் - மருந்தாகும் உணவுகள்

பதிவிறக்கம் செய்ய 10 வினாடிகள் காத்திருக்கவும்

You have to wait 10 seconds.

Generating Download Link...

கருத்துரையிடுக

கருத்தளித்தமைக்கு நன்றி

புதியது பழையவை