10.ஆம் வகுப்பு - தமிழ்
இரண்டு மதிப்பெண்
வினா விடைகள் (வினா எண் 16 முதல் 28)
1. 'வேங்கை' என்பதைத்
தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
விடை:
ü
வேம் +
கை என்பது கையைக் குறிக்கும்
தொடர்மொழி
ü
சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும்
குறித்தது ( பொதுமொழி)
2)
விடை: சீவகசிந்தாமணி,வளையாபதி,குண்டலகேசி
3) ஒரு தாற்றில் பல சீப்பு
வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.
ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
மேற்கண்ட
தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி,எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான
காரணத்தை எழுதுக.
விடை: சரியான தொடர்கள்:
*
ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன
* ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள்
உள்ளன.
பிழை: தாற்றின் தொகுப்பு சீப்பு எனப்
பிழையாக உள்ளது.
4) உடுப்பதூஉம் உண்பதூஉம்
காணின் பிறர்மேல்
வடுக்காண்
வற்றாகும் கீழ்
– இக்குறளில்
அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன்
இலக்கணம் தருக.
விடை: இன்னிசையளபெடை – ஓசை குறையாதபோதும் இனிய
ஓசைக்காக நெடில்கள் அளபெடுப்பது.
5) தற்கால உரைநடையில் சிலேடை
அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக
விடை: காலையிலேயே
மாலையும் வந்து விட்டது.(
மாலை பொழுதையும், பூவையும் குறித்தது)
5) சந்தக் கவிதையில் வந்த
பிழைகளைத் திருத்துக:-
“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே”
விடை:
“தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காரமதை
ஊனிலே
எம்முயிர் உள்ளளவும்
– நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே
6) கீழ்க்காணும்
சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
(குவியல், குலை, மந்தை, கட்டு) கல்,
புல்,
பழம், ஆடு
விடை: கற்குவியல்,பழக்குலை,ஆட்டுமந்தை,புற்கட்டு
7) சொற்களை இணைத்துப்
புதிய சொற்களை உருவாக்குக.
(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ)
விடை: தேன்மழை,மணிமேகலை,வான்மழை,பொன்மணி ,பூவிலங்கு
8. கீழ்க்காணும்
சொற்களின் கூட்டப் பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக. சொற்கள் -ஆடு, கல், புல், பழம்
சொல் |
கூட்டப்பெயர் |
சொல் |
கூட்டப்பெயர் |
கல் |
கற்குவியல் |
புல் |
புற்கட்டு |
பழம் |
பழக்குலை |
ஆடு |
ஆட்டுமந்தை |
9. செய்யுள் அடிகளில்
இடம்பெற்றுள்ள எண்ணுப் பெயர்களைக் கண்டு, தமிழ்
எண்ணில் எழுதுக.
செய்யுள்
அடி |
எண்ணுப்பெயர் |
தமிழ் எண் |
நாற்றிசையும்
செல்லாத நாடில்லை |
நான்கு |
ச’ |
எறும்புந்தன்
கையால் எண் சாண் |
எட்டு |
அ |
ஐந்து சால்பு
ஊன்றிய தூண் |
ஐந்து |
ரு |
நாலும்
இரண்டும் சொல்லுக்கு உறுதி |
நான்கு,இரண்டு |
ச’ , உ |
ஆனை ஆயிரம்
அமரிடை வென்றமானவனுக்கு வகுப்பது பரணி |
ஆயிரம் |
க000 |
10. வினைமுற்றை
வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைக்க.
1.கலையரங்கத்தில் எனக்காகக்
காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.
விடை: கலையரங்கத்தில் எனக்காகக்
காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.
2. ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
விடை: ஊட்டமிகு உணவு உண்டவர்
நீண்ட வாழ்நாள் பெற்றார்.
3. நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்.
விடை: நேற்று என்னைச் சந்தித்தவர்
என் நண்பர்.
4.பொது அறிவு நூல்களைத்
தேடிப் படித்தார்.போட்டித் தேர்வில் வென்றார்.
விடை: பொது அறிவு நூல்களைத்
தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.
11. குறிப்புகளைக் கொண்டு
வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத் தொடர்கள் அமைக்க.
(குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்)
குறளின்பம் |
குறளின்பத்தை
அறியாதவர் உண்டோ? |
சுவைக்காத
இளநீர் |
உழவன் சுவைக்காத
இளநீர் உண்டா? |
காப்பியச்
சுவை |
சிலப்பதிகார
காப்பியச் சுவைக்கு ஈடு உண்டா? |
மனிதகுல
மேன்மை |
விருந்தோம்பல்
மனித குல மேன்மையை உயர்த்தக் கூடிய பண்பு அல்லவா? |
விடுமுறைநாள் |
சனிக்கிழமை
பள்ளிக்கு விடுமுறை நாள் அல்லவா? |
12. கலைச்சொல் அறிதல்
1. Vowel
- உயிரெழுத்து
2.
Consonant
– மெய்யெழுத்து
3.
Homograph
– ஒப்பெழுத்து
4.
Monolingual
– ஒரு
மொழி
5.
Conversation
- உரையாடல்
6. Discussion – கலந்துரையாடல்
13. தேன், நூல், பை, மலர், வா இத்தனிமொழிகளுடன்
சொற்களைச் சேர்த்துத் தொடர்மொழியாக்குக.
விடை:
ü தேன் குடி
ü நூல் படி
ü பை எடு
ü மலர் கொய்
ü வா போகலாம்
14. வினை அடியை விகுதிகளுடன்
இணைத்துத் தொழிற்பெயர்களை உருவாக்குக.
காண், சிரி, படி, தடு
விடை:
ü காண்+சி=காட்சி
ü சிரி+பு = சிரிப்பு
ü படி+தல்=படித்தல்
ü தடு+தல்=தடுத்தல்
15. தமிழ்நாட்டில்
மட்டும் விளையும் சிறுகூலங்கள் சிலவற்றை எழுதுக.
விடை: வரகு,
காடைக்கண்ணி, குதிரைவாலி முதலியசிறுகூலங்கள் தமிழ்நாட்டிலன்றி
வேறெங்கும் விளைவதில்லை.
கருத்துரையிடுக
கருத்தளித்தமைக்கு நன்றி