10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 09-06-2025 முதல் 13-06-2025
மாதம் : ஜூன்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. பாவாணர் பார்வையில் தமிழ்ச்சொல் வளம்
2. காலக்கணிதம்
1.கற்றல் நோக்கங்கள் :
\Ø மொழியிலுள்ள வகைப்படுத்தப்பட்ட சொல்வளங்களைச் சொற்களின் வாயிலாகப் பேச்சிலும் எழுத்திலும் இடமறிந்து கையாளுதல்.
@ தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதைப் பாடல்கள்வழி உணர்ந்து சுவைத்தல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
தமிழ்ச்சொல் வளம் காணொளி
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø யாருக்கெல்லாம் கவிதை எழுதத் தெரியும்? என்ற வினாவைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
Ø அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் தாவரங்களின் உறுப்பைக் குறிக்கும் தமிழ்ச்சொற்களை கரும்பலகையில் எழுத வைத்தல்.
4.பாடச் சுருக்கம் :
Ø தமிழின் சொல்வளத்தையும்,பொருள் வளத்தையும் அறிதல்
§ அடிவகை
§ கிளைப்பிரிவு
§ இலைவகை
§ கொழுந்து வகை
§ பிஞ்சு வகை
§ மணி வகை
ü கவிஞர்கள் காலத்தை நன்றாகக் கணிக்கக் கூடியவர்கள்.
ü எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் தனது மனதில் பட்டதை கவிதையாக வடிக்கக் கூடியவர்கள்.
ü படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் இறைவனுக்கு அடுத்தபடியாகச் செய்யக்கூடியவர்கள்.
5. ஆசிரியர் செயல்பாடு :
Ø கவிதையின் நயங்களை உணர்த்துதல்
Ø தாவரங்களின் சினைப்பெயர்களைப் பற்றிக் கூறல்
Ø அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக் கூடிய சொற்களைக் கொண்டு தமிழ்ச்சொல் வளத்தைக் கூறல்
Ø தமிழ் ஆழ்ந்த சொல் வளமுடையது என்பதை உணர்த்துதல்
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 1001- தமிழ்மொழியின் செழுமை குறித்து தனித்தமிழில் ஆற்றலுடன் உரையாற்றுதல்,கவிதையைப் படித்துச் சுவைத்தல்,பொருளுணர்தல்
Ø @ 1042- தொடை நயம் அமையப் பெற்ற புதுக்கவிதையினைப் படித்தல் தத்துவமொழியாம் தமிழின் நுட்பறிந்து சுவைத்தல் அதுபோல எழுத முனைதல்
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி