10.ஆம் வகுப்பு தமிழ்
வினா விடைகள் (2025-2026)
திறன் அறிவோம்
பலவுள்
தெரிக.
1.
மேன்மை தரும் அறம் என்பது-
அ)
கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
ஆ)
மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது
இ)
புகழ் கருதி அறம் செய்வது ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம்
செய்வது.
2.
உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும்
பொருள்களின் இருப்பைக் கூட
அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர் யாவர்?
அ)
உதியன்: சேரலாதன் ஆ) அதியன்: பெருஞ்சாத்தன்
இ)
பேகன் கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்:
திருமுடிக்காரி
3.
வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி விருது பெற்றுத் தந்த நூல் எது?
அ)
ஒரு சிறு இசை ஆ) முன்பின் இ) அந்நியமற்ற நதி ஈ) உயரப் பறத்தல்
4.
பூக்கையைக் குவித்துப் பூவே புரிவொடு காக்க என்று ----,----- வேண்டினார்.
அ)
கருணையன்,
எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத், தமக்காக
இ)
கருணையன், பூக்களுக்காக ஈ) எலிசபெத், பூமிக்காக
5.
சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்-
அ)
அகவற்பா ஆ) வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
குறுவினா
1.
குறிப்பு வரைக அவையம்.
விடை: அவையம்=மன்றம் அல்லது
சபை. வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம்.
2.
காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்' - உவமை உணர்த்தும் கருத்து யாது?
விடை: இளம்பயிர் வளர்ந்து
நெல்மணிகளைக் காணும் முன்பே மழையின்றி வாடிக் காய்வது போல கருணையன் தாயை இழந்து வாடினான்.
3.
குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
விடை: வெண்பாவின் பொது இலக்கணம்
பெற்று இரண்டு அடிகளில் வருவது குறள் வெண்பா
(எ-கா)
வேலொடு
நின்றான் இடுவென்றது போலும்
கோலொடு நின்றான்
இரவு.
4.
சங்க இலக்கியத்தில் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?
விடை: நீர்நிலை பெருக்கி
நிலவரம் கண்டு உணவு பெருக்கம் செய்வது அரசனின் கடமையாகும்
5.
பழங்களை விடவும் நசுங்கிப் போனதாக கல்யாண்ஜி எதைக் குறிப்பிடுகிறார்?
விடை: கல்யாண்ஜி
அடுத்தவர் மீதான அக்கறையைக் குறிப்பிடுகிறார்
சிறுவினா
1.
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே
என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
·
சங்க
இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித
வாழ்வுக்குத் தேவையான நலன்களை உருவாக்குகின்றன.
·
இப்பிறவியில்
அறம் செய்தால், அடுத்த பிறவியில்
நன்மை கிட்டும் என எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும் என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன.
·
நீர்நிலைகளைப்
பெருக்கி,உணவுப்பெருக்கம் காண்பதே அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன.இக்கருத்து
இன்றைக்கும் பொருந்தக்கூடியது.
·
மேற்கூறிய
காரணங்களால் சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே.
2. வாய்மை பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கருத்துகளை எழுதுக.
விடை:
·
வாய்மையைச்
சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.
·
”வாய்மை பேசும் நாவே உண்மையான நா” என்ற கருத்தை
வலியுறுத்துகின்றன.
·
நாக்கு
ஒரு அதிசய திறவுகோல்; இன்பத்தின் கதவை திறப்பதும், துன்பத்தின் கதவைத் திறப்பதும்
அது தான்
3.
எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
விடை:
ü உயிர்பிழைக்கும்
வழி அறியேன்
ü உறுப்புகள்
அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன்.
ü உணவினத்
தேடும் வழி அறியேன்
ü காட்டில்
செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார்.
4.
ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.
விடை:
ü
அகவலோசை
பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து வரும்.
ü
ஆசிரியத்தளை
மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும் வரும்.
ü
மூன்றடி
முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும்
5.
சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்' என்ற
தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான
உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக.
விடை:
ü
வீட்டைத்தூய்மையாக
வைத்திருத்தல்
ü
மழைநீரைச்
சேமித்தல்
ü
பொதுப்போக்குவரத்தைப்
பயன்படுத்துதல்
ü
வீதிகளைத்
தூய்மைப்படுத்தல்
ü
மரங்களை
வளர்த்தல்
ü
இயற்கை
உரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
நெடுவினா
1.
கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர்
பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.
கருணையனின்
தாய் மறைவுக்கு வீரமாமுனிவரது
கவிதாஞ்சலி
கருணையன்
தனது தாயை நல்லடக்கம் செய்தான்:
குழியினுள் அழகிய மலர்ப்படுக்கையைப் பரப்பினான்.
பயனுள்ள வாழ்க்கை நடத்திய தன் அன்னையின் உடலை மண் இட்டு மூடி
அடக்கம் செய்தான். அதன்மேல் மலர்களையும் தன் கண்ணீரையும்
ஒருசேரப் பொழிந்தான்.
கருணையன் தாயை இழந்து வாடுதல்:
இளம் பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளை காணும் முன்னே, மழைத்துளி இல்லாமல் காய்ந்து விட்டதைப் போல நானும் என் தாயை இழந்த
வாடுகிறேன் என்று கருணையன் வருந்தினான்.
கருணையனின்
தவிப்பு:
துணையைப் பிரிந்த பறவையைப் போல் நான் இக்காட்டில் அழுது இரங்கி விடுகிறேன்.சரிந்த வழுக்கு நிலத்திலே தனியே விடப்பட்டு செல்லும் வழி தெரியாமல்
தவிப்பவன் போல் ஆனேன்”.எனப் புலம்பினான்.
பறவைகளும்,வண்டுகளும் கூச்சலிட்டன:
கருணையன் இவ்வாறெல்லாம் அழுது புலம்பினார்.
அதைக் கேட்டு, பல்வேறு இசைகளை இயக்கியது
போன்று, மணம் வீசும் மலர்களும், பறவைகளும்,
வண்டுகளும் அழுவதைப் போன்றே கூச்சலிட்டன.
2.
கிடைப்பதற்கரிய திருமந்திரம் கிடைத்தவுடன் இராமானுசர் செய்த
நிகழ்வுகளைத் தொகுத்து எழுதுக.
இராமானுசர் நாடகம்
முன்னுரை
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி, தலைமுறைக்கு
ஒரு முறை மட்டுமே மலர்வது மூங்கில், நம் தலைமுறைக்கு
ஒரு முறை பிறப்பவர்களே ஞானிகள். அத்தகைய ஞானிகளுள் ஒருவர் இராமானுசர், அவரைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தண்டும் கொடியுமாக:
திருமந்திரத் திருவருள் பெறத் தண்டும், கொடியுமாக
இராமானுசரை வரச் சொல்லுங்கள் என்னும் செய்தி, பூரணரால்
திருவரங்கத்திற்கு அனுப்பப்பட்டது.அதனால்இராமானுசர், கூரேசர், முதலியாண்டான் ஆகிய மூவரும் பூரணர் இவ்வத்திற்கு வந்தனர். அவர்களைக் கண்ட
பூரணர் கோபம் கொண்டார். அதற்கு இராமானுசர், "தாங்கள் கூறிய தண்டு கொடிக்கு இணையானவர்கள் இவர்கள். எனவே கோபம் கொள்ளாது
பரிவு கொண்டு திருவருள் புரிய வேண்டும்" என்று கூறினார்,
ஆசிரியரின் கட்டளை:
பூரணர் மூவரையும் வீட்டிற்குள் அழைத்து மிகுந்த நிபந்தனையுடன்
"திருமகளுடன் கூடிய நாரயணனின் திருப்பாதங்களைப் புகலிடமாகக் கொள்கிறேன்; திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்" என்ற மந்திரத்தைக்
கூறினார். பூரணர் கூறிய திருமந்திரத்தை மூலரும் மூன்று முறை
உரக்கச் சொன்னார்கள்.
திருமந்திரத்தை மக்களுக்கு உரைத்தல்:
திருக்கோட்டியூர் சௌம்ப நாராயணன் திருக்கோவில் மதில் சுவரின் மேல்
இராமனுார் நின்று கொண்டு, உரத்த குரலில் பேசத்
தொடங்கினார். "கிடைப்பதற்கரிய பிறவிப்பிணியைத் தீர்க்கும் அருமருந்தான
திருமந்திரத்தை உங்களுக்குக் கூறுகிறேன். அனைவரும் இணைந்து மந்திரத்தைச்
சொல்லுங்கள்". அவர் சொல்லச் சொல்ல அனைவரும் உரத்தக் குரலில் மூன்று முறை
கூறினார்கள்.
குருவின் சொல்லை மீறுதல்:
குருவின் (பூரணரின்) சொல்லை மீறியதற்காக கோபம் கொண்ட பூரணரிடம்
"கிடைப்பதற்குரிய மந்திரத்தைத் தங்களின் திருவருளால் நான் பெற்றேன். அதன்
பயனை அனைவருக்கும் கிட்டவேண்டும். அவர்கள் பிறவிப்பிணி நீங்கி பெரும் பேறு பெற்றிட, நான் மட்டும் நரகத்தை அடைவேன்" என்று விளக்கமளித்தார்.
குருவின் ஆசி:
இராமானுசரின் பரந்த மனத்தைக் கண்ட குரு பூரணர், அவரை மன்னித்து அருளினார்
மேலும் இறைவனின் ஆசி பெற அவரை வாழ்த்தினார். இராமானுசத்திற்கு தன் மகள் சௌப்ய
நாராயணனை அடைக்கலமாக அளித்தார்.
முடிவுரை
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற உயரிய
மந்திரத்தை வாழ்வாக்கியவர் இராமானுசர், தனக்கென வாழாது
பிறருக்காக நரகமும் செல்ல முன்வந்த பெருமகளார்
3.
பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும்
அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக்
கடிதம் எழுதுக.
உறவினருக்குக் கடிதம்
7, திருத்தணி,
14-05-2024
அன்புள்ள அத்தைக்கு,
நலம். நலமறிய ஆவல். எனது பள்ளியில் பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தேன். அதற்காக எனது தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் இறைவழிபாட்டுக் கூட்டத்தில் என்னைப்பாராட்டி, பரிசு வழங்கினர். எனது பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அந்த மகிழ்ச்சியைத் தங்களுடனும் பகிர விரும்புகிறேன். அதனாலேயே இக்கடிதத்தை எழுதினேன்.
இப்படிக்கு
தங்கள் அன்புள்ள
வா.நிறைமதி.
4.
குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.
மாணவன் கொக்கைப்
போல, கோழியைப் போல - உப்பைப் போல இருக்க வேண்டும் கொக்கு காத்திருந்து
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் - குப்பையைக் கிளறினாலும் தனது உணவை
மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை
உணரமுடியும் ஆசிரியர் விளக்கம் - மாணவன் மகிழ்ச்சி.
வெளித்தோற்றம்
எப்படி இருப்பினும் குணங்களை ஆராய்ந்து உணர்ந்து
கொள்ள வேண்டும்
உப்பு குறைவானாலும் உண்ண முடியாது. அதிகமானாலும்
உண்ணமுடியாது.
அளவோடு இருந்தால் தான் ருசிக்க முடியும். நாமும் மற்றவர்களிடம்
மொழியை ஆள்வோம்
மொழிபெயர்க்க:-
1. Education is what remains after one has
forgotten what one has learned in school – Albert Einstein
ஒரு பள்ளியில் கற்றதை மறந்து விட்டால்,
பள்ளியில் கற்ற கல்வியினால் பயன் என்ன! – ஆல்பிரட்
ஐன்ஸ்டின்
2. Tomorrow is often the busiest day of the
week – Spanish proverb
பெரும்பாலும் நாளையே இந்த வாரத்தின்
பரபரப்பான நாள் – ஸ்பானிஷ் பழமொழி
3. It is during our darkest moment that we
must focus to see the light – Aristotle
இருண்ட தருணங்களில்
நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும்
- அரிஸ்டாட்டில்
4. Success is not final,failure is not
fatal.It is the courage to continue that counts – Winston Churchill
வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது
மரணம் இல்லை. தொடர்ந்து செய்கின்ற செயல்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது
– வின்ஸ்டன் சர்ச்சில்.
மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக;-
மனக்கோட்டை |
படிக்காமல்
தேர்ச்சி அடையலாம் என மனக்கோட்டை கட்டினான் |
அள்ளி இறைத்தல் |
பணத்தை
அள்ளி இறைத்த செல்வன் ஏழ்மையில் வாடுகிறான் |
கண்ணும் கருத்தும் |
கனிமொழி தேர்வுக்கு கண்ணும் கருத்துமாக
படித்தாள் வெற்றிப் பெற்றாள். |
ஆறப்போடுதல் |
கோபத்தை
ஆறப்போட வேண்டும் |
உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக;-
தாமரை இலை நீர்போல |
துரோகிகளின் நட்பு
தாமரை இலை நீர் போல ஒட்டாமல் இருக்கும். |
மழைமுகம் காணாப் பயிர்போல |
தந்தையை இழந்த குடும்பம்
வருமானம் இன்றி மழைமுகம் காணாப் பயிர்போல வாடி இருக்கிறது. |
கண்ணினைக் காக்கும்
இமைபோல |
பெற்றோர் தங்கள் பெண்
குழந்தைகளை கண்ணினைக் காக்கும் இமைபோல காக்க வேண்டும். |
சிலை மேல் எழுத்து
போல |
மூத்தோர் சொல் சிலை
மேல் எழுத்துப் போல நிலையானது. |
பொருத்தமான நிறுத்தற் குறியிடுக.
சேரர்களின் பட்டப்பெயர்களில்
கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவன் கொல்லி வெற்பன்
எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர் இதற்குச்
சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன
சேரர்களின் பட்டப் பெயர்களில்
‘ கொல்லி வெற்பன்’, ‘மலையமான்’ போன்றவை குறிப்பிட்த்தக்கவை. கொல்லி மலையை வென்றவன்,’கொல்லி வெற்பன்’ எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள்
‘ மலையமான்’ எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர்.
இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
பின் வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை
எழுத்து வழக்காக மாற்றுக;-
“ தம்பீ? எங்க நிக்கிறே?”
“ நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால்
இருக்குது.”
“ அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு,பேப்பரப் படிச்சிக்கிட்டு
இரு.... நா வெரசா வந்துருவேன்”
“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே
! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு !”
“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக்
கூட்டிக்கிட்டு வர்றேன்.”
“ ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்பம் அவனுக்கு
மூணு வயசு இருக்கும்!”
“ இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது.!
ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்.
“சரிங்கண்ணே.”
விடை:
“ தம்பி?
எங்கே நிற்கின்றாய்?”
“ நீங்கள் சொன்ன
இடத்திலே தான் அண்ணே! எதிர்ப்பக்கத்தில் ஒரு தேநீர்க் கடை இருக்கின்றது”.
“ அங்கேயே தேநீர்
குடித்து விட்டு, செய்தித்தாள் படித்துவிட்டு இரு......நான் சீக்கிரமாக வந்துவிடுவேன்
“ அண்ணா!
சண்முகத்தையும் அழைத்துக் கொண்டுவாருங்கள் அண்ணா! அவனைப்
பார்த்தே நீண்ட நாள்களாயிற்று!”.
“ அவன் பாட்டியுடன்
வெளியூர் சென்று உள்ளான்.உன் ஊருக்கே அவனை அழைத்துக் கொண்டு வருகிறேன்”.
“ மிகவும் சிறுவயதில்
பார்த்தது அண்ணா! அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும்!”.
“ இப்போது உயரமாக
வளர்ந்து விட்டான்! உனக்கு அடையாளமே தெரியாது!ஊருக்கு எங்களுடன் வருவான்.
“பார்த்துக்கொள்!.சரி,தொலைபேசியை வை. நான் புறப்பட்டு
விட்டேன்..”
“ சரி அண்ணா”.
கடிதம்
எழுதுக
உங்கள் தெருவில்
மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலை யில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன
செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.
மின்வாரியஅலுவலருக்குக்
கடிதம்
அனுப்புநர்
ப.இளமுகில்,
6,காமராசர் தெரு,
வளர்புரம்,
அரக்கோணம்-631003
பெறுநர்
உதவிப்பொறியாளர் அவர்கள்,
மின்வாரிய அலுவலகம்,
அரக்கோணம்-631001
ஐயா,
பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல் சார்பாக.
வணக்கம். எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன.எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இரவு நேரங்களில் இருள் மிகுந்துள்ளது.எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன்
வேண்டுகிறேன்.
நன்றி!!
இப்படிக்கு,
தங்கள்
பணிவுடைய,
ப.இளமுகில்.
இடம்: அரக்கோணம்,
நாள்: 15-10-2022.
கவிதையைப்
படித்து அதன் உரையாடல் வடிவத்தை தொடர்ந்து எழுதுக.
மகள்
: அம்மா! என் காதுக்குத் தோடு வாங்கித் தாங்கம்மா. வெறுங்காதோடு இருக்க முடியாது.
அம்மா
: மகளே! காதுக்குக் கம்மல் அழகல்ல. சான்றோரின் மொழிகளைப் பணிவுடன் கேட்டு உன்
காதில் போட்டுக்கொள்.
மகள்
: அம்மா! கைக்கு வளையலைக் கடன் வாங்கியாவது கொடுங்கள். பக்கி என்று என்னைக் கேலி
செய்வார்கள்.
அம்மா :
வராத
விருந்தினர் வந்தால் உபசரிப்பது வளையல். அவர்கள் சொல்வதுதான் உன் கை விலங்கு.
நினைத்தால் முடியும்.
அம்மா
: மகளே! கல்விதான் பெண்ணுக்கு ஆபரணம். இரத்தினக் கல் ஆறாத ரணம். கற்ற பெண்களை
இந்தநாடு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அறிந்து கொள்
என் மகளே!
நயம் பாராட்டுக:-
கோடையிலே
இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே
ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே
வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே
எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.
-
வள்ளலார்.
திரண்ட
கருத்து :
கோடை
வெப்பத்தில் துன்பப்படுகிறவர்களுக்கு இளைப்பாற ஏற்ற குளிர்ந்த மரம் போன்றவனாகவும்,அம்மரம் தரும் நிழல் தருபவனாகவும், அந்நிழலிடத்தில் மரத்தில் பழுத்த பழமாகவும், அதனை ஒட்டி அமைந்த் நீரோடையில் ஓடும் இன்சுவை நீராகவும், அந்த ஓடையில் மலர்ந்த நறுமணமிக்க மலராகவும், மென்மையாக வீசுகின்ற பூங்காற்றாகவும், அந்த காற்றினால் சுகத்தை தருபவனாகவும், சுகத்தில் உண்டான இன்ப பயனாகவும், சிறு வயதில் என்னை மணந்த மணவாளனாகவும் இருக்கும் அம்பலத்தில்
ஆடும் அரசே என் பாமாலையை ஏற்றுக் கொள்க.
மையக்
கருத்து:
வள்ளலார்
அனைத்துப் பொருட்களிலும் இறைவனைக் காணுகிறார். அதனை பாமலையாக சூட்டுகிறார்.
மோனை :
சீர்தோறும்
அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.
கோடையிலே - குளிர்தருவே
ஓடையிலே - உகந்ததண்ணீர்
மேடையிலே - மென்காற்றில்
ஆடையிலே - ஆடுகின்ற
எதுகை :
சீர்
தோறும் அடி தோறும் முதலெழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
கோடையிலே - ஓடையிலே
மேடையிலே - ஆடையிலே
இயைபு :
அடிதோறும் இறுதியில்
உள்ள எழுத்தோ,அசையோ,சீரோ ஒன்றி வருவது இயைபு.
கனியே – தண்ணீரே
மலரே - காற்றே
பயனே - அருளே
அணி நயம் :
இப்பாடல்
இறைவன மரமாகவும்,
நிழலாகவும், கனியாகவும், மலராகவும், தென்றலாகவும் பாடியிருப்பதால் உருவக அணி வந்துள்ளது.
சந்த நயம் :
அடிதோறும் எட்டு சீர்களைப்
பெற்றுள்ளதால் எண் சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
கண்டுபிடித்து எழுதுக:-
ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு,ஐந்து,ஆறு,ஏழு,எட்டு,பத்து ஆகிய எண்ணுப் பெயர்கள் இடம் பெறும் திருக்குறளைக் கண்டுபிடித்து எழுதுக.....
ஒன்று |
கொன்றன்ன
இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று
உள்ளக் கெடும் |
இரண்டு |
தானம்
தவமிரண்டும் தங்கா வியன்உலகம் வானம்
வழங்காது எனின் |
மூன்று |
ஒழுக்கமும்
வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார்
குடிப்பிறந் தார் |
நான்கு |
அழுக்காறு
அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா
இயன்றது அறம் |
ஐந்து |
கண்டுகேட்டு
உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் ஒண்தொடி
கண்ணே உள |
ஆறு |
படைகுடி
கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான்
அரசருள் ஏறு |
ஏழு |
எழுபிறப்பும்
தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை
மக்கள் பெறின் |
எட்டு |
கோளில்
பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை
வணங்காத் தலை |
பத்து |
பல்லார்
பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார்
தொடர்கை விடல் |
ஆ) சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக;-
கானடை |
கான் அடை
– காட்டைச் சேர் கான் நடை
– காட்டுக்கு நடத்தல் கால்நடை
– காலால் நடத்தல் |
வருந்தாமரை |
வரும் + தாமரை – வரும் தாமரை மலர் வருந்தா
+ மரை – துன்புறாத மான் வருந்து
+ ஆ + மரை – துன்புறும் பசுவும் மானும் |
பிண்ணாக்கு |
பிண் + நாக்கு – பிளவு பட்ட நாக்கு பிண்ணாக்கு
– எண்ணெய் எடுத்தப் பின் கிடைக்கும் பொருள் |
பலகையொலி |
பல + கை + ஒலி – பல கைகள் எழுப்பும் ஒலி பலகை + ஒலி – மரப் பலகையின் ஒலி
|
அகராதியில் காண்க:
1)
ஆசுகவி – கூறியவுடன்
பாடுவது
2)
மதுரகவி – சுவையுடன்
பாடுவது
3)
சித்திரகவி – எழுத்தைச்
சித்திரமாக வடித்து பாடுவது
4)
வித்தாரக்கவி – விரிவாகப்
பாடுவது
கலைச்சொற்கள் (படிப்போம்;
பயன்படுத்துவோம்!)
1.
Happiness - மகிழ்ச்சி
2.
Gratuity - பணிக்கொடை
3.
Sceptor - செங்கோல்
4. Truth - வாய்மை
5. Charity – ஈகை
மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால்
ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.
1.
புரளி பேசாதிருத்தல் |
1.
தேவையற்றச் சண்டைகள் நீங்கும் |
2.
பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல் |
2.
மன அமைதிப் பெறலாம். |
3.
உண்மை பேசுதல் |
3.
நம் வாழ்வை உயர்த்தும்,
அச்சமின்றி வாழலாம் |
4.
உதவி செய்தல் |
4.
மன மகிழ்ச்சி கிடைக்கும் |
5.
அன்பாய் இருத்தல் |
5.
அனைவரும் நண்பராகிவிடுவர் |
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி