8.ஆம் வகுப்பு தமிழ்
வினா விடைகள் (2025-2026)
தமிழ்மொழி
வாழ்த்து
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
1) மக்கள் வாழும்
நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்
அ) வைப்பு ஆ)கடல் இ)
பரவை ஈ) ஆழி
2)என்றென்றும் என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .
அ)என் + றென்றும் ஆ)என்று
+ என்றும் இ)
என்றும் + என்றும் ஈ)என் + என்றும்
3. வானமளந்தது என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ)வான + மளந்தது ஆ)வான் + அளந்தது இ)வானம்
+ அளந்தது ஈ)வான் + மளந்தது
4. அறிந்தது+அனைத்தும்
என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ)அறிந்ததுஅனைத்தும் ஆ) அறிந்தனைத்தும் இ)அறிந்ததனைத்தும் ஈ) அறிந்துனைத்தும்
5) வானம் + அறிந்த
என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும்
அ) வானம் அறிந்து ஆ) வான்அறிந்த இ)
வானமறிந்த
ஈ) வான்மறிந்த
குறுவினா
1. தமிழ் எங்குப் புகழ்
கொண்டு வாழ்கிறது?
விடை : தமிழ் உலகம் முழுவதும்
புகழ் கொண்டு வாழ்கிறது
2. தமிழ் எவற்றை
அறிந்து வளர்கிறது?
விடை : தமிழ் வானம் வரையுள்ள
அனைத்து பொருண்மைகளையும் அறிந்து வளர்கிறது
சிறுவினா
தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார்
கூறும் கருத்துகளை எழுதுக.
விடை:
v
எல்லா காலத்திலும் நிலைபெற்ற தமிழே!
வாழ்க.
v
எல்லாவற்றையும் அறிந்துரைக்கும்
தமிழே! வாழ்க.
v
ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம்
முழுவதும் புகழ்கொண்ட தமிழே! வாழ்க.
v
உலகம் உள்ளவரையிலும் தமிழே! வாழ்க.
v
எங்கும் உள்ள அறியாமை இருள்
நீங்கட்டும்.
v
தமிழ் உயர்வுற்று உலகம் முழுதும்
சிறப்படைக!
v
பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும்
துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும் தமிழே! வாழ்க.
சிந்தனை
வினா
பாரதியார் தமிழை வண்மொழி என்று
அழைக்கக் காரணம் என்ன?
விடை:
·
வரலாற்றுத் தொன்மை, பண்பாட்டு வளம், சொல்வளம்,
கருத்துவளம் ஆகியவற்றால் ஓங்கி உயர்ந்துள்ளது.
·
அழியாத மொழியாக, சிதையாத மொழியாக, அன்று
முதல் இன்றுவரை ஒரே நிலையில் உயிர்ப்புடன் உள்ளது
ஆழிக்கு
இணை
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக
1.
தமிழ்த்தாய் ஐம்பெருங்காப்பியங்களை-------- அணிந்துள்ளாள்.
அ)
மாலையாக ஆ) ஆடையாக இ)
அணிகலன்களாக ஈ) மகுடமாக
2.
பெரிய கப்பல்கள் -------
மீது செல்லும்.
அ)
ஊழி ஆ) ஆழி இ) நாழி ஈ) தாழி
3.
'முத்தமிழ்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்
கிடைப்பது
அ) மூன்று + தமிழ் ஆ) முத்து + தமிழ்
இ)
மு +தமிழ் ஈ) முத்
+ தமிழ்
4.
'தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது' -இத்தொடரில் தன் என்னும் சொல் -------- குறிக்கிறது
அ)
அணிகலனைக் ஆ) கடலைக்
இ)
கப்பலைக் ஈ) தமிழைக்
பாடலின்
பொருள் உணர்ந்து,
தொகைச்சொற்களை விரித்து எழுதுக.
1.
முத்தமிழ் : இயற்றமிழ், இசைத்தமிழ்,
நாடகத்தமிழ்
2.
முச்சங்கம் : முதற்சங்கம், இடைச்சங்கம்,
கடைச்சங்கம்
3.
முச்சங்கு : வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம்
குறுவினாக்கள்
1.
தமிழ் யாரால் காக்கப்பட்டதாகத் தமிழழகளார் கூறுகிறார்?
விடை:
தமிழ் சங்கப்புலவர்களால்
காக்கப்பட்டதாகத் தமிழழகனார் கூறுகிறார்.
2.
இரட்டுறமொழிதல் அணி என்பது யாது?
விடை:
ஒரு
சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் அணி ஆகும்.
சிறுவினா
1.
தமிழையும் கடலையும் ஒப்பிட்டுத் தமிழழகனார் கூறுவன யாவை?
|
தமிழ் |
கடல் |
1 |
முத்தமிழாக
வளர்ந்தது |
முத்தினைத்
தருகிறது. |
2 |
முச்சங்கங்களால்
வளர்க்கப்பட்டது |
முச்சங்கினைத்
தருகிறது. |
3 |
ஐம்பெருங்காப்பியங்கள்-
அணிகலன்கள் |
கடலில்
செல்லும் கப்பல்கள் |
4 |
சங்கப்புலவர்களால்
காக்கப்பட்டது. |
சங்கினைக்
காக்கிறது |
சிந்தனை
வினா
1.
தமிழுக்கும் கடலுக்கும் உள்ள ஒற்றுமைகளாக நீங்கள் கருதுவன யாவை?
·
தமிழும்
தமிழரும் கடலுடன் தொடர்பு உடையவர்கள்.
·
முதல், இடை ஆகிய
சங்கங்கள் கடலுள் மூழ்கிய செய்தியை இலக்கியங்களின் வழி அறியலாம்.
·
ஏழு
கடல் சூழ்ந்த உலகிலும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ் கொண்டது தமிழ் என்று பாரதி
வாழ்த்துகிறார்.
கற்பவை
கற்றபின்
1.
இருபொருள் தரும் சொற்கள் சிலவற்றை எழுதி, அவற்றின்
இரு பொருள்களையும் எழுதுக.
1.
மாலை
- மலர் மாலை, அந்திப் பொழுது
2.
ஆறு
-
நதி, எண்
3.
திங்கள்
- நிலவு, மாதம்
4.
வேங்கை
- புலி, ஒருவகை
மரம்
5.
நகை
- புன்சிரிப்பு, அணிகலன்.
தமிழ் வரிவடிவ
வளர்ச்சி
சரியான
விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான
வடிவத்தைப் பெறக் காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை ஆ)
இசைக்கலை இ)
அச்சுக்கலை ஈ) நுண்கலை
2. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ்
எழுத்து அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெழுத்து ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து
3. தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில்
ஈடுபட்டவர்
அ) பாரதிதாசன் ஆ) தந்தை பெரியார்
இ) வ.உ.சிதம்பரனார் ஈ) பெருஞ்சித்திரனார்.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1.கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ்
எழுத்துகள் கண்ணெழுத்துகள் எனஅழைக்கப்பட்டன.
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும்
குழப்பங்களைக் களைந்தவர் வீரமாமுனிவர்
குறுவினா
1. ஓவிய எழுத்து என்றால் என்ன?
விடை: தொடக்ககாலத்தில்
எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவேஇருந்தது.
இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
2. ஒலி எழுத்து நிலை
என்றால் என்ன?
விடை: ஓர் ஒலிக்கு ஓர்
எழுத்து என உருவான நிலையைஒலி எழுத்து
நிலைஎன்பர்.
3. ஓலைச்சுவடிகளில் நேர்க்கோடுகள்
புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
விடை:
ü புள்ளியிட்டு எழுதினால் ஓலைச்சுவடி சிதைந்துவிடும்.
ü நேர்க்கோடிட்டு எழுதினால் ஓலைச்சுவடி கிழிந்துவிடும்,
ஆகிய காரணங்களால் ஓலைச்சுவடிகளில்
நேர்க்கோடுகள், புள்ளிகளைப்
பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர்
4. வீரமாமுனிவர்
மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.
விடை:
ü ஓகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை
வீரமாமுனிவர் போக்கினார்.
ü 'எ' என்னும் எழுத்திற்குக்
கீழ்க்கோடிட்டு 'எ' என்னும் எழுத்தை
நெடிலாகவும் 'ஓ' என்னும் எழுத்திற்குச்
சுழி இட்டு 'ஓ' என்னும் எழுத்தாக
உருவாக்கினார்.
சிறு
வினா.
1.எழுத்துச்
சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
ü ஓலைச்சுவடிகளிலும், கல்வெட்டுகளிலும்
புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல்
எழுதினர்.
ü புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி
மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர
வேண்டிய நிலை இருந்தது.
ü இதனால் படிப்பவர்கள் பெரிதும் துன்பம் அடைந்தனர். எனவே
எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.
2. தமிழ் எழுத்துகளில்
ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
ü நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில்
துணைக்கால் பயன்படுகின்றது.
ü ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில்
இணைக்கொம்பு ( ை) பயன்படுகின்றது.
ü ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த
இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது.
நெடுவினா.
எழுத்துகளின் தோற்றம் குறித்து
எழுதுக.
v மனிதன் தனக்கு எதிரேஇல்லாதவர்களுக்கும் தலைமுறையினருக்கும்
தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான், அதற்காகப்
பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து
வைத்தான்.
v இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.
v தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய
வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
v ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று.
இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை 'ஒலி எழுத்து நிலை" என்பர்.
v இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக
இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.
சிந்தனை
வினா.
1. தற்காலத்
தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக
v தமிழராய்ப் பிறந்தோர் அனைவரும் தமிழ் வழிக் கல்வியை
ஆதரிப்பவர்களாக விளங்க வேண்டும்.
v தமிழ்மொழியில் தோன்றிய இலக்கண, இலக்கியங்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளிப்பட வேண்டும்.
v படைப்பிலக்கியங்களையும் அவற்றைப் படைப்போரையும் பேணும் நிலை வர
வேண்டும்.
சொற்பூங்கா
தமிழில் ஓரெழுத்து
ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து
எழுதுக.
ஓரெழுத்து ஒருமொழி
உயிர் வரிசையில் ஆறு
எழுத்துகளும், ம வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, ந என்னும் வரிசைகளில்
ஐந்து எழுத்துகளும், க, ச. வ என்னும்
வரிசைகளில் நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக
நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார் நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.
கலைச்சொல் வடிவம்
பூ, கா என்ற ஒரு இரு
ஓரெழுத்து ஒருமொழியை இணைத்து பூங்கா என வழங்கினர். ஆ,மா
இரண்டையும் ஆமா என்னும் சொல் உருவாக்கப்பட்டு காட்டுப் பசுவைக் குறித்தது. மாநிலம்,மாநாடு, மாஞாலம் இச்சொற்களில், மா என்பது பெரிய என்ற பொருளை தந்தது.
இக்கால வழக்கு
ஈ என்ற சொல் ஒலிக்குறிப்பைக்
காட்டும்; பூச்சி வகையைச் சுட்டும், வழங்குதல்
என்னும் பொருளை உணர்த்தும். வெளிப்படை ஆகும். "ஈ என்று பல்லைக் காட்டாதே”
என்று அறிவுரை கூறவும் பயன்படும். போ, வா, நீ. சூ. சே. சை. சோ என்பவை இக்காலத்தில் வழங்கும் சொற்களாகும்.
எழுத்துகளின்
பிறப்பு
சரியான
விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.
1. இதழ்களைக் குவிப்பதால்
பிறக்கும் எழுத்துகள் _____.
அ) இ, ஈ ஆ) உ, ஊ இ) எ, ஏ ஈ) அ,
ஆ
2. ஆய்தஎழுத்து பிறக்கும் இடம் ______.
அ) மார்பு ஆ) கழுத்து இ) தலை ஈ) மூக்கு
3. வல்லின எழுத்துகள் பிறக்கும்
இடம் _____.
அ) தலை ஆ) மார்பு இ) மூக்கு ஈ) கழுத்து
4. நாவின் நுனி அண்ணத்தின்
நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) க், ங் ஆ) ச், ஞ் இ) ட், ண் ஈ) ப், ம்
5. கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும்
இணைவதால் பிறக்கும் எழுத்து _____.
அ) ம் ஆ) ப் இ) ய்
ஈ) வ்
பொருத்துக.
1. க், ங் -
நாவின் இடை, அண்ணத்தின் இடை நாவின் முதல், அண்ணத்தின் அடி
2. ச், ஞ் -
நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி நாவின் இடை, அண்ணத்தின் இடை
3. ட், ண் -
நாவின் முதல், அண்ணத்தின் அடி நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
4. த், ந் -
நாவின் நுனி, அண்ணத்தின் நுனி நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி
சிறுவினா
1. எழுத்துகளின் பிறப்பு என்றால்
என்ன?
விடை: உயிரின்
முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை,
கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள்
ஒன்றில் பொருந்தி, இதழ்,
நாக்கு, பல், மேல்வாய் ஆகிய
உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின்
பிறப்பு என்பர்.
2. மெய்எழுத்துகள் எவற்றை
இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
விடை:
ü
வல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
ü
மெல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
ü
இடையின
மெய்எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
3.
ழகர, லகர, ளகர மெய்களின்
முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
விடை:
ü
ர், ழ் - ஆகிய
இருமெய்களும் மேல்வாயைநாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
ü
ல்
– இது மேல்வாய்ப் பல்லின் அடியைநாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால்
பிறக்கிறது.
ü
ள்
– இது மேல்வாயைநாக்கின் ஓரங்கள் தடித்துத்தடவுதலால் பிறக்கிறது.
மொழியை
ஆள்வோம்
அகரவரிசைப்படுத்துக.
எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல்,
இரண்டல்ல, ஊழி,
உரைநடை, ஒளகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ
, ஈசன், ஐயம்.
விடை: அழகுணர்ச்சி
, ஆரம்நீ, இரண்டல்ல , ஈசன்,
உரைநடை , ஊழி, எழுத்து
, ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம்
, ஓலைச்சுவடிகள், ஒளகாரம்
கட்டுரை எழுதுக:
எனது
தாய்மொழி தமிழ்
முன்னுரை:
எனது தாய்மொழி தமிழ். இந்த வார்த்தைகளை கூறும் போதே என்
மனதிற்கு ஒரு பெருமிதம், ஒரு உணர்ச்சி
மேலோங்கி வருகிறது. தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல, அது
ஒரு பண்பாட்டின் துடிப்பும், ஒரு இனம் பேசும் உயிரும் ஆகும்.
தமிழ் மொழியின் பாரம்பரியம்:
தமிழ் மொழி உலகிலேயே மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும். இது
சங்க காலத்திலிருந்தே வளர்ந்து வந்தது. தமிழ் இலக்கியங்கள், பாடல்கள், பழமொழிகள்,
பழைய வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் இந்த மொழியின் மகத்துவத்தைச்
சுட்டிக்காட்டுகின்றன. திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்கள் உலகளாவிய புகழ் பெற்றவை.
என் தாய்மொழியின் தனிச்சிறப்புகள்:
தமிழ் ஒரு இனிமையான மொழி. இதில்
பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இசை போல ஒரு அழகு உள்ளது. தமிழ் வார்த்தைகள்
இயற்கையைப்போல இனிமையாகும். எளிமையாகவும், ஆழமான கருத்துக்களை
சொல்லக்கூடிய திறன் தமிழுக்கு உண்டு.
தாய்மொழியின் முக்கியத்துவம்:
ஒரு மனிதன் பிறக்கும் போது முதல்
கேட்கும் மொழி தான் தாய்மொழி. அதனால் அது அவனுடைய உணர்வுகளோடும், எண்ணங்களோடும் பிணைந்திருக்கும். தாய்மொழி
மனிதனை அடையாளம் காணும் முக்கிய அடையாளமாகும். எனவே தாய்மொழியை பேணிக் காக்க
வேண்டும்.
முடிவுரை:
நாம் மற்ற மொழிகளை கற்கலாம், பேசலாம். ஆனால் நமது தாய்மொழி தமிழ் மீது நம்பிக்கையும், அன்பும் இருக்க வேண்டும். தமிழை நாமே முதலில் மதிக்க வேண்டும், பிறர் மதிப்பார்கள். என் தாய்மொழி தமிழ் எனும் சொல்லில் என்னுள் ஒரு பசுமை
உணர்வு பிறக்கிறது. நான் தமிழைப் பெருமையாகக் கொண்டாடுகிறேன்!
மொழியோடு விளையாடு
பொருத்தமான பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக
கல், பூ, மரம், புல், வாழ்த்து, சொல், மாதம், கிழமை, ஈ, பசு, படம், பல், கடல், கை, பக்கம், பா.
கள் |
க்கள் |
ங்கள் |
ற்கள் |
வாழ்த்துகள் |
பூக்கள் |
மரங்கள் |
கற்கள் |
கிழமைகள் |
ஈக்கள் |
மாதங்கள் |
புற்கள் |
கைகள் |
பசுக்கள் |
புடங்கள் |
சொற்கள் |
கடல்கள் |
பாக்கள் |
பக்கங்கள் |
பற்கள் |
ஒரு சொல் ஒரே தொடரில் பல
பொருள் தருமாறு எழுதுக.
(எ.கா.) அணி – பல அணிகளை அணிந்தவீரர்கள், அணிஅணியாய்ச்
சென்றனர்.
படி - படித்துக்கொண்டிருந்த
மாலதி, மாடு கறந்த ஒரு
படிப்பாலை எடுத்துக் கொண்டு படியில் ஏறிச்
சென்று தாயிடம் கொடுத்தாள்,
திங்கள் - திங்கள் நித்திரைத் திங்களில், முதல் திங்கள் அன்று, இரவில் திங்களைப் பார்ப்பது நல்லது
ஆறு - ஆறுமுகம்,காலையிலதுவைப்பதற்காக ஆறுதுணிகளை எடுத்துக்கொண்டு காவேரி ஆற்றுக்குச்
சென்றான்.
கீழ்க்காண்பவற்றுள் ஒரு சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
v மாமரம், மாங்காய்,
மாங்கனி, மாவிலை, செம்மலர்,
செந்தேன்.
v மலர்த்தேன், தேன்கூடு,
தேன்கனி, செம்மரம், செங்குருவி,
செங்காய்.
v மாமலர், தேன்மலர்,
குருவிக்கூடு, குருவிமுட்டை.
சொற்களை ஒழுங்குபடுத்தி
முறையான தொடராக்குக.
விடைகள்:
1. வளைந்த
கோடுகளால் அமைந்த தமிழ் எழுத்து வடடெழுத்து எனப்படும்.
2 உலகம்
உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்.
3. பகைவரை
வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
4. உயிரெழுத்து
பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
5. தமிழ்
அம்புவிடும் கலையை ஏகலை என்றது.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி